பற்குணம் A.F.C (பகுதி 74 )

பற்குணம் தனது நிர்வாகத்தில் மற்றவர்களை நம்பினாலும் தனது கவனத்தை திசை திரும்பவிடுவதில்லை.அடிக்கடி தனது அலுவலக கணக்குகளையும் தானே பார்ப்பார்.இவ்வாறு ஒரு நாள் மன்னாரில் தனது அலுவலக கணக்குகளை மீளாய்வு செய்தபோது 50000 ரூபா அவரின் பெயரால் எடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்தார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 74 )” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்கத் தேர்தலில் வெல்லப் போவது யார்…..?

கடந்த வெள்ளிக் கிழமை Time FM வானொலியில் ‘வெட்ட வெளிச்சம்’ கலந்துரையாடலில் வழமை போல் நானும் கலந்து கொண்டேன். தலைப்பு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் யார் வெல்வார்கள் இவர்ளின் வெற்றியில் எமக்கு ஏற்படும் நன்மை தீமை பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது எனது ஆதரவு பசுமைக்கட்சிக்கு என்றும் ஆனால் கிலாரி அல்லது ரம்ஸ் இருவரில் ஒருவரே வெல்லக் கூடிய வாய்புக்கள் இருப்பதினால் எனது வெற்றிக்கான எதிர்வு கூறல் கிலாரி கிளிங்ரன் பக்கமே நின்றது. மற்ற மூவரும் ரம்ஸ் பக்கமே நின்றனர் கூடவே ரம்ஸ் இன் வெற்றி கிலாரியின் வெற்றியை விட நன்மை பயக்குமாக அமையும் என்றும் வாதிட்டனர்.

(“அமெரிக்கத் தேர்தலில் வெல்லப் போவது யார்…..?” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணத்தில் கோலிப் பண்டிகை! தேசியவாதிகள் எங்கே?

இந்திய மேலாதிக்க அதிகாரத்தினதும், அமெரிக்க ஏகாதிபத்திய அணியினதும் அடிமை நாடாக முழுமையான மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கையில், மக்கள் மத்தியில் கலாசார ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஏற்கனவே நுகர்வுக் கலாசார வெறி போருக்குப் பின்னான சூழலில் மக்களை ஆக்கிரமித்துக்கொள்ள, இந்திய அரசு தனது கலாச்சார ஆக்கிரமிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

(“யாழ்ப்பாணத்தில் கோலிப் பண்டிகை! தேசியவாதிகள் எங்கே?” தொடர்ந்து வாசிக்க…)

ஈழம் மாமி கிலாரிக்காக தேங்காய் உடைக்க அனைவரும் வருக – தேங்காய் சிவாஜிலிங்கம்

(விஜயகுமாரன்)
உலக வரலாற்றில் முதன் முதலாக அணுகுண்டு வீசி மக்களைக் கொன்ற கொலைகாரர்கள் அமெரிக்க அரச பயங்கரவாதிகள். ஜப்பான் நாட்டு மக்களின் மீது அணுகுண்டு வீசி இலட்சக்கணக்கான மக்களைக் அமெரிக்க கொலைகாரர்கள் கொன்றார்கள். முதலில் 06.08.1945 அன்று கிரோசிமா நகரின் மீதும் மூன்று நாட்களின் பின்பு நாகசாகி நகரின் மீதும் அணுகுண்டு வீசினார்கள்.

(“ஈழம் மாமி கிலாரிக்காக தேங்காய் உடைக்க அனைவரும் வருக – தேங்காய் சிவாஜிலிங்கம்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C ( பகுதி 73 )

மன்னாரில் பற்குணத்தின் அலுவலகத்தில் ஒரு இளைஞர் வேலை செய்தார்.மிக சுறுசுறுப்பானவர்.இதன் காரணமாக பற்குணம் கொஞ்சம் அவர்மீது அக்கறை கொண்டிருந்தார்.ஆனால் அவர் கொஞ்சம் குடிப்பழக்கம் உள்ளவர்.எனக்கும் அவர் நல்ல அறிமுகம்.நான் மன்னார் செல்லும்போது அவருடனேயே உணவருந்த செல்வேன்.

(“பற்குணம் A.F.C ( பகுதி 73 )” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின் போராட்டம்” தளர்வை நோக்கிச் சரிந்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த வாரம் கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் வைத்துப் பொலிசாரினால் கொல்லப்பட்ட மாணவர்கள் கஜன், சுலக்ஸன் ஆகியோரின் மரணத்துக்கு நீதியான தீர்வு கிட்டும்வரை பல்கலைக்கழக இயக்கத்தை தவிர்ப்பது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் விடுத்திருந்தனர். இந்த அறிவிப்பு பகிரங்க வெளியில் வந்தபோது பல்கலைக்கழக நிர்வாகமோ, மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளோ மாற்று அபிப்பிராயங்களையும் மறுப்புகளையும் தெரிவித்திருக்கவில்லை. ஆகவே, “நீதி கிடைக்கும்வரை இயங்கா மறுப்பு நடவடிக்கை“ அநேகமாக வெற்றியடையும் என்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கேற்ற மாதிரி, பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் அமையவில்லை.

(“யாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

எல்லா கம்யூனிஸ்டுகளும் யூதர்களின் சேவகர்கள் அல்ல. ஆனால் யூதர்கள் இன்றி கம்யூனிசம் என்ற ஒன்றே அமைந்திருக்காது.

நாம் த‌மிழ‌ர் அல்ல‌து “நாம் நாஸிக‌ள்” க‌ட்சியின‌ரின் க‌ம்யூனிச‌ வெறுப்புப் பிர‌ச்சார‌ம்.‌ இது ஏற்க‌ன‌வே நாஸிக‌ளால் புனைய‌ப் ப‌ட்ட‌ பொய்ப் பிர‌சார‌ம். ப‌ல‌ த‌க‌வ‌ல்க‌ள் விஷ‌ம‌த்த‌ன‌மாக‌ திரிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌.

(“எல்லா கம்யூனிஸ்டுகளும் யூதர்களின் சேவகர்கள் அல்ல. ஆனால் யூதர்கள் இன்றி கம்யூனிசம் என்ற ஒன்றே அமைந்திருக்காது.” தொடர்ந்து வாசிக்க…)

‘முகப்புத்தக’ மாவீரர் மாதம்!

கார்த்திகை பிறந்தால் போதும். முகப்புத்தக மாவீரர்களின் துன்பம் தாங்க முடியாது.

மே மாதம் என்றவுடன் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு நடத்தும் அதே கூத்து, கார்த்திகையில் திரும்பவும் தொடரும். முள்ளிவாய்க்கால் தினத்திற்கு, இணையத்தில் அகப்பட்ட, கண் கொண்டு பார்க்க முடியாத படங்களைப் போட்டு சர்வதேசத்திடம் நீதி கேட்டு தமிழுணர்வாளர்கள் போராட்டம் நடத்துவார்கள். தமிழில் இருக்கும் இவர்களின் முகப்புத்தகப் பதிவுகளைப் பார்த்து சர்வதேசம் இன அழிப்பு விசாரணை நடத்தும் என்பதில் இவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. மறுபுறத்தில் இன அழிப்பா, இனப்படுகொலையா என்று தங்களுக்குள்ளேயே குடுமிப் பிடிச் சண்டையும் நடத்துவார்கள்.

(“‘முகப்புத்தக’ மாவீரர் மாதம்!” தொடர்ந்து வாசிக்க…)

மனத்தைத் தொட்ட பதில் இது!

ஆயுதங்கள் மௌனமாக்கப்பட்ட பின்பு தமிழகத்திற்கு, “தமிழர் பிரதேசமும் தமிழர்கள் போராட்டமும்” கலை இலக்கியம் என்ற பெயரில் நல்ல சந்தையானது என்பது மிகவும் உண்மை. 2009ல் போர் முடிவுக்கு வர 2010ம் ஆண்டு சென்னைப்புத்தக விழாவிற்கு விற்ற புத்தகங்களில் அதிகளவு ஈழப்பிரச்சனைகள் பற்றியும் மாவீரர்கள் பற்றியதும். அதற்கு அடுத்ததாக கலைஞர்களின் படையெடுப்புகள்.

(“மனத்தைத் தொட்ட பதில் இது!” தொடர்ந்து வாசிக்க…)

தேசியத் தலைவரும் செந்திலின் வாழைப்பழமும்

எந்த யுத்தம் முடிந்தாலும், வெற்றி பெற்றவர்கள் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தி தங்கள் வீரத்தை மெச்சி பெருமை கொண்டு களிகூர்வது வழமையானது. கைப்பற்றிய ஆயுதங்கள் முதல் எதிரிகளின் உடல்கள் வரைக்கும் கண்காட்சிக்கு வைத்துப் பெருமை கொண்டாடியதெல்லாம் நாங்கள் கண்ணால் கண்டவையே!

(“தேசியத் தலைவரும் செந்திலின் வாழைப்பழமும்” தொடர்ந்து வாசிக்க…)