ஒரு வாய் கஞ்சி ! (பகுதி 2)

நானும் ஸ்ரீயும் பம்பலபிட்டியில் இருந்து ஓடி வரும்போது அங்காங்கே எரிந்துகொண்டிருக்கும் கடைகளும் வீடுகளும் என எல்லாம் ஒரு படம் போல வந்து போய்க்கொண்டு இருந்தது. அந்த முஸ்லீம் பெரியவர் அந்த வீட்டில் தலைமை அதிகாரி போல இருந்தார்.தனதும் தன் குடும்பத்தின் இறப்புக்கு பின்பே உங்களை யாரும் அணுக முடியும் என சொன்னார். தங்கள் மூதாதையர் ஆப்கானிஸ்தானில் இருந்து வியாபாரத்துக்காக வந்ததாகவும் சொன்னார். தமிழ், சிஙகளம் இரண்டு மொழிகளிலும் சரளமாக பேசினார். வெளியே சத்தமும் கூக்குரல்களும் அதிகரித்துக்கொண்டு இருந்தது. கனரக வாகனங்களின் சத்தங்களும் அதிகரிக்க தொடங்கியது. நாம் பயத்துடன் இருந்தோம். அந்த முஸ்லீம் பெரியவர் ஒரு ரேடியோ ஒன்றினை கொண்டுவந்து தந்து அமைதியாக வைத்து கேட்கும் படி கேட்டுக்கொண்டார் .

(“ஒரு வாய் கஞ்சி ! (பகுதி 2)” தொடர்ந்து வாசிக்க…)

பெரியார் பற்றி இன்னொரு பார்வை

என் தமிழ்சமூகம் பின்தங்கி கிடப்பதற்கு சாதி ஏற்றதாழ்வும் மத மூட நம்பிக்கைகளும் ஒரு காரணம் என்பதால் அதை எதிர்த்து களமாடிக் கொண்டிருந்த பெரியார் என் மனதில் ஒரு இடத்தைப் பிடித்திருந்தார். அதனால், பெரியாரை கொண்டாடிக் கொண்டிருந்தேன்.

(“பெரியார் பற்றி இன்னொரு பார்வை” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு வாய் கஞ்சி !

35 வருடங்களின் முன் இலங்கையின் தலை நகர் கொழும்பில் என் உயிரை ஓலிம்பிக் பந்தமொன்றின் சுடரிணை கையில் எந்தி ஓடும் ஒரு ஓட்ட வீரனை போல கையில் ஏந்தி ஓடிக்கொண்டிருந்தேன். இதனை இன்று ஜூலை 25 2018 சரியாக 35 வருடங்களின் பின் மதியம் 1 மணியளவில் எழுத தொடங்குகிறேன்,

(“ஒரு வாய் கஞ்சி !” தொடர்ந்து வாசிக்க…)

தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?

(சாகரன்)

2009 ம் ஆண்டு புலிகள் தோற்கடிக்கப்பட்டதும் இதனைத் தொடர்ந்த தேர்தலுக்கான ஜனநாயக நிலமையும் புலிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகாரம் இல்லாதது என்று நிராகரித்து வந்த மகாண சபைத் தேர்தலில் பங்குபற்றும் சூழலை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே கிழக்கில் நடைபெற்ற மகாண சபைத் தேர்தலைப் புறக்கணித்து (சந்திரகாந்தன்)பிள்ளையானை முதல் அமைச்சர் ஆக்க வழி ஏற்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகாரம் என்ற ஆசையினால் வடக்கில் வாய்பை விடக் கூடாது என்று கங்கணம்கட்டி புறப்பட்டது, வட மகாண சபைத் தேர்தலைச் சந்திக்க.

(“தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?” தொடர்ந்து வாசிக்க…)

கறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்?

(புருஜோத்தமன் தங்கமயில்)
“….(கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது), தாக்குதல் நடத்த வந்த குண்டர்களிடமிருந்து, அயலிலுள்ள பௌத்த பிக்கு ஒருவரால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். இதே மாதிரியாக, சிங்கள நண்பர்களால் காப்பாற்றப்பட்ட தமிழ் மக்களின் கதைகளைக் கேட்கும் போது, இந்த நாட்டின் கட்டமைப்புக்குள் சக பிரஜைகளாக (நாங்கள்), பாதுகாப்பாக இருக்க முடியாது என்பது, மீண்டும் மீண்டும் ஞாபகத்துக்கு வருகிறது. பதிலாக, தமிழர்களாகிய நாங்கள், மற்றவர்களின் தயாள குணத்தில் தங்கியிருக்க வேண்டியிருக்கின்றது. இது, ஒரு நாடு தன்னுடைய பிரஜைகளின் மீது செலுத்தும் மிகப்பெரிய அவமானமாகும்…” இவ்வாறு, கறுப்பு ஜூலை வன்முறைகளுக்குள் அகப்பட்டுத் தப்பிய எம்.ஏ.சுமந்திரன் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்கிறார்.

(“கறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்?” தொடர்ந்து வாசிக்க…)

ஒன்றுபட்டால்த்தான் உண்டு வாழ்வு

(க. அகரன்)

ஓன்றுபட்டால் உண்டு வாழ்வென்பது முதுமொழியாக இருந்தாலும் கூட, இதன் செயல் வடிவம் என்பது, எந்தவகையில் சாத்தியமாகி உள்ளது என்பது கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது. அன்றாட வாழ்விலும் சரி, அரசியல் சூழலிலும் சரி, ஒன்றுமையின் தேவைகள் பலமாகவே சுட்டிக்காட்டப்பட்டு வந்தாலும் கூட, அதைச் சாத்தியமான வகையில் செயற்படுத்துவதற்கு, களம் அமைந்துள்ளதா என்பது சிந்திக்கப்படவேண்டிய விடயமே.

(“ஒன்றுபட்டால்த்தான் உண்டு வாழ்வு” தொடர்ந்து வாசிக்க…)

சேகுவேராவின் இலங்கை வருகை

1959 ஜனவரி 1 கியூபப் புரட்சியின் பின்னர் புரட்சி நாயகர்களின் ஒருவரான சேகுவேரா கியூபாவின் தேசிய வங்கியின் தலைவராகவும் தொழிற்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். புதிய கியூபாவுடன் சர்வதேச நாடுகளின் ராஜதந்திர உறவுகளை பலப்படுத்தும் முகமாக ஃபிடல் காஸ்ட்ரோவால் கியூபாவின் சர்வதேச பிரதிநிதியாகவும் சேகுவேராவே நியமிக்கப்பட்டு இருந்தார்.

(“சேகுவேராவின் இலங்கை வருகை” தொடர்ந்து வாசிக்க…)

ஆடி 1983 இனக்கலவரமும்,தமிழ் இளைஞர்களின் எழுச்சியும்,வீழ்சியும்

(அருளம்பலம்.விஜயன்)
இலங்கையின் இனக்கலவரங்களானது இலங்கை சுதந்திரமடைய முன்னரும் ,பின்னரும் பல கட்டங்களாக நடைபெற்றுள்ளது.உலகத்தையே திரும்பி பார்க்க வைத்ததும்,மிகவும் மோசமாக சிங்கள இனவெறியர்களின் கொடூரங்கள் சிறைக்குள்ளேயும்,வெளியேயும் அரங்கேறிய இனக்கலவரம் என்றால் அது 1983 இல் நடைபெற்ற இனக்கலவரத்தையே சொல்ல முடியும்.
அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட இனக்கலவரம் 1915 இல் சிங்கள,முஸ்லீம் மக்களிடையே நடைபெற்றது.

(“ஆடி 1983 இனக்கலவரமும்,தமிழ் இளைஞர்களின் எழுச்சியும்,வீழ்சியும்” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த….! (Part 4)

யாழ்ப்பாணப் பயணத்திற்கான தயாரிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எனது குடும்பத்துடன் எமது நட்புக் குடும்பம் ஒன்றின் பிரதான ‘புரோக்கிராமிற்குள்’ இணைக்கப்பட்டதே எனது பயண அனுபவங்கள். எனக்கான தனியான பயண விடயங்கள் இதில் உள்ளடக்கப்படக் கூடிய வாய்புகள் எனக்கு அதிகம் இருக்கவில்லை. ஆனாலும் மற்றயவர்களின் பயணச் செயற்பாட்டிற்குள் என்னை இணைத்துக் கொண்டு பல அனுபவங்களைப் பெற்றேன். அவற்றை பதிவு செய்ய விளைகின்றேன்.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த….! (Part 4)” தொடர்ந்து வாசிக்க…)

“என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்”

1983 ஜூலை இனக்கலவரத்தின் பின்னர்
‘அருண் – செல்லப்பா” தம்பதிகள் தாயகம் திரும்புகின்றனர்.

கர்த்தரும் முருகரும் கைவிட்ட காலமது!
மனிதருள் மாணிக்கம் சிங்களத்தினுள்ளும் உள்ளதென்று நிறுவிய காலமும் அதுவே!

(““என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்”” தொடர்ந்து வாசிக்க…)