மு.க.ஸ்டாலினுக்கு செல்வம் எம்.பி கடிதம்

முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கெண்டும் திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக்கைதிகளின் விடுதலை குறித்தும், கவனம் செலுத்துமாறு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பங்காளிகளின் தனிவழி சந்திப்பில் முக்கிய அமைச்சர்கள் இருவர் பங்கேற்பு

ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் சிலர், தனியான சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே ஞாயிற்றுக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

துருக்கியிடம் காபூல் விமான நிலையம்?

வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) நட்புறவு நாடுகள் ஆதரவளித்தால், ஹமிட் கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை ஏற்க துருக்கிப் படைகள் இணங்கியுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் தெரிவித்துள்ளார். நேட்டோ நட்புறவு நாடுகளுடனான சந்திப்பொன்றிலேயே குறித்த கருத்தை அகர் வெளிப்படுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள இவ்விமான நிலையத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை அங்குள்ள 500 துருக்கிப் படைகள் ஏற்குமென அகர் தெரிவித்துள்ளார். நிதி, உபகரண, அரசியல் ஆதரவானது நட்புறவு நாடுகளால் வழங்கப்பட்டாலேயே பொறுப்பை துருக்கி ஏற்குமென அகர் கூறியுள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 101-ஆல் அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில், இன்று காலை 11 மணிக்கு, இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,011-ஆக உயர்ந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.  

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 143 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

‘வவுனியா பல்கலைக்கழகம்’

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர், எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயர் அமுலாகும் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் சேதனப்பசளை உற்பத்தி ஏற்பாடு

ஆரோக்கியம் மற்றும் வினைத்திறன் வாய்ந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு நச்சுத்தன்மையற்ற உணவுக்கான மக்களின் உரிமைகள் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயத் துறைக்குள், சேதனப் பசளைப் பாவனையைக் கொண்டு வருவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

லண்டன் (கனடா) துயர்!

ஜூன் 6 கனடா வரலாற்றில் துயர் நிறைந்த ஒரு நாளாக வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. அமைதியான ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள லண்டன் நகரில் , மாலை நேர உலாவுக்காக வீதியில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் குடும்பமொன்றின் நான்கு உறுப்பினர்களை முஸ்லிம் இனத்தின் மீது வெறுப்புணர்வு மிக்க இருபது வயது இளைஞன் ஒருவன் தனது ‘பிக் அப் ட்ரக்’கால் மோதிக்கொலை செய்துள்ளான். அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுவன் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திடீர் திருத்தம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் இடமாக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு ஆகியன பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. தடுத்து வைக்கப்படும் காலம் வரையிலும் கிருலப்பனையிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவிலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலக்கம் 145, கிருலப்பனை அவன்யூ, கொழும்பு-5 கிருலப்பனை பொலிஸ் பிரிவு ஆகிய இரு இடங்களிலேயே இவ்வாறானவர்கள் தடுத்துவைக்கப்படுவார்கள் என்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.