பன்னீர்செல்வம்

“இவரே பரவாயில்லை…!..இவர்தான் வேண்டும்..!” என்று மக்களை திரும்பிப்பார்க்க வைத்துள்ள தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் பற்றிய சில தகவல்கள். “பேச்சிமுத்து” என்ற கிராமத்து மணம் வீசும் தமிழ்ப்பெயர்தான் அவரின் இயற்பெயர். இந்த பெயர் வீட்டில் மூத்தவர் ஒருவரின் பெயராக இருந்ததால், பன்னீர்செல்வமாக மாறினார். இளவயதில் எம்ஜிஆர் பக்தராக வலம்வந்த இவர் அவரைப்போலவே “ஓபிஎஸ்” என்னும் மூன்றெழுத்துடன் அரசியல் உலகில் வலம்வரத்தொடங்கினார்.

(“பன்னீர்செல்வம்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 101 )

பற்குணத்தின் மகள் அபிராமியை மன்னார் முன்னாள் அரச அதிபர் வாமதேவன் சுண்டுக்குளி மகளிர் க்ல்லூரியில் சேர்ப்பதற்கு உதவினார்.எனக்கு வேலை இல்லை என்பதால் நான் அவளை பள்ளிக்கு கொண்டு செல்லும்வேலையை பொறுப்பெடுத்தேன்.

(“பற்குணம் A.F.C (பகுதி 101 )” தொடர்ந்து வாசிக்க…)

தன் திண்ணைக்குள் நடாத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள்.

(சாகரன்)
 
1981 மே 31 யாழ் நூலகம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்த சுதந்தர மாணவர் அமைப்பு (இதில் அனேகர் சிங்கள் மாணவர்கள் அங்கம் வகித்தனர்) யாழ் இற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். தமக்கான உயிராபத்தையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மேற்கொண்ட சுதந்திரமான விஜயம் இது. இந்த விஜயத்தின் நோக்கம்; யாழ்ப்பாணத்தில் நூலக எரிப்பு யாழ் சந்தை எரிப்பு சுன்னாகம் சந்தை எரிப்பு போன்ற விடயங்களின் உண்மைத் தன்மையை அறிந்து புகைப்படங்களின் உதவியுடன் இதனை கொழும்பு பல்கலைக் கழத்திலும் அதனூடு எனைய சிங்கள் மக்கள் மத்தியிலும் இலங்கை அரசின் செயற்பாட்டினை அம்பலப்படுத்துவதாகும்.

(“தன் திண்ணைக்குள் நடாத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள்.” தொடர்ந்து வாசிக்க…)

“உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக தொடர்ந்து ஏழாவது நாளாக இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் பொறுமையை இழந்த மக்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதாவது, “இன்று (07-02-2017) மாலை 6 மணிக்குள் உரிய பதில்கள் கிடைக்காவிட்டால் எமது போராட்ட வடிவம் மாறும், எங்களில் ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

(““உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”” தொடர்ந்து வாசிக்க…)

கண்டன அறிக்கை

ஆணாதிக்க சமுதாயமானது பொதுவெளியை ஆண்களுக்கென்றே ஒதுக்கி வைத்துள்ளது. பெண்களுக்கு என்று இந்த பால்வாத சமுதாயம் விட்டுவைத்திருப்பது வீடும் அது சார்ந்த வெளிகளும் மட்டுமே. ஆனாலும் ஆளுமைமிக்க பெண்கள் தொடர்ச்சியாக இந்த பொது – தனிப்பட்டது என்ற பாகுபாட்டிற்கு எதிராக தொடர்ந்தும் போராடி வந்துள்ளார்கள். இப்படியாக போராடும் பெண்கள் மீது பால்வாதம் தொடர்ச்சியாக தாக்குதலை தொடுத்து வந்திருக்கிறது. இப்படிப்பட்ட தாக்குதல்களின் போது பால்வாதம் எப்போதும் பெண் உடல், அதன் செயற்பாடுகள், பெண்களது நடத்தைகள் என்பவற்றின் மீதே தனது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றது. இந்த வகையில் பெண்களை தொடர்ந்தும் வீட்டினுள் முடக்கி வைப்பதற்கு பால்வாதம் பாவிக்கும் ஆயுதமாகவே பாலியல்ரீதியான தாக்குதல்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். (“கண்டன அறிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

நந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை

சில மரணங்கள் கொடுமைகள் பொருளாதாரம் சாதி அழகு அந்தஸ்து போன்றவற்றினால் சம்பந்தப்பட்டவர்களை விட மற்றவர்களினால் மறக்கப்பட்டு விடும் என்னவோ. நீதி என்பது வக்கிரமானவர்களின் கைகளில் வசமாக மாட்டிக்கொண்டு தவிப்பது மேலும் மேலும் இப்படியான நிகழ்வுகளால் நிரூபிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.

(“நந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை” தொடர்ந்து வாசிக்க…)

சிங்கள ஆட்சியாளர்களுக்கு பணிந்து போகாத வடகிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்

இணைந்த வடகிழக்கு மாகாண அரசின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் அவர்கள், மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடன், வடகிழக்கு மாகாண அரசுக்காண அதிகாரங்களை பகிர்வது தொடர்பான ஒரு சந்திப்பில் கிளிக் செய்த புகைப்படம் ஒன்றையே நீங்கள் இங்கு காண்கிறீர்கள்.
வடகிழக்கு மாகாண அரசு அமைத்து மிகக் குறுகிய காலத்தில் பெரும் நெருக்கடிகளின் மத்தியிலும் பல சாதனைகளை புரிந்தவர் திரு. வரதராஜப்பெருமாள் அவர்கள். ‘இது மாகாண சபை அல்ல மாகாண அரசு’ என இலங்கை அரசுடன் வாதிட்டவர். மாகாண அரசிற்கான அதிகாரங்களை கேட்டு இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடிகளை கொடுத்தவர். ‘எங்களோடு ஒத்துழைப்பீர்களானால் உங்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம்’ என்ற தொனியில் பேசி ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் விலைக்கு வாங்க முற்பட்ட வேளைகளில் எல்லாம் அதைத் புறக்கணித்து மாகாண அரசுக்குரிய அதிகாரங்களை பெறுவதிலேயே குறியாக இருந்தவர் திரு. வரதராஜப்பெருமாள் அவர்கள். (“சிங்கள ஆட்சியாளர்களுக்கு பணிந்து போகாத வடகிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்” தொடர்ந்து வாசிக்க…)

ஊழலுக்காகவே ஆட்சி ! இதுதாண்டா ஜெயாவின் தனித்திறமை !

தனக்காகத் தீச்சட்டி ஏந்தும் பாமரத் தமிழன் தொடங்கி உச்சநீதி மன்ற நீதிபதி முடிய அனைவரையும் விலைக்கு வாங்க முடியும் என்பதைத் தனது அரசியல் வாழ்க்கை நெடுகிலும் நிரூபித்திருக்கிறார், ஜெயா.

மறுமொழிகள்
1
‘‘நேர்மையான, திறமையான, தூய்மையான, ஒளிவுமறைவற்ற, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு நிர்வாகத்தை நான் கொடுப்பேன்.’’ (ஜெயா தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதி − ஆனந்த விகடன், 14.12.16)
‘‘அரசு நிர்வாகத்தில் தெளிவான பார்வையும் புத்திக் கூர்மையும் கொண்டவராக ஜெயலலிதா இருந்தார். (அவரது மறைவு) நிர்வாகத் திறன் கொண்ட அரசாங்கத் தலைமைக்கான இடத்திலும் வெற்றிடத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதே உண்மை.’’ (துக்ளக், 21.12.16)

(“ஊழலுக்காகவே ஆட்சி ! இதுதாண்டா ஜெயாவின் தனித்திறமை !” தொடர்ந்து வாசிக்க…)

மக்களை நேசித்த மனிதன்

டாக்டர் குழைக்காதன், தமிழின பாதுகாப்பு மையம்

அன்றொரு நாள் என்னுடைய பல வருடகால வக்கீல் நண்பரை சந்திக்க அவருடைய இடத்திற்குச் சென்றேன். ஜன்னலைக் கடந்துசெல்லும்போது நண்பர் இருக்கிறாரா என்று எட்டிப் பார்த்துக் கொண்டே நடந்தேன். ஜன்னலின் ஊடாக என்னைப் பார்த்து குட்மார்னிங் என்றுஒரு குரல் ஒலித்தது. நான் படிகளைக் கடந்து உள்ளே சென்றபோது அங்கு நண்பர் இல்லை. ஆனால் நான் சிறிதும் எதிர்பாராத வகையில்அங்கு தோழர் க. பத்மநாபா அமர்ந்திருந்தார்.

(“மக்களை நேசித்த மனிதன்” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தர், மைத்திரி, ரணில், மகிந்த…….!

“நடைமுறையில் தேசிய அரசாங்கம் என்பது இல்லை. தேசிய அரசாங்கம் என்று சொல்வது பம்மாத்து. வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் இருபெரும் சிங்கள கட்சிகள் இணைந்து ஒரு அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர் இச் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது தேசிய நல்லிணக்க அரசாங்கத்துக்கு நெருக்கடி குடுக்க கூடாது என்பது எல்லாம் மக்களை ஏமாற்றும் பம்மாத்து.

மைத்திரி – ஜனாதிபதி
ரணில் – பிரதமர்
சம்மந்தர் – எதிர்கட்சித்தலைவர்

இந்த கூட்டு, சீன சார்பு மகிந்தவை அகற்றுவதற்கு மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட கூட்டுச்தி

மைத்திரி – தனது கட்சிக்கும் விசுவாசமாக இல்லை நாட்டுக்கும் விசுவாசமாக இல்லை

ரணில் தன் நாட்டுக்கு விசுவாசமாக இல்லை

சம்மந்தர் தன் மக்களுக்கு விசுவாசமாக இல்லை

மூவரும் விசுவாசமாக இருப்பது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கே

சுயத்தை தொலைத்த இவர்களால் நல்லிணக்கத்தையும் கொடுக்க முடியாது நல்லாட்சியையும் கொடுக்க முடியாது அபிவிருத்தியையும் கொடுக்க முடியாது. இவர்கள் மூவரையும் ஓரணியில் வைத்திருப்பது அமெரிக்கா அங்கு நிலை மாறினால் இங்கு நிலை தடுமாறும் புதிய அரசியல் அமைப்பு சாசனம் என்பது கானல் நீராகவே போகப்போகிறது

இலங்கையின் அரசியல் அமைப்பு சாசன திருத்தத்துக்கு உண்மையாகவே உழைத்தவர் சந்திரிக்கா பண்டாரநாயக்காவே. அவர் சுதுநிலமே அமைப்பை உருவாக்கி புதிய அரசியல் அமைப்பு சாசனத்தை சிங்கள மக்களும் தமிழ்மக்களும் ஏற்கப்பண்ணுவதற்கான முன்முயர்சிகளை உளமாரவே முன்னெடுத்தார். அதனை சரியாக பயன்படுத்தாது விட்டமை புலிகள் செய்த முட்டாள் தனம். அன்று உயிருக்கு பயந்து சம்மந்தரும் சந்திரிக்காவின் தீர்வுத் திட்டத்தை ஆதரிக்கவில்லை இன்று சந்திரிக்கா பல் புடுங்கப்பட்ட நிலையில் உள்ளதுடன் மகிந்தவை பழிவாங்க வேண்டும் என்ற வெறியே மேலோங்கியுள்ளது.

தனது கூட்டமைப்குக்கு உள்ளேயே ஒருங்கிணைந்த செயற்பாட்டை உருவாக்க முடியாத, தானே அரசியலுக்கு கொண்டு வந்த விக்கினேஸ்வரனை தொடர்ந்தும் இணைத்து வைக்க தெரியாத சம்மந்தனா மகிந்தவை சமாதானப்படுத்த போகிறார் இவரா பெளத்த மட பீடங்களை அணுகி சமாதானபடுத்த போகின்றார்.

இவற்றை சாத்தியமாக்குவதற்கு ஒரு political will வேண்டும் அது இவர்கள் மூவரிடமும் இல்லை. மகிந்தவிடம் அது இருந்தது. அந்த political will தான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. இல்லாவிட்டால் இன்றும் தினமும் சராசரியாக 100 பேர் என்னத்துக்கு என்று தெரியாமல் இறந்து கொண்டே இருப்பார்கள். தற்போதைய இலங்கை ஒரு சமூக ஜனநாயக புரட்சிக்கான தேவையை உணர்த்தி நிற்கிறது. இந்த எந்த அரசியல்வாதிகளும் அதனை முன்னெடுக்கப் போவதும் இல்லை மாற்றத்தை கொண்டுவர போவதும் இல்லை. அதற்கான தேவை சிங்கள மக்களை தவிர தமிழ்மக்களுக்கே மிக மிக அவசியமாக உள்ளது ”

(Valavan)