(போராளிகளை நினைவு கூர்வதற்கு ஒரு பொதுத் தினம் ஒன்று கண்டறியப்படவேண்டும். இதில் ஈழவிடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்பணித்து மரணித்த அனைவரும் நினைவு கூரப்படவேண்டும் என்பதே சூத்திரம் இணையத்தளத்தின் நிலைப்பாடு ஆகும். இதன் ஆசிரியர் இந்தக்கருத்தை பத்துவருடங்களுக்கு மேலாக பல தளங்களிலும் வலியுறுத்தி வருகின்றார். கருணாகரனின் இக்கட்டுரை புலிகளின் மாவீரர் தினத்தை மட்டும் பேசுவதில் தனது கவனத்தை செலுத்தியிருக்கின்றது ஒரு பன்முகப்படுதப்பட்ட தன்மை வணக்கம் செலுத்துவதிலிருந்தாவது ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை சூத்திரம் மீண்டும் வலியுறுத்துகின்றது – ஆர்)
(கருணாகரன் )
விடுதலைப்புலிகள் இல்லாத சூழலில், போர் முடிந்து ஏழு ஆண்டுகளின் பின்னர், கடந்த மாதம் 27 ஆம் திகதி நிகழ்ந்திருக்கும் மாவீரர் நாள் நிகழ்வு, அது முடிந்து ஒரு மாதம் கடந்துவிட்டபோதிலும், அந்த நிகழ்வின் அரசியல் பரிமாணம் மிகவும் விசாலமாகக் காணப்படுகின்றது. அந்த நிகழ்வையொட்டி, தமிழ் மக்களிடத்தில், குறிப்பாக மாவீரர் குடும்பங்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் உணர்நிலைகளும் அபிப்பிராயங்களும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உண்டாக்கியுள்ளது. இந்தக் கட்டுரை அவற்றைப் பற்றிய கவனத்தையே ஈர்க்கிறது.
(“ஒரு பண்பாட்டுச் சிதைவுக்கு துணைபோகக் கூடாது” தொடர்ந்து வாசிக்க…)