(ஜெம்சித் (ஏ) றகுமான்)
யகபாலனய எனும் கூட்டாற்சியை கலைக்க வேண்டும் என்ற மகிந்தவின் கணக்கு சாத்தியமாகுமா?எனும் கேள்வி அரசியல் ஆய்வாளர்களை சிந்திக்க தூண்டி இருக்கிறது.ஐ.தே.கட்சிக்கும்,சுதந்திர கட்சிக்கும் இடையே கருத்து முறண்பாடு எனும் கறையான் அரிக்க ஆரம்பித்திருக்கிறது.சுதந்திர கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகளை உற்று நோக்குகின்ற போது முழுமையான ஆட்சி அதிகாரத்தை மீண்டும் தங்கள் வசம் இழுத்து கொள்ள வேண்டும் என எத்தனித்து கொள்வதை போல் உள்ளது.2020 ஐ நோக்கிய கூட்டாற்சி பயணம் என கர்ஜித்து கொண்டிருந்த முக்கிய அமைச்சு பதவிகள் வகிக்கும் பலர் சுதந்திர கட்சி ஆட்சியமைக்கும் காலம் வெகுதூரம் இல்லை என கூறுகின்றனர்.