தீவிர சிகிச்சைப் பிரிவில் கபில்தேவ்

இந்திய அணிக்கு முதன்முறையாக உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த அணியின் தலைவர் கபில் தேவுக்கு  மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.அவர், புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மட்டும் 609 பேருக்கு கொரோனா

இன்று மட்டும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 496 பேர் பேலியகொட மீன் சந்தையைச் சேர்ந்தவர்கள். 48 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களைச் சேர்ந்தவர்கள், காலி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த ஐவரும் பேருவளை மீன்பிடித் துறைகத்தில் இருபது பேரும் அவ்வாறவர்களுடன் ​நெருங்கிய தொடர்புகளை பேணியிருந்த 40 பேரும் அடங்குகின்றனர் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

20க்கு ஆதரவாக 156 வாக்குகள்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 156 வாக்குகள் கிடைத்தன. 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 65 வாக்குகள் கிடைத்தன. அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார்.

பொலிவிய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை உரிமை கோரிய சோஷலிசவாதிகள்

பொலிவியாவின் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது சுற்று வாக்களிப்பின் தேவையில்லாமல் அந்நாட்டின் சோஷலிச வேட்பாளரான லூயிஸ் அர்சே ஜனாதிபதித் தேர்தலில் வெல்வார் என உத்தியோகபூர்வமற்ற வாக்கெண்ணிக்கை நேற்று வெளிப்படுத்துகையில், அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி இவோ மொராலெஸின் இடதுசாரிக் கட்சி பதவிக்குத் திரும்புவதை அண்மித்துள்ளது.

மாநகர சபையையும் இழந்தார் மணி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் பதவியை சட்டத்தரணி வி.மணிவண்ணன் இழந்துவிட்டாரென அறிவித்துள்ள யாழ்ப்பாணம் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகர் இ.கி.அமல்ராஜ், இது தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்து சென்றமையின் ஊடாக அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து பதியுதீனை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

சிக்கலுக்குள்ளாகும் அஸார்பைஜான், ஆர்மேனியயுத்தநிறுத்தம்

புதிய தாக்குதல்களை ஆரம்பித்ததாக அஸார்பைஜான், ஆர்மேனிய இனப் படைகள் ஒன்றையொன்று மாறி மாறி நேற்று குற்றஞ்சாட்டிய நிலையில், நாகொர்னோ-கரபாஹ் தொடர்பிலான கடும் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான இரண்டு நாள்கள் மனிதாபிமான யுத்தநிறுத்தம் மிகுந்த சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

ரிஷாட் தலைமறைவு ; இருவர் கைது

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் பாதுகாப்பு உத்தியோகத்தரான ​கொன்ஸ்டபிள் ஒருவரும் கணக்காளர் ஒருவரும் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ரிஷாட் பயன்படுத்திய கார்கள் இரண்டும் துப்பாக்கிகள் 2 என்பனவும் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனைக் கைதுசெய்யுமாறு, நேற்றைய தினம் பொலிஸாருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளதுடன், அவரைக் கைதுசெய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துபாயில் இருக்க இடம் இல்லாமல் பொது பூங்காவில் காலத்தை கழிக்கும் இலங்கை தொழிலாளர்கள் இலங்கை அரசு கண்டுகொள்வதே இல்லை..

(Siyana Siyana)

தங்கி இருக்க இடமில்லாமல் உணவுக்கு வேறு வழி தெரியாமல் உயிரை பாதுகாத்துக்கொள்ள பொது பூங்காவில் தங்கியிருந்து வாழ்க்கையை கடத்தும் அப்பாவி ஏழைகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலை இழந்த இலங்கையர்கள் துபாயில் உள்ள செட்டா என்ற பூங்காவில் தங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா நெருக்கடியால் வியாபார நடவடிக்கைகள் பாதிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டு கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலைமை காரணமாக, மாத்தளை மற்றும் அதனை அண்மித்த நகரங்களில், வியாபார நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.