27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது

தோழர் கதிர், சுந்தர், சிவா, கொட்வின் என்று பல தோழர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு ஒரு பலமான விடுதலை அமைப்பாக கிளநெச்சிப் பிராந்தியத்தில் போராட முற்பட்டதே பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ். பல்கலைக் கழக மாணவன் விஜிதரன் காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டிற்கு நீதி கேட்டுப் போராடிய யாழ்பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக யாழ் குடாநாட்டிற்குள் உருவெடுத்து குடாநாடு தாண்டி கிளிநொச்சிக்கு விஷ்தரிக்கப்படும் அளவிற்கு கிளிநொச்சி மக்கள் மதியில் அரசியல் வேலைகளை முன்னெடுத்ததில் கிளிநொச்சித் தோழர்களின் பங்களிப்பு அளப்பரியது. மக்களின் வெகுஜன எழுச்சியை புகைப்படம் எடுத்து மிரட்ட முற்பட்ட மாற்று இயக்க உளவுப்படையை மக்கள் நையப் புடைத்து  புகைப்படக் கருவியை பறிமுதல் செய்த வரலாற்றை எற்படுத்தும் மக்கள் எழுச்சியை எற்படுத்தியவர்கள் பலர் எம்மிடையே உருவான பாசிசவாதிகளால் கொல்லப்பட்டுவிட்டனர் . மக்கள் விடுதலைப் படையின் பரந்தன் இராணுவ முகாம் தாக்குதலை வெற்’றிகரமாக நடைமுறைப்படுத்த முனைந்ததில் கிளநொச்சி பிராந்திய தோழர்கள் பல அர்பணிப்புக்களை செய்தே இருந்தனர்இ புலிகள் குடாநாட்டிற்குள் குண்டுச்சட்டிக்குதிரையை ஓட்டியபோது குடாநாட்டிற்கு வெளியே விடுதலை அமைப்பின் செற்பாடுகளை விஸ்தரிப்பதில் இந்த தோழர்கள் பல தியாகங்களை செய்தனர்

27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சுந்தர் என்ற அமலன் சுகந்தன் என்ற யூலியற் இருவரும் EPRLF இயக்கத்தின் போராளிகள். சுந்தர் என்பவர் தனது இயக்கத்தின் முன்னனிப்போராளியாகவும் பல அசாத்தியமான செயல்களையும் செய்தவர். புலிகளினால் முல்லைத்தீவில் வைத்து கால்கள் அடித்து முறிக்கப்பட்டு கொல்லப்பட்டவர். நேசித்தது மக்களின் நலன்களையும் விடுதலையையும் மட்டுமே. தான் பிறந்த ஊருக்கு நிறைய நற்செயல்கள் நடக்க காரணமானவர். ஒட்டுமொத்த தமிழர்களின் சுதந்திரத்தையும் உரிமையையும் குத்தககைக்கு எடுத்தவர்களால் கொலை செய்யப்பட்டார். புலிகள் தங்களுடன் இணைத்து வேலை செய்ய பேரமும் பேசினார்கள். அவர்களுக்கு உடன்படுவது போல் போக்கு காட்டி தப்பி ஓடியவர். இருந்தும் மீண்டும் புலிகளினால் கொலை செய்யப்பட்டார்.

(“27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது” தொடர்ந்து வாசிக்க…)

உரும்பிராய் தியாகி சிவகுமாரன்

(ஒரு நண்பரின் பதிவு ஒன்று உரும்பிராய் தியாகி சிவகுமாரன் அவர்கள் பற்றிய 2013 இல் நான் இட்ட பதிவு ஒன்றை மீண்டும் பதிவிடுகிறேன்)

தியாகி சிவகுமாரன் , வீரன் சிவகுமாரன், உரும்பிராய் சிவகுமாரன் பொன் சிவகுமாரன் என பலராலும் விழிக்கப்பட்ட சிவகுமாரன் அவர்கள் ஒரு தற்கொலை போராளியல்ல. ஒரு மகத்தான உன்னதமான போராளி. வெறுமனே தமிழ் உணர்ச்சியிலும் தமிழ் தேசிய உணர்வலையிலும் போராட கிளம்பிய ஆரம்பகால போராளிகள் மத்தியில் சமூக உணர்வும் தமிழ் சமூகத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்ற தெளிவிலும் போராட கிளம்பியவர் சிவகுமாரன் அவர்கள். அவரோடு சேர்த்து அவரது சகாக்கள் நால்வர். இவர்கள் அடங்கியதுதான் இவரது இயக்கம். இவர்கள் எல்லோருக்குள்ளும் தான் ஒருவரே சயனைட் குப்பியை கொண்டுதிரிந்தார். அப்பொழுது அவர் பொலிஸ் அத்தியேட்சகர் சந்திரசேகராவுக்கும் அப்போதைய தொலை தொடர்பு அமைச்சர் தியாகராஜா என நினைக்கிறேன் இருவருக்கும் குண்டுவைத்து கொலைசெய்ய முயற்சித்தார் என்ற காரணத்தால் இலங்கை பொலிசாரினால் தேடப்பட்டு வந்தார். இதன் காரணமாக தன்னை போலீசார் பிடித்தால் சித்திரவதை செய்து கொல்வார்கள் என்ற நோக்கத்தால் சயனைட்குப்பியை தான் மட்டும் தனது சகாக்களுக்கு கொடுக்காமல் கொண்டு திரிந்தார். சகாக்கள் பிடிபட்டால் எல்லாவற்றுக்கும் காரணம் சிவகுமாரன் தான் என சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவைத்திருந்தார். ஆனால் போராடக்கிளம்பிய ஆரம்பங்களிலேயே அவர் கோப்பாய் வங்கி கொள்ளை முயற்சியில் பொலிசாரால் பிடிபடும்போது சயனைட் உட்கொண்டு வைத்தியசாலையில் மரணித்தார்.

(“உரும்பிராய் தியாகி சிவகுமாரன்” தொடர்ந்து வாசிக்க…)

27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது

ஈழவிடுதலைப் போராட்டத்தின் மூலவர்கள் என்றால் அதில் நிச்சயமாக தோழர் ஐயாவிற்கும் தனி இடம் உண்டு. வாழ்நிலை கம்யூனிஸ்ட் என்று எம்மால் உணரப்படும் அளவிற்கு அடிமட்ட மக்களின் வேலைத்திட்டங்களில் தன்னை எப்போதும் இணைத்தவர் வன்னியின் காடு மேடு எல்லாம் இவருக்கு அத்துப்படி வாழ்வை இவர் அளவிற்கு ரசிப்பவர் வேறுயாராகவும் இருக்க முடியாது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் அதனால்தான் மக்களின் விடுதலைக்காக ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலேயே கல்யாணத்தின் பின்பும் முழுநேர போராளியாக தன்னை இணைத்துக் கொண்டவர். இவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைவராக மக்களால் இனம்காணும் வகையில் அவர்களை முன்னிலைப்படுத்தி பின்நின்று வழிநடத்தியவர் மத்திய குழு உறுப்பினர் நடேசலிங்கம் அரசியல் செயற்பாடாளர் கனகலிங்கத்தின் மரணத்தின் பின்பு வன்னியை தனித்து தாங்கப் புறப்பட்டு றேகன் என்ற சர்வதேச பாசறை போராளியை இனம்காட்டியவர். மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியல் குடியேறிய மலையக மக்கள் மத்தியிலிருந்து வந்து தோழர்கள் விடுதலைக்காக செய்த அர்பணிப்கபுக்ள் அளப்பரியவை கூடவே முஸ்லீம்மக்கள் மத்தியிலும் அதிகளவு போராளிகளை உள்வாங்கிய செயற்பாடுகள் வவுனியா மாவட்டத்திலும் அதிகம் நடைபெற்றது. 1986 களில் சிறீலங்கா இராணுவத்துடனான சமரில் முதல்களப் பலி கண்ட வன்னி மகள் பானு. கருவிகளை உருவாக்கும் பட்டறையில் கருவிகளைச் செதுக்கிய சிற்பி தாஸ் இப்படி பலரையும் குறிப்பிடலாம் வன்னியிற்கான பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கும் அளவிற்கு மக்கள் செல்வாக்கை பெற வவுனியாதோழர்களின் அர்பணிப்புகள் காரணமாக இருந்தன. இணைந்த மாகாண சபை ஆடசிக்காலத்தில் வவுனியாவில் முகுந்தன் ஐயா வெற்றி என பல ஆளுமைகள் ஒருகிணைந்து இங்கு செயற்பட்டார்கள் இவர்களுடன் தோழர் பிரதாப் ஆட்சி அதிகாரத்தை நிறுவுவதற்காக அரச நிர்வாகத்தில் திறம்பட செயற்பட்டார்.

தனிமனித பலவீனங்களில் இருந்து விடுபட முடியாத உமக்கு தலைவர் பதவி எதற்கு?

தனிமனித பலவீனங்களில் இருந்து விடுபட முடியாவிட்டால் தலைவர் பதவியில் இருந்து விலகுங்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்து உள்ளார் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினராகவும், முஸ்லிம் சமாதான செயலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய பணிப்பாளராகவும், இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் உயர் மட்ட குழு அங்கத்தவராகவும் பதவிகள் வகித்த எஸ். எம். இஸ்ஸடீன்.

(“தனிமனித பலவீனங்களில் இருந்து விடுபட முடியாத உமக்கு தலைவர் பதவி எதற்கு?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழை ஆட்சி மொழியாக கொண்ட இரு மாகாணங்கள்       நாட்டில் அமைய பெறுவது ஆரோக்கியமான விடயமே!

(ரி. தர்மேந்திரன்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் ஏராளமான முக்கிய இரகசிய ஆவணங்கள் பஷீர் சேகு தாவூத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சுவிஸ் வங்கியில் உள்ள லொக்கரில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன, அவை உரிய நேரத்தில் வெளிப்படுத்தப்படும் என்று ஐக்கிய கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயலாளர் ஏ. யூ. எல். எம். ஹாரிஸ் வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க சுவிஸில் இருந்து தாயகம் திரும்பி வந்த இவரை நாம் நேர்காணல் கண்டபோது…..

(“தமிழை ஆட்சி மொழியாக கொண்ட இரு மாகாணங்கள்       நாட்டில் அமைய பெறுவது ஆரோக்கியமான விடயமே!” தொடர்ந்து வாசிக்க…)

மாட்டிறைச்சி தடையும் மாநில கட்சிகளின் கூட்டணியும்

(எம். காசிநாதன்)

“மாட்டிறைச்சிக்கு, மாடுகளை சந்தையில் விற்கக்கூடாது” என்று கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியின் மூன்றாண்டு நிறைவு விழாக் கொண்டாடும் நேரத்தில், எழுந்துள்ள இந்தச் சர்ச்சை, அக்கட்சியின் சாதனைப் பிரசாரங்களைத் திசைதிருப்பியிருக்கிறது.

(“மாட்டிறைச்சி தடையும் மாநில கட்சிகளின் கூட்டணியும்” தொடர்ந்து வாசிக்க…)

27 வது தியாகிகள் தினம் உலகம் எங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது

எல்லாப் போராட்ட அமைப்புக்களின் ஆரம்ப புள்ளியாக இருப்பது யாழ் மாவட்டம் என்பது நிதர்சனமான உண்மை இதில் விதி விலக்காக பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் உம் இருந்தது என்பது உண்மையே. ஆனால் இதன் தொடர்சியாக யாழ் மையவாத மேலாதிக்கம் ஈழவிடுதலை அமைப்புக்களுக்குள்ளேயும் மிதவாத தமிழ் அரசியலில் தலமைகளுக்குள் இன்றுவரை நிலவி வருகின்றது. இதிலிருந்து வேறுபடுவது பத்மநாபா தலமையில் உருவான விடுதலை அமைப்பு இதன் தொடர்சியான பயணப் போக்கில் இன்று தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர். யாழ்மையவாத மேலாதிகமற்ற சகல பிரதேசங்களின் சமத்துவத்தையும் பிரதி பலிக்கும் செயற்பாடுகளை தன்னத்தே கொண்டிருப்பது இதன் அடிப்படையில் செயற்படுவதும் இக்கட்சியின் சிறப்பு. 26 வது தியாகிகள் தினம் கடந்த வருடம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கூடவே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் தல நகரத்தை பல்வேறு எதிர்ப்பு, எதிர்பார்ப்புக்களின் மத்தியிலும் திருகோணமலையில் நிறுவியது தனிச்சிறப்பு.

(“27 வது தியாகிகள் தினம் உலகம் எங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது” தொடர்ந்து வாசிக்க…)

சாதாரணமானவனின் மனது

சஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்
ஸ்ரீலங்காவின் அபிவிருத்தி அரசியலுக்குள் சிக்கிவிட்ட தேசியம் பேசும் அமைப்புக்கள்

நோர்வே ஈழமக்கள் அவையின் தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா மற்றும் மக்களவை உருவாக்க காலத்தில் முக்கியப்படுத்தப்பட்டவரும், ரீரீசியின் உபஅமைப்பான நோர்வே தமிழர் சுகாதாரஅமைப்பின் தலைவர், பல்வைத்தியர் சிவகணேசன் அவர்களும் ஸ்ரீலங்கா அரசின் சிறப்பு அழைப்பினை ஏற்று இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தளங்களில் வெளியாகி சில வாரங்களே ஆகும்போது பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்களைத் தலைவராகக்கொண்ட நோர்வே ஈழத்தமிழர்அவை திடீரென நோர்வே ஈழமக்கள் அவைக்கான தேர்தலை நடாத்தப்போவதாக அறிவித்துள்ளது.

(“சாதாரணமானவனின் மனது” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியப்பிரதமரின் இரண்டாவது இலங்கை விஜயம்

2014 ஆண்டு மே மாதத்தில் தற்போதைய இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, கடந்த இரண்டு வருடகாலத்தில் இரண்டு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இவரது இந்த இரண்டு விஜயங்களுமே 2015 ஆண்டு ஜனவரியில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னரே நிகழ்ந்துள்ளன. 2015 ஆண்டு மார்ச் மாதத்தில் நரேந்திர மோடியின் இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ அரச விஜயம், 28 வருடங்களின் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் (1987 ஆண்டில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்காக அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்) மேற்கொண்ட முதலாவது விஜயமாகும். அப்போது அந்த விஜயம், இந்திய அரசின் அனுசரணையுடன் நிகழ்த்தப்பட்ட ஆட்சிமாற்றத்தினை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்த விஜயமாகவே பலராலும் நோக்கப்பட்டது. ஆனால் இம்மாதம் 11ந் திகதி சர்வதேச வெசாக் தினத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்காக நரேந்திர மோடி இலங்கைக்கு மீண்டும் வருகைதந்தது பற்றிக் கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.

(“இந்தியப்பிரதமரின் இரண்டாவது இலங்கை விஜயம்” தொடர்ந்து வாசிக்க…)