தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?(Part 3)

(சாகரன்)

1990 களில் இணைந்த மகாண அரசை இல்லாமல் செய்ய பிரேமதாசா கையில் எடுத்த இருவர் பிரபாகரனும் தேவானந்தாவும் ஆவர். முதலாமவரை ஆயுத ரீதியிலும் மற்றயவரை அரசியல் ரீதியிலும் தன் எண்ணத்தை நிறைவேற்ற பாவிக்க முனைந்தார் பிரேமதாச. இதற்காக அவரகளுக்கு சன்மானங்களும் வழங்கினார். புலிகளின் அவசர முடிவு பிரேமதாசாவை கொன்று புதைக்க, சந்திரிகா மகிந்தா என அரசியல் களங்கள் மாற மத்திய அரசுடன் இணக்க அரசிலை நம்பி ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்று புறப்பட்டு வடபகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் செய்ய முடியாத அபிவிருத்தியை செய்துகாட்டினார் தேவானந்தா. தன் வழி தனி வழி அது ஒருவனின் வழி என்று புறப்பட்ட தேவானந்தா தமிழர் அமைப்புக்களிடையே ஐக்கிய முன்னணி பற்றி அதிகம் அக்கறை காட்டாமல் செயற்பட்டார். இடையிடையே தேவையிற்கு ஏற்ப ஐக்கியத்திற்காகவும் அறிக்யை விட்டு சிலருக்கு ஆசனமும் கொடுத்து தனது ஆசனத்தை தொடர்ச்சியாக பேணுவதற்கான வாய்புக்களை உறுதிபடுத்திக் கொண்ட அரசியல் சாணக்கியர் இவர்.

(“தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?(Part 3)” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த………(அறிமுகம்…).

(திரு சிவா ஈஸ்வரமூர்த்தியினால் எழுதப்பட்டு பதிவிடப்படும் தொடரின் ஆரம்ப அத்தியாயங்கள் சில விடுபட்ட நிலையில் அவற்றை வெளியிடுகின்றேன் – ஆர்)

2009 ம் ஆண்டு மே மாதம் 18 ம் திகதிக்கு பின்னர் நான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முதன்மையான இருந்த காரணம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 1986 இலிருந்து 30 வருடங்களாக நான் எனது தாயக மண்ணில் முழுமையாக சுதந்திரமாக வாழ்வதற்கும், சுற்றிப்பார்ப்பதற்கும், வாய்ப்புக்கள் எற்படவில்லை. யுத்தத்தின் முடிவு நான் புலம் பெயர்ந்ததற்கான காரணத்தை இல்லாமல் செய்திருந்தாலும் வாழ்வில் ஏற்பட்ட புதிய உறவுகள் உடனடி மீள் குடியேற்றத்திற்கு வாய்ப்புக்களை எற்படுத்தவில்லை. ஆனாலும் 2009 ம் ஆண்டு யுத்தம் முடிந்த உடன் நான் பிறந்த மண்ணுக்கு முழுமையாக திரும்பி விடுவது என்பது என் சிந்னையில் முடிவாக எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் 30 வருட காலச் சுழற்சியில் எனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களும் இதனை ஒட்டிய கடமைகளும், பொறுப்புக்களும் எல்லாவற்றையும் உடனடியாக பொத்தென்று போட்டுவிட்டுச் செல்ல முடியாமல் தடை போட்டுக் கொண்டே வந்தன.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த………(அறிமுகம்…).” தொடர்ந்து வாசிக்க…)

தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?(Part 2)

(சாகரன்)

2009 இற்கு பின்னராக உருவான தேர்தல் ஜனநாய சூழலை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருக்கும் முன்னாள் போராளிகள் அமைப்புக்களின் கட்சிகளும் இன்ன பிற மக்கள் நலன் சார்ந்த சக்திளும் பாரம்பரிய அப்புக்காத்து அரசியலிடம் இருந்து தமக்கு கைமாற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியே இருந்த சுகு சிறீதரன் போன்றவர்கள் தலமை தாங்கும் ஈபிஆர்எல்எவ் இருந்து பிரிந்து சென்று தற்போது தமிழர் சமூக ஜனநாயக் கட்சி போன்று பரிணாமம் அடைந்த கட்சிகளுடன்  இணைத்துக்கொண்டு ஒரு பலமான மக்கள் நலன் சார்ந்த ஜனநாயக பூர்வமான ஐக்கியத்தை ஏற்படுத்தி செயற்பட்டிருக்க வேண்டும். இதற்கான பாரிய தார்மீகப் பொறுப்பு இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பேச்சாளராக செயற்பட்ட ஈபிஆர்எல்எவ் இன் சுரேஷ் பிரேமசந்திரனுக்கு நிறையவே வாய்புகள் இருந்தன. விடுதலைப் போராட்ட அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும் பத்மநாபாவின் கொலையிற்கு பின்பு பிளவுபடாத ஈபிஆர்எலஎவ் இன் செயலாளராகவும் ஏன் இதன் பின்பு புலிகளால் உருவாகப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிரபாகரனின் நம்பிக்கைகு பாத்திரமாக இருந்த சுரேஷ் இற்கு கிடைகப் பெற்ற வாய்பை விட வேறு யாருக்கும் இந்த வாய்பு இருந்ததாக அறிய முடியவில்லை. (“தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?(Part 2)” தொடர்ந்து வாசிக்க…)

தவறிய தாளம் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

(கருணாகரன்)

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இணைந்திருந்தபோது சம்மந்தன், மாவை சேனாதிராஜாவுக்கு நிகரான அரசியற் பங்களிப்பைக் கொண்டவராக இருந்தார் சுரேஸ். உண்மையில் மாவையையும் விட ஆற்றலும் அறிதிறனும் உள்ளவராகச் சுரேஸே இருந்தார். இது கூட்டமைப்பின் பேச்சாளராக சுரேஸ் அந்தக் காலத்தில் செயற்படுவதற்குக் காரணமாக இருந்தது.

(“தவறிய தாளம் – சுரேஸ் பிரேமச்சந்திரன்” தொடர்ந்து வாசிக்க…)

உலகக் கிண்ணம் 2018

(ச. விமல்)

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் நிறைவடைந்துள்ளது. பிரான்ஸ் அணி சம்பியனாக இரண்டாவது முறையாக மகுடம் சூடிக்கொண்டது. சரியாக 20 ஆண்டுகளில் பிரான்ஸ் அணி இரண்டாவது தடவையாக கிண்ணத்தை கைப்பற்றிக்கொண்டது. மறுபுறத்தில் அதே 1998 ஆம் ஆண்டு மிக அபாரமான அறிமுகத்தை மேற்கொண்டு அரையிறுதிப் போட்டியில் தோல்விடையடைந்த குரேஷியா இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்திருந்தது. இம்முறை பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்து கிண்ணத்தை இழந்துள்ளது. வரலாறு அப்படியே ஒரு முன்னேற்றத்துடன் அதே முடிவை வழங்கியுள்ளது. வரலாறுகள் பொய்ப்பதில்லை எனக்கூறுவது இதனைத்தானோ?

(“உலகக் கிண்ணம் 2018” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு வாய் கஞ்சி ! (பகுதி 2)

நானும் ஸ்ரீயும் பம்பலபிட்டியில் இருந்து ஓடி வரும்போது அங்காங்கே எரிந்துகொண்டிருக்கும் கடைகளும் வீடுகளும் என எல்லாம் ஒரு படம் போல வந்து போய்க்கொண்டு இருந்தது. அந்த முஸ்லீம் பெரியவர் அந்த வீட்டில் தலைமை அதிகாரி போல இருந்தார்.தனதும் தன் குடும்பத்தின் இறப்புக்கு பின்பே உங்களை யாரும் அணுக முடியும் என சொன்னார். தங்கள் மூதாதையர் ஆப்கானிஸ்தானில் இருந்து வியாபாரத்துக்காக வந்ததாகவும் சொன்னார். தமிழ், சிஙகளம் இரண்டு மொழிகளிலும் சரளமாக பேசினார். வெளியே சத்தமும் கூக்குரல்களும் அதிகரித்துக்கொண்டு இருந்தது. கனரக வாகனங்களின் சத்தங்களும் அதிகரிக்க தொடங்கியது. நாம் பயத்துடன் இருந்தோம். அந்த முஸ்லீம் பெரியவர் ஒரு ரேடியோ ஒன்றினை கொண்டுவந்து தந்து அமைதியாக வைத்து கேட்கும் படி கேட்டுக்கொண்டார் .

(“ஒரு வாய் கஞ்சி ! (பகுதி 2)” தொடர்ந்து வாசிக்க…)

பெரியார் பற்றி இன்னொரு பார்வை

என் தமிழ்சமூகம் பின்தங்கி கிடப்பதற்கு சாதி ஏற்றதாழ்வும் மத மூட நம்பிக்கைகளும் ஒரு காரணம் என்பதால் அதை எதிர்த்து களமாடிக் கொண்டிருந்த பெரியார் என் மனதில் ஒரு இடத்தைப் பிடித்திருந்தார். அதனால், பெரியாரை கொண்டாடிக் கொண்டிருந்தேன்.

(“பெரியார் பற்றி இன்னொரு பார்வை” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு வாய் கஞ்சி !

35 வருடங்களின் முன் இலங்கையின் தலை நகர் கொழும்பில் என் உயிரை ஓலிம்பிக் பந்தமொன்றின் சுடரிணை கையில் எந்தி ஓடும் ஒரு ஓட்ட வீரனை போல கையில் ஏந்தி ஓடிக்கொண்டிருந்தேன். இதனை இன்று ஜூலை 25 2018 சரியாக 35 வருடங்களின் பின் மதியம் 1 மணியளவில் எழுத தொடங்குகிறேன்,

(“ஒரு வாய் கஞ்சி !” தொடர்ந்து வாசிக்க…)

தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?

(சாகரன்)

2009 ம் ஆண்டு புலிகள் தோற்கடிக்கப்பட்டதும் இதனைத் தொடர்ந்த தேர்தலுக்கான ஜனநாயக நிலமையும் புலிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகாரம் இல்லாதது என்று நிராகரித்து வந்த மகாண சபைத் தேர்தலில் பங்குபற்றும் சூழலை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே கிழக்கில் நடைபெற்ற மகாண சபைத் தேர்தலைப் புறக்கணித்து (சந்திரகாந்தன்)பிள்ளையானை முதல் அமைச்சர் ஆக்க வழி ஏற்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகாரம் என்ற ஆசையினால் வடக்கில் வாய்பை விடக் கூடாது என்று கங்கணம்கட்டி புறப்பட்டது, வட மகாண சபைத் தேர்தலைச் சந்திக்க.

(“தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?” தொடர்ந்து வாசிக்க…)

கறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்?

(புருஜோத்தமன் தங்கமயில்)
“….(கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது), தாக்குதல் நடத்த வந்த குண்டர்களிடமிருந்து, அயலிலுள்ள பௌத்த பிக்கு ஒருவரால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். இதே மாதிரியாக, சிங்கள நண்பர்களால் காப்பாற்றப்பட்ட தமிழ் மக்களின் கதைகளைக் கேட்கும் போது, இந்த நாட்டின் கட்டமைப்புக்குள் சக பிரஜைகளாக (நாங்கள்), பாதுகாப்பாக இருக்க முடியாது என்பது, மீண்டும் மீண்டும் ஞாபகத்துக்கு வருகிறது. பதிலாக, தமிழர்களாகிய நாங்கள், மற்றவர்களின் தயாள குணத்தில் தங்கியிருக்க வேண்டியிருக்கின்றது. இது, ஒரு நாடு தன்னுடைய பிரஜைகளின் மீது செலுத்தும் மிகப்பெரிய அவமானமாகும்…” இவ்வாறு, கறுப்பு ஜூலை வன்முறைகளுக்குள் அகப்பட்டுத் தப்பிய எம்.ஏ.சுமந்திரன் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்கிறார்.

(“கறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்?” தொடர்ந்து வாசிக்க…)