சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற இருவர் கைது

சட்டவிரோதமாகப் படகு மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்த இருவர் உள்ளிட்ட நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்.தொண்டமானாறு வடக்குக் கடற்பகுதியில் வைத்​தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் செயற்பாடு நிறுத்தம்….பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு

தனிமைப்படுத்தல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, முதலீட்டு ஊடக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் அனைத்து பாடசாலைகளை மூடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மொட்டின் தேர்தல் பிரசாரம் தற்காலிகமாக நிறுத்தம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் சகல பிரசார நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன ​பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதற்கமைய, 13,14,15 ஆம் திகதிகளில், ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டங்கள் அனைத்தும் இரத்துச்செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

‘ஐக்கிய அமெரிக்கா வெளியேறுகிறது’

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அடுத்தாண்டு ஜூலை மாதம் ஆறாம் திகதி ஐக்கிய அமெரிக்கா வெளியேறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் நேற்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தலை ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடமிருந்து பெற்றதைத் தொடர்ந்தே மேற்குறித்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ளது.

24 மணிநேரத்தில் 256 பேருக்கு தொற்று

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஒருவர் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். அதற்கமைய இலங்கையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1980ஆக உயர்ந்துள்ளது. ஐ.டி.எச்-இல் சிகிச்சைப்பெற்று வந்த ஒருவரே இறுதியாக குணமடைந்துள்ளார். இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் 256 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ், மன்னாரில் 21 பேர் சுய தனிமைப்படுத்தல்

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ்: “இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்” – எச்சரிக்கும் ஆய்வு

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டறியப்படாத பட்சத்தில் இந்தியாவில் இதே நிலை நீடித்தால் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலிருந்து ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி எனும் பிரபல பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை குரங்கு பன்றிகளின் அட்டகாசம் யாழ் குடா நாட்டில்

யாழ் குடாவினில் காட்டுப் பன்றிகள், குரங்குகளின் தாக்குதல்கள் நீண்ட காலமாக இருந்துவரும்போதும், அண்மைக்காலத்தில் சிறுத்தைகள் வளர்ப்பு மிருகங்களைத் தாக்கும் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளன.

பிரியங்கா காந்தி

கடந்த சில மாதங்களாக உத்திரப்பிரதேச அரசியலை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும். உத்திரப்பிரதேச அரசை தீவிரமாக எதிர்த்து மக்களுக்கு ஆதரவான போராட்டக் களத்தில் நிற்பவர்கள்
பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களான மாயாவதி,அகிலேஷ் யாதவ் அல்ல. பிரியங்கா காந்தி தான்.

குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர் துயரத்தில் தீவிரமாக துணைநின்றவர். இதற்காக அவர் மீது,உ.பி. காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீதும் ஏராளமான வழக்குகள்,கைதுகள்.

உத்திரப்பிரதேச அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக பிரியங்கா காந்தி உருவெடுத்து வருகிறார். தேசிய அரசியலில் தெளிவான இடம் இருந்தும் உத்திரப்பிரதேச அரசியலில் காங்கிரஸ் கட்சி தனக்கு இட்ட அரசியல் பணியை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார் பிரியங்கா.

இதைப் பொறுக்கமுடியாத மோடி அரசு பிரியங்காவின் பாதுகாப்பு கருதி அரசு வழங்கிய வீட்டை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

சுற்றிப்பார்த்தாலே கால்வலி எடுக்கும் ஆனந்த பவனம் மாளிகையையே நாட்டுக்கு அர்ப்பணித்த குடும்பம் இந்த அல்பத்தனத்திற்கா அஞ்சிவிடப்போகிறது.

பிரியங்கா காந்தி தான் இந்திராவின் பேத்தி என்று நிரூபிப்பார். அந்த பயம் தான் பிஜேபியை விரட்டுகிறது.

இந்த அரசையும் நிர்வாகத்தையும் இனிமேலும் எப்படி நம்புவது?

ஜூன் 16 அன்று கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களால் காப்பாற்றி கரைக்குக் கொண்டுவரப்பட்டு, மணல்மேல்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார் தங்கச்சிமடம் சேசு. ஜூன் 13-ல் கடலுக்குச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வில்லியம் ஹைடோவின் விசைப்படகு, அன்று இரவே நடுக்கடலில் விபத்துக்குள்ளானது. கரோனா மற்றும் தடைக்கால நிறுத்தம் போன்றவற்றுக்குப் பின்னான பயணம் அது. அதிகம் பராமரிக்கப்படாத பழுதான பழைய விசைப்படகு என்பதால், ஆழ்கடலில் படகுக்குள் கடல்நீர் வர ஆரம்பித்திருக்கிறது. தண்ணீரை வெளியேற்றும் பம்ப் வேலை செய்யவில்லை. படகு மூழ்கும் அபாயத்தில் இருக்க, அனைவரும் கிடைத்ததைப் பிடித்துக்கொண்டு கடலில் சாடியிருக்கிறார்கள்.