சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்!

இந்தோனேசியாவில் உள்ள சுலவெசி தீவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேராவது உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பதற்றத்தில் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

தூபி அமைக்கும் பணி ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புரைக்கமைய, பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும் கட்டட வரைபடம் வரையும் பணி, நேற்று (13) முன்னெடுக்கப்பட்டன.

ஜல்லிக்கட்டை ரசித்தார் ராகுல் காந்தி

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவதுவழக்கம். அதில், முதல் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் தேச ஐ. அமெரிக்க பட்டியலில் கியூபா

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் தேசங்களின் ஐக்கிய அமெரிக்க பட்டியலில் கியூபாவை இணைத்துள்ளதாக ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகமானது நேற்று அறிவித்துள்ளது.

கரும்பு உண்டிருக்கும் நாம் காணும் பொங்கலில் ‘காணாது விடுவோம்’

தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான விழா தைப்பொங்கலாகும். உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதும் சூரியனுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் சொல்லும் நன்றியறிதலாகவே இது கொண்டாடப்படுகின்றது.

சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

மட்டக்களப்பு – களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் சுதாகரன் அஸ்வினி என்ற 11 வயதுச் சிறுமியின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தக்கோரியும் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தியும், பெரியகல்லாறு பிரதான வீதியில் நேற்று (13) மாலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் மேலும் 3 தொற்றாளர்கள்

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு, இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா – பட்டாணிசூர் பகுதியில், கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், வவுனியாநகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

’கொரோனா’ சமூகத்தில் வியாபிக்கவில்லை

கொரோனா வைரஸ் பரவலானது இன்னும் சமூகத்தில் அதிகம் வியாபிக்கவில்லை என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு அமைய, 3.5 தொடக்கம் 4 சதவீதமானோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் புதிதாக 23 தொற்றாளர்கள்

நீர்கொழும்பு பொதுச் சுகாதாரப் பிரிவில் புதிதாக 23 பேர், கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என, நீர்கொழும்பு நிர்வாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வசந்த சோலங்க தெரிவித்தார். நகரின் சில பிரதேசங்களில் 155 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சீனாவில் 8 மாதங்களில் முதன்முறையாக ஒருவர் மரணம்

சீனாவில், எட்டு மாதங்களில் முதன்முறையாக ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். அவர், ஹெபெய் (Hebei)மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த மாநிலத்தின் பல நகரங்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. சீனாவில், இன்று புதிதாக 138 பேரிடம் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டது.