தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் இருப்பும் : மறைக்கப்படும் உண்மைகள்!

தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாடு கொழும்பில் நேற்று 22/11/16 அன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றவாத அரசியல் தலைமை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தைப் பிரதியிடுவதற்கு முனைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோல்வியடைந்த போது அதற்கு மாற்றாகத் தோற்றுவிக்கப்பட்டதே தமிழ் மக்கள் பேரவை. ஜேர்மனியில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள், தமது அரசியல் பினாமிகளை உருவாக்கும் நோக்கத்துடன் 2015 ஆம் ஆண்டு மாவை சேனாதிராசாவை அழைத்துப் பேச்சுக்கள் நடத்தின. அப் பேச்சுக்களின் அடிப்படையில் புலம்பெயர் அமைப்புக்கள் தாம் சுட்டுவிரலை நீட்டும் சிலரை கூட்டமைப்பின் வேட்பாளர்களாக நியமிக்குமாறு கேட்டுக்கொண்டன. அதற்கு கூட்டமைப்பு இணங்க மறுத்ததன் பின்புலத்திலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான பிரச்சாரமும் நிதித் திரட்டலும் புலம்பெயர் நாடுகளில் முடுக்கிவிடப்பட்டன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலில் படு தோல்வியடைந்ததும், மீண்டும் ஜேர்மனியில் ஒன்று கூடிய அமைப்புக்கள் தமிழ் மக்கள் பேரவையைத் தோற்றுவித்தன. இதுவே தமிழ் மக்கள் பேரவைக்கான தோற்றத்தின் அடிப்படை.

(“தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் இருப்பும் : மறைக்கப்படும் உண்மைகள்!” தொடர்ந்து வாசிக்க…)

சைப்ரஸ்: அமைதியைத் தேடி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

போரின்றி அமைதியும் அமைதியின்றிப் போரும் பொருளற்றன. அமைதியின் தேவை பெரும்பாலும் காலங்கடந்தே உணரப்படுகிறது. உணரும்போது தாமதம் மிகுந்து அமைதியின் அனைத்துக் கதவுகளும் இறுகச் சாத்திக் கிடக்கலாம். அமைதி இலகுவில் இயலுவதில்லை; அவ்வாறு இயல்வது வெகுகாலம் நிலைப்பதில்லை.  எனவேதான், கடவுளைக் கண்டாலும் அமைதியைக் காணவியலாது என்று சொல்வதுண்டு. அமைதியின் விலை மதிக்கவியலாதது. அது நிலைக்கும் போது உருவாகும் சூழலுக்கும் மகிழ்ச்சிக்கும் ஈடில்லை.

(“சைப்ரஸ்: அமைதியைத் தேடி” தொடர்ந்து வாசிக்க…)

தொழில் ஆணையாளர் கூட்டு ஒப்பந்தத்தை திருத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட நடவடிக்கை

  • மக்கள் தொழிலாளர் சங்கம் ஆணையாளருக்கு அறிவிப்பு

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா அச் சங்கத்தின் சார்பாக தொழில் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள 2016.11.18ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம், 18 மாதங்கள் கழிந்த பின்னர் 500/= அடிப்படை சம்பளம் உட்பட 730/= சம்பள உயர்வுடன் கைச்சாத்திடப்பட்ட சம்பள கூட்டு ஒப்பந்தம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நெறிமுறையான எதிர்பார்ப்பு (legitimate expectation), இயற்கை நீதி (Natural Justice) மற்றும் ஏற்கனவே நிலைபெற்ற உரிமைகள் (Acquired or existed rights) என்பற்றுக்கு எதிராக இருக்கின்றமையை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, குறித்த சம்பள கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டு சட்ட அந்தஸ்த்தினை வழங்க வேண்டாம் என அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, ஒப்பந்தத்தின் தர்ப்புகளான கம்பனிகள் சார்பான இலங்கை முதலாளிமார் சம்மேளனம், தொழிலாளர்களின் தரப்பான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட கூட்டு தொழிற்சங்கங்களின் நிலையம் என்பவற்றுக்கு அறிவித்து தொழிலாளர்களுக்கு எதிராக உள்ள சரத்துக்களை நீக்கி சட்ட பூர்வமானதும், நியாயமானதும் ஒப்புறவானதுமானதுமான சம்பள கூட்டு ஒப்பந்தத்தை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளார். அதனை இரு வார காலத்தினுள் செய்ய தவறுமிடத்து கூட்டு ஒப்பந்தத்திற்கான சட்ட பாதுகாவலனாக இருக்கும் தொழில் ஆணையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

(“தொழில் ஆணையாளர் கூட்டு ஒப்பந்தத்தை திருத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட நடவடிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 78 )

முல்லைத்தீவில் ஞானசந்திரன் பல நெருக்கடிகள் கொடுக்க நினைத்து தோல்விகளையே கண்டார்.இந்த காலங்களில் இலங்கையின் இனப்பிரச்சினைகள் தொடங்கின.பல அமைப்புகள் மறைமுகமான தொடர்புகள் கொண்டபோதும் அவரகள்மீதான நம்பிக்கைகள் அவருக்கு ஏற்படவில்லை .அவரகளின் தேவைகளை நிறைவேற்றியிருக்கிறார்.ஆரம்பகாலங்களில் சந்ததியார் தங்கதுரை மூலமாக அறிமுகமானவர்.பாலகுமார் பல்கலைக்கழகத்தில் இவரின் மாணவர்.அதேபோல பத்மநாபாவும் வேறுவகைகளில் அறிமுகமானவர்.

(“பற்குணம் A.F.C (பகுதி 78 )” தொடர்ந்து வாசிக்க…)

மாவீரர் தினம் – அழித்தவர்களே நடத்தும் அவமானகரமான களியாட்டம்

(வியாசன்)
ஈழத்தில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் எவ்வளவு தியாகங்களையும் அர்ப்பணங்களையும் எமக்கு முன்னால் விட்டுச் சென்றிருக்கிறதோ அதே அளவிற்கு தனிநபர் பயங்கரவாதம், உட் கட்சிப் படுகொலைகள், அதிகாரவர்க்க அரசியல் என்ற அனைத்தையுமே தன்னகத்தே கொண்டிருந்தது. அன்னிய அரசுகள் போராட்டத்தின் எச்ச சொச்சங்களே தெரியாத அளவிற்கு அழித்துத் துடைத்தெறிவதற்கான அடிப்படைகளே அவற்றிலிருந்து தான் ஆரம்பமானது.

(“மாவீரர் தினம் – அழித்தவர்களே நடத்தும் அவமானகரமான களியாட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.

தோழர்பத்மநாபா அன்னை இந்திராகாந்தி ஆகியோரின் பிறந்த நாளான நவம்பர் 19 அன்று புழல் முகாமில் உள்ள தமிழர் சமூக ஜனநாயகட்சியினர் அங்கு அதனை அனுஸ்டித்தனர். தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தோழர்கள் தோழர்பத்மநபா அவர்களின் குணநலன்கள்.அவர் மனிதநேயத்துடன் நடந்து கொண்டது,,அவரில் பொதிந்துள்ள மனிதநேயம், உலகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் மீது அவர் கொண்டிருந்த கரிசனை பேர்ன்றவற்றை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கியதுடன் முகாமில் உள்ளவர்களுக்கு இனிப்பும் வழங்கினர்.முகாமில் உள்ள பள்ளி மாவணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பழம்பெரும் இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா காலமானார்

பழம்பெரும் கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு கலையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

(“பழம்பெரும் இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா காலமானார்” தொடர்ந்து வாசிக்க…)

கார்த்திகை மாத நினைவு…?.

காவோலைகள் பற்றவைத்த தீயில் தம்மை ஆகுருதியாக்கிய, குருத்தோலைகள் எரிந்த எம் இன வரலாற்றின் கறுப்பு அத்தியாயம், ‘ஈழ விடுதலை போராட்டம்’. எந்தவித தயாரிப்புகளும் இன்றி, எவரின் ஆதரவும் இன்றி வெறுமனே வெற்றுக் கோசங்களும், வீராப்பு பேச்சுகளும் மட்டும் எம் இனத்துக்கு விடுதலையை பெற்றுத்தந்துவிடும் என்பதுபோல செயற்பட்ட, மூத்தோர் மூட்டிய தீயால் கருகிப்போன இளையவர் நினைவு கூரல் மாதம் கார்த்திகை மாதம்.

(“கார்த்திகை மாத நினைவு…?.” தொடர்ந்து வாசிக்க…)

Rothschild & Russian Revolution

Karl Marx’s effort to derive the market price of goods from their value, the labor that went into them, was a vestige of the 19th-century economic theories of David Ricardo and John Stuart Mill. By the time Marx died, economists had already given up trying to relate price to value and were beginning to understand that value was a chimera. With the growing dominance of technology, it had become impossible to locate value in the time required to produce goods, as Marx, following Ricardo and Mill, had tried to do. Machines can make products incredibly fast; but these products aren’t worth any less than if workers had spent days toiling at them, as Marx’s theory suggests. Marx’s essential idea, influenced by Ricardo, was that capitalism would become less and less profitable and that its downward spiral toward the abyss of deflation—lower prices, lower profits—would be followed by worldwide revolution. Instead, capitalism has become vastly more profitable.

(“Rothschild & Russian Revolution” தொடர்ந்து வாசிக்க…)

கால வெள்ளம் சுழித்து சென்று விட்டது. நினைவுகள் அழிவதில்லை தோழர் நாபா 65 வது பிறந்த நாள்

எந்த அறங்கள்- தார்மீக விழுமியங்கள் பிரதானமாக மானிட விடியலுக்குத் தேவையோ -அவசியமோ அதில் தோழர் நாபா உறுதியாகவும் தெளிவாகவும் நின்றிருந்தார். சமூகத்தின் எந்த பிரிவினர் மிகவும் பாதிக்கப்பட்டவர்களோ- சுரண்டப்படுபவர்களோ- ஒடுக்கப்படுபவர்களோ அவர்களுடன் அவர் தன்னை அடையாளப்படுத்தினார். எந்தப்பிரிவினர் ஒடுக்கப்படுபவர்களுக்காக போராடினார்களோ குரல் கொடுத்தார்களோ அவர்களுடன் அவர் தோழமை கொண்டார்.

(“கால வெள்ளம் சுழித்து சென்று விட்டது. நினைவுகள் அழிவதில்லை தோழர் நாபா 65 வது பிறந்த நாள்” தொடர்ந்து வாசிக்க…)