எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…..(Part 3)

கறுப்பு நண்டு வாங்கிச் சமைக்கலாம் என்று தேடிய நாங்கள் ஞாயிறு அன்று தொழிலுக்கு செல்வதில்லை எனவே கிடைக்காது என்பதற்குள் கடற்தொழிலாளர்களின் இந்த ஓய்வு நாட்களுக்குள் ஒழித்திருக்கும் கட்டாய உழைப்புப் பறிப்பு மதங்களை முன்னிலைப்படுத்தி நடைபெறுவதினால் அன்றைய தினம் தொழிலுக்கு போவதை தவிர்த்து ஓய்வெடுக்கும் ஒரு நிலமையை கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் கடற்தொழிலாளர்களிடம் அதிகம் ஏற்படுத்தியிருக்கின்றது.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…..(Part 3)” தொடர்ந்து வாசிக்க…)

நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா, க்ஸோசா என்ற ஆப்பிரிக்க பழங்குடி இனத்தில் ஜூலை 18, 1918 ல் பிறந்தார். அப்போது அவருக்கு வைத்த பெயர், ’ரோலிஹ்லஹ்லா’ (Rolihlahla). இந்த பெயருக்கு ’பல கிளைகளுடைய மரம்’ அல்லது ’பிரச்சினைகளை உருவாக்குபவர்’ என்று அர்த்தம். இந்த பெயர் மாற்றப்பட்டதற்கு அதன் அர்த்தம் காரணமல்ல. உச்சரிக்க கடினமாக இருந்ததால் அவருடைய ஆரம்பப் பள்ளி ஆசிரியை, ’நெல்சன்’ என மாற்றி வைத்தார்.

(“நெல்சன் மண்டேலா” தொடர்ந்து வாசிக்க…)

அஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கி குற்றச்சாட்டும்

(புருஜோத்தமன் தங்கமயில்)
வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக, பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்திருக்கின்றார்.

(“அஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கி குற்றச்சாட்டும்” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….!(Part 2)

இலங்கையின் இரண்டு வரட்சி மாவட்டங்களில் ஒன்றான மன்னார் தனக்கே உரிய வரட்சியுடன் தோற்றம் அளித்தாலும் வளங்களையும் தனக்குள்ளே காட்டியே நிற்கின்றது. குறிப்பாக குளம் ஆறு என்று படுக்கைகள் அமைந்த பிரதேசத்தில் வெள்ளத்திற்குள் மிதந்த நெற் பயிர்கள் இன்னமும் ஈரம் இருக்கின்றது என்ற மண்வளத்தையும் மக்கள் உள்ளங்களையும் காட்டி நின்றதை உணர முடிந்தது. வழியில் மறித்து வாங்கிய பாலைப் பழமும் கச்சான் கொட்டையும் வீரப்பழமும் தேனும் தரமாக இருந்தததையும் நியாயமான விலைகளுக்குள் விற்பனை செய்த மக்களின் நேர்மையும் அவர்களின் வறுமையிற்குள் இருந்து நியாய செயற்பாடுகளும் மக்களின் மனங்களில் இவர்கள் ஈரமானவர்கள் என்பதை எடுத்தியம்பி நின்றன. என் கண்கள் கண்ணீரை வரவழைத்தது இவர்களின் பண்பு என்னுடன் பயணத்தவர்களிடம் கண்ணாடியைத் திறந்த நிலையில் செய்த பயணத்தால் வந்த தூசும் இதனால் உருவான கண்ணீரும் என்று என்னை சமாளித்துக் கொள்ள உதவியது. சிறுவயதில் பாலைப் பழத்தை சாப்பிட்டுவிட்டு பஞ்சால் வாயைத் துடைக்க வேண்டும் என்ற எம் மூத்தோரின் சிலேடைக் கதைகளை மீண்டும் மீண்டும் மீட்டெடுத்து இதழில் படாமல் நாக்கில் போட்டு சுவைத்து வாயைத் துடைக்கும் கைங்கரியத்தை தவிர்த்துக் கொண்டேன்.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….!(Part 2)” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….! (Part 1)

(வருடம் ஒன்றிற்கு மேல் எழுத ஆரம்பித்த எனது பயண அனுபவங்கள் பல்வேறு வேலைப்பழுக்கள் காரணமாக தொடர முடியவில்லை… தற்போது அத்தியாயங்கள் பலவற்றை கடந்து இடை அத்தியாயம் ஒன்றில் தொடர்கின்றேன்)

மன்னார், தலைமன்னார் பயணங்கள்…

வவுனியாவில் இருந்து மன்னார் வீதியூடாக மன்னார் அல்லது மதவாச்சி செட்டிகுளம் ஊடான பயணம் என்பது வீதிகளின் தரங்களின் அடிப்படையில் எனது பயணம் இரண்டாவது தெரிவாக அமைந்தது. 1980 களின் நடுப்பகுதி வரையிலான எனது கடைசி அனுபங்களே இந்தப் பிரதேசங்கள் பற்றி நேரடி அனுபவங்களாக இருந்தன. வயலும் அதனைச்சார்ந்த தொழில்களும் வற்றாத ஆறும்(மல்வத்து ஓயா) கட்டுரைக் கரைக் குளம் என்று இன்றுவரை வற்றாத இரணைமடுவிற்கு அடுத்து பெரிய குளமும் அமைந்த பிரதேசங்களை ஊடறுத்த பயணமாக அமைந்தது. மகிந்த காலத்து நகரத்தை இணைக்கும் நெடுஞ்சாலை என்பது செட்டிகுளப்பாதையின் தரத்தை மன்னார் வீதியைவிட சிறந்ததாக உணர முடிந்தது. திரும்பி வரும் போது மன்னார் வீதியை பாவித்ததினால் இதனை உணர முடிந்தது. 80 களில் ஓலையிலான வேய்த கடைகளையும் மரக்குற்றிகளினால் ஆனா பிரதான வீதியில் அமைந்த சந்தி தேநீர் கடைகள் இன்று கொங்கிறீர் இனால் ஆன தகரக் கொட்டடைகைகளாக காட்சியளித்தன. ஆனால் மக்களின் வாழ்கைத் தரத்தில் வாழ்கைமுறையில் அதிக மாற்றத்தை யுத்தம் முடிந்து இந்த 8 வருடங்களிலும் காண முடியவில்லை சிறப்பாக குடிசனப் பரம்பல் மிகவும் ஐதாக இருந்தது.செட்டிகுளப்பாதையில் ஒரே புகையிரதத்தை மூன்று வேறுவேறு கடவைகளில் கடந்த அனுபவம் புகையிரத்தின் வேகத்தையும் எமது பயணப்பாதையின் தரத்தையும் அளவீடு செய்வதற்கு ஏதுவாக இருந்தது. பழம் பெரும் கிராமமாக இருந்த செட்டிகுளம் 1970 களில் இருந்த வளர்சிநிலையிலேயே இருக்க காணப்பட்டது. (“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….! (Part 1)” தொடர்ந்து வாசிக்க…)

சீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா

(ஜனகன் முத்துக்குமார்)

சீன – ஆபிரிக்க இராணுவ மற்றும் பாதுகாப்புச் சபை, கடந்த செவ்வாய்க்கிழமையன்று, பெய்ஜிங்கில் முடிவடைந்திருந்தது. இதில், 50 ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சீனத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இது ஒரு புறமிருக்க, போர்த்துக்கலின் காச்கீஸ் நகரத்தில், ஐரோப்பிய ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜோஸ் மானுவல் பரோசோ தலைமையில், போர்த்துக்கேய ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சோசா மற்றும் 20 ஆபிரிக்க அமைச்சர்கள் உட்பட 400க்கும் அதிகமான ஆபிரிக்க, ஐரோப்பியத் தலைவர்களுக்கான முதலாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆபிரிக்க -ஐரோப்பா உச்சிமாநாடு, இதே வாரத்தில் நடந்தேறியிருந்தது.

(“சீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா” தொடர்ந்து வாசிக்க…)

கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும்

(இனியொரு… )
விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் இராணுவ அதிகாரியை தமிழ் மக்கள் கதறியழுது கண்ணீர் மல்கி வழியனுப்பிய காட்சி கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டது. கதறியழுதவர்களை துரோகிகள் என புலம்பெயர் முகநூலில் பஞ்ச் பேசி தமது ‘தேசிய’ உணர்ச்சியை பொரிந்து தள்ளினார்கள். இதன் மறுபக்கத்தில் இராணுவ அதிகாரி இரத்தினப்பிரிய உலகமகா மனிதாபிமானியாக இன்னும் ஒரு குழு மக்களோடு சேர்ந்து கசிந்து கண்ணீர் மல்கியது. இவை இரண்டிற்கும் இடையில் இன்னொரு உண்மை இச் சம்பவங்களின்பின்னால் உறைந்து கிடப்பதை சில ஊடகங்கள் மறைத்தன, மற்றும் சில தமது பிரதியெடுக்கும் திறனை மேலும் வளர்த்துக்கொண்டன.

(“கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக அகதிகள் முகாம்களில் இருந்து விமானத்தில் தாயகம் திரும்பும் அகதிகள்.கப்பல் சேவை எப்போது?

(அருளம்பலம்.விஜயன்)

இலங்கையில் ஏற்பட்ட இனச்சிக்கல்கள் காரணமாக 1983 தொடக்கம் இறுrefugees returnதி யுத்தம் நடைபெற்ற காலகட்டம் வரை இலங்கை தமிழர்கள் பல கட்டங்களாக தமிழகத்துக்கு அகதிகளாக வந்து தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். முகாம்களில் இருந்தவர்கள் பல கட்டங்களாக தங்களது சொந்த இடத்துக்கும் சொற்ப அளவில்அவ்வப்போது திரும்பிய வண்ணமும் இருந்தனார். இறுதியாக இந்திய- இலங்கைஒப்பந்தம் ஏற்பட்ட 1987 களில் பெருமெடுப்பில் கப்பலில் தாயகம் திரும்பினர்.

(“தமிழக அகதிகள் முகாம்களில் இருந்து விமானத்தில் தாயகம் திரும்பும் அகதிகள்.கப்பல் சேவை எப்போது?” தொடர்ந்து வாசிக்க…)

‘பிச்சை வேண்டும்; நாயைப்பிடி’

(இலட்சுமணன்)

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிவு; கருணா இலண்டனில் கைது; பிள்ளையான் தரப்பின் ஆதிக்கம்; கிழக்கு மாகாணம் பிரிப்பு; சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சர்……. இவையெல்லாம் நடந்து முடிந்ததுக்குப் பிறகு, தற்போது கிழக்கு மாகாண சபைக்கான மூன்றாவது தேர்தல் நடைபெறவிருக்கின்றது.

(“‘பிச்சை வேண்டும்; நாயைப்பிடி’” தொடர்ந்து வாசிக்க…)

M உம் நான் உம்

(Saakaran)

மனோகரனும் நானும் மூர்த்தியும் நானும்……

2018 ஜுன் 02 மதியம் 12 மணி, இடம் கிளிநொச்சி. மல்லாவி சென்று வருவோம் ஆட்டோவில் என்ற முடிவுடன் பலராலும் அறியப்பட்ட எழுத்தாளருடன் நான். எம்(ன்) விருப்பப்படி குறிபிட்ட ஆட்டோவை அழைத்துவிட்டு கிளிநொச்சி அரசியல் பிரமுகர் ஒருவரின் அலுவலகத்தில் காத்திருப்பு. கிடைத்த இடைவெளியில் அரசியல் பிரமுகருடன் ஒரு சரியான மாற்றுத்தலமையை கட்டியமைக்க வேண்டும் என்பது தற்போதைய அவசியமான தேவையாக உள்ளது என்பது பற்றி கலந்துரையாடல். அவரின் செயற்பாடுகளுக்கு இடையில் எழுத்தாளரால் இவர்தான் கிளிநொச்சி பகுதியில் அடிமட்ட மக்களிடன் செல்வாக்கை பெற்றுவரும் அந்த அரசியல் பிரமுகருக்கு அடுத்த நிலையில் அவருடன் இணைந்து செயற்படுபவர் என்ற அறிமுகம்.

(“M உம் நான் உம்” தொடர்ந்து வாசிக்க…)