மத்திய அரசுக்கும் ‘நாகாலாந்து சோஷலிஸ்ட் கவுன்சில்’ (என்எஸ்சிஎன்-ஐஎம்) அமைப்புக்கும் இடையில் 2015 ஆகஸ்ட் 3-ல் கையெழுத்தான கட்டமைப்பு ஒப்பந்தம் குறித்து பக்கம் பக்கமாக பலரால் விமர்சனங்கள் எழுதப்பட்டுவிட்டன. அந்த ஒப்பந்தம் நாகா மக்களிடையே நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அதேசமயம், பக்கத்தில் உள்ள அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் லேசான கலக்கத்தையும் ஏற்படுத்தியது. அதில் நியாயமும் உண்டு. ஏராளமான அம்சங்களைக் கவனத்தில் கொண்டு பரிசீலித்து, அதன் பிறகு மாநிலங்களின் எல்லைகளும் பரப்பளவும் தீர்மானிக்கப்பட்டு மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அதில் மாறுதல் என்றால் சற்றே பதற்றமும் அமைதியின்மையும் ஏற்படுவதற்கு இடமுண்டு. எல்லைகள் மாறும் என்பது மட்டும்தான் பிரச்சினையா, வேறு உண்டா என்றும் பார்க்க வேண்டும்.
(“நாகாலாந்து பிரச்சினை: ஜேபி தந்த பாடம்” தொடர்ந்து வாசிக்க…)