இந்த அரசியல் கலாச்சாரம் செழித்து வளரட்டும்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நல நிலவரத்தை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேரில் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்து வந்திருப்பது தமிழக அரசியல் சூழலில் வரவேற்க வேண்டிய அரசியல் கலாச்சாரம் ஆகும்.

(“இந்த அரசியல் கலாச்சாரம் செழித்து வளரட்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசைநிகழ்ச்சி

யாழ்ப்பாணத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசைநிகழ்ச்சி நடைபெறுவது புலிப்பினாமிகளுக்கும் அவர்களோடு சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கும் வேப்பங்காயாக கசக்கிறது. வடகிழக்கில் அமைதி இல்லை, சுமூகமான சூழல் இல்லை. தமிழர்களுக்குச் சுதந்திரம் இல்லை.தமிழர்களை இலங்கை அரசு சித்திரவதை செய்கிறது என்றேல்லாம் பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய பாடகர் ஒருவரின் இசை நிகழ்ச்சி வடக்கில் அதுவும் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவது இவர்களின் பிரச்சாரத்தைப் பொய்யாக்குகிறது.

(“யாழ்ப்பாணத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசைநிகழ்ச்சி” தொடர்ந்து வாசிக்க…)

நிலாந்தனின் கட்டுரையும் சில சாதாரண வாதங்களும்

(Kiri Shanth with Arun Ambalavanar.)

முடிவு ஒன்று – தமிழ்த் தலைவர்களுள் மிகச் சிலரே புவிசார் அரசியல் தொடர்பில் சரியான தரிசனங்களோடு இருக்கிறார்கள். அல்லது புவிசார் அரசியலைக் குறித்து ஒரு பொது மேடையில் உரையாற்றக் கூடிய ஆழத்தோடு இருக்கிறார்கள்.

(“நிலாந்தனின் கட்டுரையும் சில சாதாரண வாதங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

பிலிபைன்ஸ் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்ட கனடியத் தமிழர் சுட்டுக்கொலை!

(த ஜெயபாலன்)
பிலிபைன்ஸில் சுட்டுக்கொல்லப்பட்ட நிரஞ்சன் சச்சிதானந்தனந்தம் (39) என்பவரின் மரணக் கிரியைகள் நேற்று ஒக்ரோபர் 9, 2016 கனடா வன்கூவர் மாநிலத்தில் நடைபெற்றது. போதைவஸ்துக் கடத்தலில் ஈடுபட்ட மக்ஸ் என்றழைக்கப்படும் நிரஞ்சன் சச்சிதானந்தம் செப்ரம்பர் 14, 2016இல் பிலிப்பைன்ஸில் லா யுனியன் என்ற பகுதியில் உள்ள சன் யூஆன், பரங்கே ரபொக் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

(“பிலிபைன்ஸ் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்ட கனடியத் தமிழர் சுட்டுக்கொலை!” தொடர்ந்து வாசிக்க…)

மறைத்தலின் அழகும் ‘நிகாப்’ தடையும்

(மொஹமட் பாதுஷா)

ஒருமுறை பிரித்தானிய ஆய்வாளர் ஒருவர், முஸ்லிம் முற்போக்குவாதி ஒருவரைப் பார்த்துக் கேட்டார், “நீங்கள் ஏன், உங்களது பெண்களின் முகத்தையும் உடற்பகுதியையும், முற்றாக மறைக்கின்றீர்கள்? ஏன் அவர்களுடன் கைகுலுக்கிக் கொள்வதற்கோ கதைப்பதற்கோ ஏனைய ஆண்களுக்கு இடமளிப்பதில்லை?” என்று. அதற்கு பதிலளித்த அந்த முஸ்லிம் நபர், “நீங்கள் உங்களது பிரித்தானிய மகாராணியை நினைத்த மாத்திரத்தில் பார்க்க முடியுமா? முடிக்குரிய இளவரசியுடன் கைகுலுக்குவதற்கான அனுமதி உங்களுக்கு கிடைக்குமா?’ என்று கேட்டார். அதற்கு அந்த பிரித்தானியர், “இல்லை அதற்கான வாய்ப்பே இல்லை” என்றார். “ஏன் அதற்கென்ன காரணம்?” என்றார் முஸ்லிம் நபர். “அவர்கள் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்களைக் காண்பது அரிதான வாய்ப்பாகும். அப்படிக் காணக்கிடைத்தாலும் அவர்கள், கையுறை போட்டுக் கொண்டே கைகுலுக்குவார்கள்” என்றார். அதற்குப் பதிலளித்த முஸ்லிம் நபர் சொன்னார், “நாங்களும் எங்களது வீட்டிலுள்ள பெண்களை, மகாராணியாகவும் இளவரசியாகவுமே பார்க்கின்றோம். அதனாலேயே, பிற ஆண்கள், அவர்களை முகத்துக்கு முகம் சந்திப்பதற்கான, கைகலுக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை” என்றார்.

(“மறைத்தலின் அழகும் ‘நிகாப்’ தடையும்” தொடர்ந்து வாசிக்க…)

மலையக மக்களின் போராட்டத்துடன் நாமும் இணைவோம்

(கிருஷாந் உடன் சாகரன்)

மனித உரிமை மீறல்களால் அதிகம் பாதிக்கப்பட்டு, நீதிக்காக ஏங்கும் நாம், சக மனிதர்களின் வாழ்வுரிமைகள் அழிக்கப்படும்போது கட்டாயமாக குரல்கொடுக்க வேண்டும். மலையக மக்கள் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து அறுபது வருடங்கள் கடந்தும் அந்த மக்கள் அடிமை நிலையிலிருந்து விடுதலை பெறவில்லை. பொருட்களின் விலைகள் மின்னல் வேகத்தில் ஏறினாலும் அம்மக்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் அளவு கூட்டப்படவில்லை.மிக மோசமான உழைப்பு சுரண்டலை எதிர்கொள்கின்றனர். எத்தனையோ மனித உரிமைகள் அமைப்புக்கள், தொழிலாளர் அமைப்புக்கள் இருந்தும் இந்த விடயம் குறித்து கவனம் எடுக்கவில்லை.

(“மலையக மக்களின் போராட்டத்துடன் நாமும் இணைவோம்” தொடர்ந்து வாசிக்க…)

மீண்டும் எழுந்து வாரீரோ…..?.

ஆண்டு 1993. ஜனவரி 15 தேதியிடப்பட்ட கடிதம் யாழ்ப்பாணத்தில் எங்களிற்கு கிடைத்தது மார்ச் 12. கொழும்பில் இருந்து மைத்துனன் அனுப்பியது. அதன்பிற்பாடே எங்களிற்கு தெரியும் 29 டிசம்பர் 1992 இல் நெல்லியடியில் இருந்து புறப்பட்ட மாமா கொழும்பைச் சென்றடையவில்லை என்பது.யாழ்ப்பாணம் பிரேமதாசாவின் கிடுக்குப்பிடியில் இருந்தது அந்நேரத்தில்.

(“மீண்டும் எழுந்து வாரீரோ…..?.” தொடர்ந்து வாசிக்க…)

இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 2)

(சிவகாமி)

வாழ்வின் பின்னோக்கிய பயணமிது

சிவகாமி தனக்கான தன் பெயரை இயக்கத்தில் மாற்றி வேறு ஓர் அடையாளப் பெயருடன் செயலாற்றத் தொடங்கினாள். அங்கு போன பின்பு தன்னை சிவகாமி நிறைய கற்றலுக்குட்படுத்தினாள். தேடலுக்குட்படுத்தினாள். ஆனால் என்னவோ அவளின் சித்தத்தில் தர்மமும் நீதியும் இருந்தது. அப்போது தான் அவளுக்கு வழிகாட்ட சுதாக்கா ,மனோமாஸ்டரின்  பேச்சுக்கள் புரிந்தது. பிடித்தும் போய் விட்டது. அவர்களை அவள் நேசித்தது மட்டுமல்ல மதித்து நடந்து அவர்களின் உரைகளைக் கவனித்து தன்னைச் செதுக்கினாள்.பல தேடல்களை தானே தேடினாள்.ஆனால் விடை எதிர்பார்த்தபடி அமையாவிட்டாலும் கூட  உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காத எண்ணத்தை மட்டும் அவள் சித்தத்தில் பதிய விட்டிருந்தாள்.

(“இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 2)” தொடர்ந்து வாசிக்க…)

சமாதானத்துக்கான நொபல் பரிசு: இம்முறை யாருக்கு?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பரிசுகள் தருகிற சுவையை விட அது யாருக்குக் கிடைக்கும் என எதிர்வு கூர்வதில் சுவை அதிகம். பரிசுகள் ஏன் வழங்கப்படுகின்றன என்ற கேள்வி ஒருபுறம் பதில்களைத் தேடியபடி இருக்கையில், மறுபுறம் அது யாருக்கு வழங்கப்படுகின்றன என்பதைத் பொறுத்து பரிசின் நோக்கமும் போக்கும் விளங்கப்படுகின்றன. அங்கீகாரத்துக்கான ஆவல் பரிசுகளின் பெறுமதியை உயர்த்துகின்றன. இது உள்ளுரில் வழங்கப்படும் பரிசுகள் தொட்டு உலகளாவிய பரிசுகள் வரை அனைத்துக்கும் பொருந்தும். இதனாலேயே பரிசுகள் யாருக்குக் கிடைத்தன என்பதை விட யாருக்குக் கிடைக்கும் என்பதை அறியும் ஆவல் மிகுகிறது.

(“சமாதானத்துக்கான நொபல் பரிசு: இம்முறை யாருக்கு?” தொடர்ந்து வாசிக்க…)

உலகம் அறிந்திராத வியக்கத் தக்க சோவியத் சாதனைகள்

சோவியத் யூனியன் ஸ்தாபிக்கப் பட்ட பின்னர், உலகில் வேறெந்த நாட்டிலும் வாழும் மக்கள் அறிந்திருக்காத வசதி வாய்ப்புகள், சோவியத் பிரஜைகளுக்கு வழங்கப் பட்டன. மேற்கத்திய நாடுகளில் கூட, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தான் அவை நடைமுறைக்கு வந்தன. அந்த வகையில், இன்றைக்கு மேற்குலகில் வாழும் மக்கள் அனுபவிக்கும் சலுகைகளை, சோவியத் யூனியன் தான் முதன் முதலாக அறிமுகப் படுத்தியது.

(“உலகம் அறிந்திராத வியக்கத் தக்க சோவியத் சாதனைகள்” தொடர்ந்து வாசிக்க…)