சிலையை தகர்க்கலாம், சித்தாந்தத்தை அல்ல! – பிருந்தா காரத்

திரிபுராவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாஜக அரசாங்கம் லெனினின் சிலையைச் சரிசெய்து, அதனை அகற்றிய இடத்திலேயே திரும்பவும் வைக்க வேண்டும். இடதுசாரி ஆதரவாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

(“சிலையை தகர்க்கலாம், சித்தாந்தத்தை அல்ல! – பிருந்தா காரத்” தொடர்ந்து வாசிக்க…)

மனோவின் கூற்று முஸ்லிம் சமூகத்தின் உள்ளக விவாதத்துக்கான தலைப்பு

‘நாங்கள் சட்டக் கல்லூரியில் படித்த காலத்தில் எங்களோடு படித்த முஸ்லிம் பெண்கள் சாதாரணமாக சல்வாரும் முக்காடும் அணிந்துதான் படித்தார்கள். இப்படிக் கறுப்பால் மூடிக்கொண்டு, முழுமையாக மறைத்துக் கொண்டு யாருமே இருக்கவில்லை. இப்போது ஏன் திடீரென்று இப்படி மாறி விட்டார்கள் என்ற அச்சமும், மத்திய கிழக்குக் கலாச்சாரம் இங்கு ஏன் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்ற சந்தேகமும் ஏற்படுவது நியாயம்தானே?’

(“மனோவின் கூற்று முஸ்லிம் சமூகத்தின் உள்ளக விவாதத்துக்கான தலைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

சக்தி கதற கதற கற்பழித்த அந்த சோகக்காட்சியை பார்த்து……

(ப. தெய்வீகன்)

எயார்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அடுத்த சாகுபடி ஆரம்பமாகிவிட்டது. அடுத்த வருடமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தொடங்கிவிடும். நாங்களும் எத்தனை லட்சம் கொடுத்தாவது கொள்முதல் செய்வதற்கு தயாராகிவிடுவோம். ஒவ்வொரு தடவையும் தொலைக்காட்சி நிர்வாகம் ஒரு போட்டியாளரை வெற்றிபெற வைப்பது என்று போட்டி ஆரம்பத்திலேயே தீர்மானித்துவிடுவார்கள். அதைச்சுற்றித்தான் அனைத்து பஜனை நிகழ்வுகளும் நடைபெறும். இவ்வாறு அவர்களால் முன்கூட்டியயே முதல் பரிசு கொடுப்பதாக முடிவெடுக்கப்பட்டவர்களைவிட அந்த போட்டியில் கலந்துகொண்ட ஏனையவர்கள் திரையிசை களத்தில் பிற்காலத்தில் தூள் கிளப்பிக்கொண்டிருப்பதிலேயே தொலைக்காட்சிக்கு தங்களது சீத்துவம் விளங்கியிருக்கவேண்டும். ஆனால், அவர்களோ விடுவதாக இல்லை.

(“சக்தி கதற கதற கற்பழித்த அந்த சோகக்காட்சியை பார்த்து……” தொடர்ந்து வாசிக்க…)

ராஜிவ் கொலை சதி மிக நீண்டது. அதன் முதல்பாகம் 1991 மே 21ல் நிறைவேற்றப்பட்டது. இறுதிபகுதி 2009 மே19ல் நிறைவேற்றி முடித்து வைக்கப்பட்டது.

(Rajh Selvapathi)
தனது தந்தை சிலரின் தவறான ஆலோசனைகளின்படி நடந்ததால் சிலரை பகைத்துக்கொண்டதாகவும் அதனால் அவருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை தாங்கள் அறிந்திருந்ததாகவும் ராகுல் குறிப்பிட்டார். தாம் கொல்லப்படலாம் என ராஜிவுக்கே ஒரு வேளை தெரிந்திருக்கலாம்.

(“ராஜிவ் கொலை சதி மிக நீண்டது. அதன் முதல்பாகம் 1991 மே 21ல் நிறைவேற்றப்பட்டது. இறுதிபகுதி 2009 மே19ல் நிறைவேற்றி முடித்து வைக்கப்பட்டது.” தொடர்ந்து வாசிக்க…)

சக மனிதனைப் புரிந்துகொண்டு – அவனை ஏற்கிற சமூகமே முன்னே செல்லும்.

(Rathan Chandrasekar)

என் பெயர் குமாரசாமி எடிட்டிங்கில்
நான் பிசியாக இருந்த நேரத்தில்-
என் பத்திரிகை உலக சிஷ்யன் ஒருவன்
திடீரென்று போன் போட்டு மூச்சிரைத்தான். அவன் மனைவியின் தம்பி வீட்டிலிருக்கும்போது
புடைவை கட்டிக்கொள்கிறானாம்.
லிப்ஸ்டிக் போட்டுக்கொள்கிறானாம்.

(“சக மனிதனைப் புரிந்துகொண்டு – அவனை ஏற்கிற சமூகமே முன்னே செல்லும்.” தொடர்ந்து வாசிக்க…)

குடும்ப வன்முறைக்கு பெண்கள் பாதிக்கப் படுவதை அங்கீகரிக்கும் சமூகம், ஆண்கள் பாதிக்கப் படுவதை புறக்கணிக்கிறது.

ஒரு தடவை, நெதர்லாந்து தொலைக்காட்சி செய்தியில், “குடும்ப வன்முறைக்கு ஆண்களும் பலியாகிறார்கள்” என்று தெரிவித்து இருந்தனர். அதற்குப் பின்னர், சமூக நல தொண்டு நிறுவனங்கள் இந்த விடயத்திலும் கவனமெடுத்து வருகின்றன. பொதுவாக பாதிக்கப் பட்ட ஆண்கள் வெட்கம் காரணமாக வெளியே சொல்வதில்லை.

(“குடும்ப வன்முறைக்கு பெண்கள் பாதிக்கப் படுவதை அங்கீகரிக்கும் சமூகம், ஆண்கள் பாதிக்கப் படுவதை புறக்கணிக்கிறது.” தொடர்ந்து வாசிக்க…)

எங்கள் அப்பா இறந்துவிடுவார் என்பதும் முன்கூட்டியே தெரியும் – ராகுல்காந்தி

நான் அந்தப் பாதுகாவலர்களுடன் பேட்மின்டன்
விளையாடி இருக்கிறேன். அவர்களே என் பாட்டியைக் கொன்றதைப் பார்த்திருக்கிறேன், அவர்கள் இறந்ததையும் ரெண்டு கண்ணால் பார்த்தேன்.

எனக்கு எங்கள் பாட்டி இறந்துவிடுவார் என்றும் –
எங்கள் அப்பா இறந்துவிடுவார் என்பதும்
முன்கூட்டியே தெரியும்.
இந்த அரசியலில் ஒரு கொள்கையுடன்
தீய சக்திகளுக்கு எதிராக நிற்கும்போது
நீங்கள் கொல்லப்படுவது தானாகவே நடந்துவிடுகிறது.

(“எங்கள் அப்பா இறந்துவிடுவார் என்பதும் முன்கூட்டியே தெரியும் – ராகுல்காந்தி” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு ஐந்து நிமிடங்கள்ஒ துக்கி இதை_படியுங்கள்

படத்தில் இருக்கும் பெரியவரை சென்னை பள்ளிக்கரணை ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் எதிரே புதியதாக திறந்து இருக்கும் ஹோட்டலின் வாசலில் பார்த்தேன்.. தள்ளாடும் வயதில் வரும் வண்டிகளுக்கு பார்க்கிங் பார்த்து கொண்டு இருந்தார்… சாப்பிட உள்ளே நுழைந்த போது இவரிடம் பேசவில்லை.. திரும்பிய போது, இரவு பத்து மணி இருந்ததால், கூட்டம் குறைவாக இருந்தது.. வண்டி எடுக்கும் போது இவரிடம் பேச்சு கொடுத்தேன்.

(“ஒரு ஐந்து நிமிடங்கள்ஒ துக்கி இதை_படியுங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

குழந்தைகளை வைத்துப் புனைந்த கதைகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சொல்லப்படுவது உண்மையா, பொய்யா எனப் பிரித்தறிவது எப்படி? உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான பிரிகோடு எது? சில விடயங்கள் கவனம் பெறும் வேளை, ஏன் பிற விடயங்கள் கவனம் பெறுவதில்லை? குறித்தவொரு விடயம் நீண்டகாலமாக இருந்தபோதும் அது திடீரென்று கவனம் பெறுவது ஏன்? இவை இன்றைய சூழலில் பதிலை வேண்டும் கேள்விகள்.

(“குழந்தைகளை வைத்துப் புனைந்த கதைகள்” தொடர்ந்து வாசிக்க…)

வன்முறைக்குப் பின்னால் உள்ள அரசியல்

(கே. சஞ்சயன்)
அம்பாறையில் வேண்டுமேன்றே சீண்டிவிடப்பட்ட இனவாதம், கண்டியில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறது. உயிர்ப்பலியுடன் பெருமளவில் பொருளாதார அழிவுகள் மாத்திரமன்றி, இனங்களுக்கிடையில் பதற்றம், உறுதியற்ற நிலை என்று பல விளைவுகளுக்கு, இந்தச் சம்பவங்கள் காரணமாகி இருக்கின்றன.

(“வன்முறைக்குப் பின்னால் உள்ள அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)