கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இரண்டு விடுதிகள் கோப்பாய் பிரதேசத்தில் கடமையாற்றி தற்போது விடுமுறையில் உள்ள இராணுவ வீரர்களை இருபத்தொரு நாள்கள் தனிமைப்படுத்துவதற்காக, நேற்று முன்தினம் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுருந்த நிலையில், நேற்றைய தினம் அந்த பகுதியில் பொது மக்களின் எதிர்ப்பு ஏதாவது ஏற்படலாம் என்ற ரீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு, பொலிஸார் ரோந்து நடவடிக்கையும் பலப்படுத்தப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது. எனினும் அந்த இடத்தில் எந்தவொரு போராட்டமும் பொதுமக்களால் முன்னெடுக்கப்படவில்லை.
Category: செய்திகள்
ஜிம்பாப்வேயில் இருமுனைத் தாக்குதல்
ஜிம்பாப்வே இரண்டு முனைகளில் போராடிக்கொண்டிருக்கிறது. ஆம்! அங்கே மலேரியா பெருந்தொற்றும் ஏற்பட்டிருக்கிறது. 1.35 லட்சம் பேருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது. வெப்பமும் ஈரப்பதமும் கொண்ட பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில்தான் ஜிம்பாப்வேயில் மலேரியா போன்ற தொற்றுக்கள் ஏற்படும். ஏற்கெனவே, வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் அந்த நாட்டில் கடந்த இருபதாண்டுகளாக மருத்துவக் கட்டமைப்பும் சீர்குலைந்துபோயிருக்கிறது. இந்த நிலையில் கரோனா, மலேரியா என்று இரண்டு பக்கத் தாக்குதல் அங்கு ஏற்பட்டிருக்கிறது. மலேரியா மட்டுமல்ல; எய்ட்ஸ், காசநோய் ஆகியவையும் அங்கே அதிகம் பேரைக் கொல்லும் நோய்கள். செய்வதறியாது தவிக்கிறது ஜிம்பாப்வே.
இது US Hotal, Jaffna இன் பதிவு
தமிழகம், குஜராத் உள்பட 3 மாநிலங்களில் கரோனா நிலவரத்தை ஆய்வு செய்ய மத்தியக் குழு: உள்துறை அமைச்சகம் அனுப்பியது
இலங்கையில் தொற்றாளர்கள் 368
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 368ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் இன்றுமட்டும் 38 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் இவர்களில் நால்வர் கொழும்பு-12, பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியவர்களெனவும், 29 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டல் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அந்தவகையில், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 368ஆக அதிகரித்துள்ளது.