27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது

தோழர் கதிர், சுந்தர், சிவா, கொட்வின் என்று பல தோழர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு ஒரு பலமான விடுதலை அமைப்பாக கிளநெச்சிப் பிராந்தியத்தில் போராட முற்பட்டதே பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ். பல்கலைக் கழக மாணவன் விஜிதரன் காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டிற்கு நீதி கேட்டுப் போராடிய யாழ்பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக யாழ் குடாநாட்டிற்குள் உருவெடுத்து குடாநாடு தாண்டி கிளிநொச்சிக்கு விஷ்தரிக்கப்படும் அளவிற்கு கிளிநொச்சி மக்கள் மதியில் அரசியல் வேலைகளை முன்னெடுத்ததில் கிளிநொச்சித் தோழர்களின் பங்களிப்பு அளப்பரியது. மக்களின் வெகுஜன எழுச்சியை புகைப்படம் எடுத்து மிரட்ட முற்பட்ட மாற்று இயக்க உளவுப்படையை மக்கள் நையப் புடைத்து  புகைப்படக் கருவியை பறிமுதல் செய்த வரலாற்றை எற்படுத்தும் மக்கள் எழுச்சியை எற்படுத்தியவர்கள் பலர் எம்மிடையே உருவான பாசிசவாதிகளால் கொல்லப்பட்டுவிட்டனர் . மக்கள் விடுதலைப் படையின் பரந்தன் இராணுவ முகாம் தாக்குதலை வெற்’றிகரமாக நடைமுறைப்படுத்த முனைந்ததில் கிளநொச்சி பிராந்திய தோழர்கள் பல அர்பணிப்புக்களை செய்தே இருந்தனர்இ புலிகள் குடாநாட்டிற்குள் குண்டுச்சட்டிக்குதிரையை ஓட்டியபோது குடாநாட்டிற்கு வெளியே விடுதலை அமைப்பின் செற்பாடுகளை விஸ்தரிப்பதில் இந்த தோழர்கள் பல தியாகங்களை செய்தனர்