மொட்டின் தேர்தல் பிரசாரம் தற்காலிகமாக நிறுத்தம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் சகல பிரசார நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன ​பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதற்கமைய, 13,14,15 ஆம் திகதிகளில், ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டங்கள் அனைத்தும் இரத்துச்செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.