பொய்மைகளாலும் புரட்டுக்களாலும் கட்டமைக்கப்படும் வாய்ப்புவாதப் பாராளுமன்ற அரசியல் அடித்தளத்தை 6வது திருத்தச் சட்டம் பற்றிய தெளிவே உடைத்துச் சுக்குநூறாக்கி விடும்

எப்போதுமே எதையுமே தொடக்கத்தில் இருந்தே சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். எனினும் அரசியல் வரட்சி தலைவிரித்தாடும் ஈழத் தமிழர்களின் அரசியல் வெளியில் அரசியல் பாலபாடத்தில் கூடத் தேர்ச்சி பெறும் தகைமையில்லாதோரெல்லாம் முகநூலில் சொட்டைப் பதிவுகளிட்டு ஆய்வாளர்களாகிப் போன துன்பியற் சூழலில் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே எடுத்துச் சொல்ல வேண்டியது வரலாற்றுக் கடமை என்றாற் போலாகிவிட்டது. அஃதில்லையெனில் புரட்சிகர சக்திகளாக அணியமாக வேண்டிய தமிழ் இளையோர்கள் பாராளுமன்ற அரசியற் பித்தலாட்டக்காரர்களுக்கான ஓட்டுப் பொறுக்கிகளாக அலையும் துயரத்தை மாற்றியமைக்க வழியிராது. பாராளுமன்ற அரசியலின் கையாலாகாத்தன்மையைக் குறிப்பிட்ட ஒரு கட்சியின் இரண்டகமாகக் கதையளப்பவர்கள், தாம் அவ்வழி நின்று எதுவெல்லாம் செய்வோமெனக் கூற அதையே நம்பி ஏமாறும் இளவட்டங்களும் அரசியல் வரட்சியில் உலவித் திரியும் ஒரு சில முதியோரும் இனியும் ஏமாறாதிருக்க 6 ஆம் திருத்தச் சட்டத்தை அவர்கள் கூடுமிடங்களில் பேசு பொருளாக்கியே தீர வேண்டுமென்றெண்ணி அது குறித்துத் தொட்டுச் சென்று அரசியற் தெளிவூட்டுவதை இப்பத்தி முதன்மை நோக்காகக் கொண்டுள்ளது.

(“பொய்மைகளாலும் புரட்டுக்களாலும் கட்டமைக்கப்படும் வாய்ப்புவாதப் பாராளுமன்ற அரசியல் அடித்தளத்தை 6வது திருத்தச் சட்டம் பற்றிய தெளிவே உடைத்துச் சுக்குநூறாக்கி விடும்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் !

ஆனால் முஸ்லிம்களைப் பொருத்தவரை வடக்கிலும் கிழக்கிலும் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கி முஸ்லிம் மாகாண சபை ஒன்றை நிறுவுவதோ அல்லது நிர்வகிப்பதோ நடைமுறையில் மிகுந்த சவாலான விடயமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் தெற்கிலே சிங்கள சமூகத்துடன் வாழும் நிலையில் தமிழர் தரப்பினரின் தாயக் கோட்பாட்டை , சுய நிர்ணயக் கோட்பாட்டை அடியொற்றி முஸ்லிம் “தாயக “, “தன்னாட்சி” கோட்பாடுகளைக் கொண்டு சுயாட்சி அலகு கோருவதென்பது நடைமுறையில் சாத்தியமானதா என்பது மிக முக்கிய கேள்வியாகும்.

(“வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் !” தொடர்ந்து வாசிக்க…)

மைத்திரியின் யாழ். வருகையும் எதிர்வினையும்

(புருஜோத்தமன் தங்கமயில்)
புறக்கணிப்புகள், சத்தியாக்கிரகங்கள், ஊர்வலங்கள் என்பவற்றை மேற்கொள்வதற்கு என்று சந்தர்ப்பங்கள் உள்ளன. எடுத்ததற்கெல்லாம் அவற்றை செய்யப்போனால், அவற்றுக்குரிய மதிப்பும் பெறுமானமும் குறைந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் என்னுடைய ஆட்சியில்தான் நடைபெறுகின்றன. முந்தைய ஆட்சியில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றிருந்தால், வெள்ளை வானில் வந்து பிடித்துக் கொண்டு சென்றிருப்பார்கள்”. கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்’ நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

(“மைத்திரியின் யாழ். வருகையும் எதிர்வினையும்” தொடர்ந்து வாசிக்க…)

இந்தோனேசிய அகதி முகாமில் இருக்கும் தமிழ் மக்களுக்கான பணிவான வேண்டுகோள்.

(இந்தப் பதிவு சம்மந்தமாக மேலதிக் செய்திகளை எமது இணையம் எதிர்பார்கின்றது இந்தச் செய்திக்கு இதனை எழுதியவரே பொறுப்பு)

நீங்கள் உயிர்காப்புக்காகவே புலம் பெயர்ந்தீர்கள் இப்போது இலங்கையில் நல்லாட்சி நடக்கின்றது ஆளும் கட்சி சிங்களக் கட்சியாகவும் எதிர்க் கட்சி தமிழ் கட்சியாகவும் இருக்கின்றது எனவே இலங்கையில் தமிழர்களுக்கு உயிர்ப்பயமோ அல்லது உயிர் ஆபத்தோ இல்லை என்று இலங்கை அதிபர் இந்தோனேசிய அரசுடன் இருதரப்பு உடன்படிக்கயில் கைச்சாத்திட்டுள்ளார்.

(“இந்தோனேசிய அகதி முகாமில் இருக்கும் தமிழ் மக்களுக்கான பணிவான வேண்டுகோள்.” தொடர்ந்து வாசிக்க…)

தீபாவளிப் பண்டிகை.

பண்டிகைகள் எல்லாம் வியாபாரத்தை பெருக்க உருவாக்கப்பட்ட நாட்கள் என்று உருமாற்றப்பட்ட உலகில் பண்டிகைகளை கொண்டாடும் மகிழ்சியான மனநிலை ஏற்படாது என்பது மனித நேயம் மிக்க யாரும் பொதுவாக ஏற்படக்கூடியதே. இவ் மனநிலையில் இருந்து இந்த தீபாவளி பண்டிகையை பார்த்தாலும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடன் நிகழ்காலப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தி இந்த பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். குறிப்பாக தமது உறவுகளை, வாழ்நிலங்களைத் தொலைத்தவர்களின் மிக நீண்ட இடையறாத போராட்டங்களின் மத்தியல் பண்டிகைகளை கொண்டாடும் மனநிலையை ஏற்படுத்துவது கடினமானதே. ஆனாலும் பண்டிகை கொண்டாடும் உங்கள் மகிழ்சியான தருணங்களில் நானும் இணைந்து கொள்கின்றேன். அடுத்த தீபாவளி ‘தமிழ் ஈழத்தில்” என்று ‘நம்பிக்கையூட்டிய” காலம் போய் அடுத்த தீபாவளி ‘புதிய அரசியல் தீர்வுத் திட்டம்” உடன் என்று மாறிப் போன காலத்தில் நாம் தற்போது இருக்கின்றோம் என்பதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

எங்கே செல்லும் இந்தப் பாதை?

(காரை துர்க்கா)
“வடக்கு மாகாணத்தில், தூரத்து இடங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் செல்ல மறுக்கும், வசதி குறைந்த பாடசாலைகளை மூடுவதுடன், நகர்ப் புறத்து பாடசாலைகளையும் ஆசிரியர்கள் வந்து செல்லக் கூடிய வசதிகள் உள்ள பாடசாலைகளையும் மட்டும் இயக்குவதே, ஆசிரியர்கள் வளப் பங்கீட்டுப் பிரச்சினைக்கான தீர்வு” என, வடக்கு மாகாண அமைச்சர் யோசனை தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை அமர்வில், அமைச்சர் இவ்வாறான ஆலோசனை பகர்ந்துள்ளார்.

(“எங்கே செல்லும் இந்தப் பாதை?” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். இளைஞர்கள் சோம்பேறிகள் என்ற புனைவு

(Ahilan Kadirgamar)

சிறிது காலத்துக்கு முன்பு, போர் முடிவடைந்ததன் பின்பு, யாழ்ப்பாணச் சமூகம் பற்றித் திரும்பத் திரும்பக் கூறப்பட்ட ஒரு விடயமாக, அந்த மக்கள், எவ்வளவு கடின உழைப்பாளிகள் என்பதுவும் சிக்கனமாகச் செயற்படுவர்கள் என்பதுவும் மதிநுட்பம் கொண்டவர்கள் என்பதுவும் காணப்பட்டது. ஆனால் இன்று, யாழ்ப்பாணச் சமூகம், சோம்பேறித்தனமாக வந்துவிட்டது எனவும், ஊதாரித்தனமாகச் செலவுசெய்து, கடனில் மூழ்குகிறது எனவும் மக்கள் கதைப்பதைக் கேட்கக்கூடியதாக உள்ளது.

(“யாழ். இளைஞர்கள் சோம்பேறிகள் என்ற புனைவு” தொடர்ந்து வாசிக்க…)

நேர்காணல்:

“துவக்குகள் பேசிய காலத்தில் வண்டிலுக்குப் பின்னால் பூட்டிய மாடுகள் போல் பேனைகள் இருந்தன.”

(வி. ரி. இளங்கோவன்)

அலட்டல்கள் இல்லாத இலகு தமிழ் சொல்லாடல்களுக்குச் சொந்தக்காரர் வி. ரி. இளங்கோவன். அன்றில் இருந்து இன்றுவரை இவரது பேனை ஓய்ந்தது இல்லை. ஈழத்தின் வடபுலமான தீவகங்களில் ஒன்றான புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டு பாரிஸில் வாழ்ந்துவரும் வி. ரி. இளங்கோவன் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், இடதுசாரிய சிந்தனையாளர், ஊடகவியலாளர், சித்த ஆயுர்வேத மருத்துவர் என்று பல்துறைசார் ஆளுமைகளை தன்னகத்தே கொண்ட பாரிஸின் மூத்த இலக்கிய ஆளுமையாக எம்மிடையே இருக்கின்றார். கே.டானியலின் பாசறையில் வளர்ந்த முதன்மைப் போராளி. இவர் தனது புனைபெயரை ‘அசலகேசரி‘ என்று வைத்துக்கொண்டாலும் தனது சொந்தப் பெயரிலேயே பல படைப்புகளை எமக்குத் தந்திருக்கின்றார்.

(“நேர்காணல்:” தொடர்ந்து வாசிக்க…)

சரியான மாற்றுத் தலமை தேவை….!

(சாகரன்)

தற்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலமை தோற்றுப் போகும், தோற்றுப் போன உசுப்பேத்தும் அரசியலை நடாத்துகின்றதா? அல்லது இராஜதந்திர அரசியலை நடாத்துகின்றதா?. இதில் விக்னேஸ்வரன், சம்மந்தன் இருவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகவே பார்க்க முடியும். இதில் ஒருவர் தமிழரசுக் கட்சியினர், மற்றவர் தமிழ் மக்கள் பேரவையினர் என்று பிரித்து பார்க்க முடியவில்லை. இவர்களுக்கு மாற்றீடாக ஒரு சரியான மாற்றுத் தலமையை ஏற்படுத்த ஏன் முடியவில்லை. அவ்வாறு ஏற்படுத்தும் இடத்து தலமைப் பொறுப்புக்களை ஏற்று நடத்த யார் யார் எம்மிடையே இருக்கின்றனர். இதற்கு எவ்வாறு செயற்படலாம் என்ற விவாதக் களத்தை திறந்துவைக்கின்றேன் ஆரோக்கியமான கருத்துக்களைப் பரிமாறுவோம்.

(“சரியான மாற்றுத் தலமை தேவை….!” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையில் போர் முடிவிற்கு வந்து 8வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

போரில் இறந்த மக்களின் சரியான புள்ளிவிபரம், காணாமல் போனவர்களுடைய, சிறையில் இருப்பவர்களுடைய சரியான புள்ளிவிபரங்கள் இதுவரை ஒரு அமைப்பிடமும் இல்லை. அதை ஏன் இன்றுவரை ஒரு அமைப்போ அல்லது அரசியல் கட்சியோ செய்யவில்லை(?)

(“இலங்கையில் போர் முடிவிற்கு வந்து 8வருடங்களுக்கு மேலாகிவிட்டது.” தொடர்ந்து வாசிக்க…)