180 பேருடன் சென்ற உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது

ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், 180 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையம் அருகே கீழே விழுந்து நொறுங்கியதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் உடனடியாக அமுலுக்கு வரும் சட்டங்கள்.

1. குடி போதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டால் 10 வருட கடூழிய சிறை.

2. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்வது முற்றாக இன்று முதல் தடை.

3.பாடசாலை அனுமதியின் போது நேரடியாகவோ மறைமுகமாகவோ லஞ்சம் கோரப்பட்டால் 48 மணித்தியாலத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

சென்னை: தமிழர் சமூக ஜனநாயக கட்சி

தமிழர் சமூக ஜனநாயக கட்சி, ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடையேயான கலந்துரையாடல் சென்னையில் 5.1.2020 மாலை நடைபெற்றது. சமகால இலங்கை அரசியல், எமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டது. தோழர் பத்மநாபா அவர்களது ஆரம்ப கால நண்பர்களும்,எமது கட்சிக்காக தமிழகத்தில் அரும்பாடு பட்ட தோழர்கள் இதில் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும்

மேய்ச்சல் தரை இல்லாததால் மடியும் ஆபத்தில் கால்நடைகள்

கிளிநொச்சி கோணாவில் கிராமத்தில் மாடுகள் வளர்ப்போர் அவதி. கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் சுமார் 500 மாடுகள் வரை வளர்த்து வரும் கால்நடை வளர்ப்பாளர் ஒருவர் தனது மாடுகளை இனிமேல் வளர்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு மாடுகளை மேய்ச்சலுக்காக எங்கு கொண்டு செல்வது என்று தெரியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை?

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு, மத்திய அரசினை வலியுறுத்தும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (06) தொடங்கியது. முதல் நாளான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் உரையாற்றினார்.

136 வெளிநாட்டவர்கள் கைது; பொலிஸார் அதிரடி

செல்லுபடியான வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 136 வெளிநாட்டு பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புக்கு அமைய செல்லுபடியான வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகளை கைதுசெய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். விமான நிலையம் குறித்து விசாரணை

யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற சென்னைக்கான விமானப் போக்குவரத்துக்காக, பயணிகளிடம் இருந்து, விமான நிலைய வரியாகப் பெருந்தொகைப் பணம் அறவிடப்படுகின்றமை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு, அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இனியபாரதிக்கு தொடர் மறியல்

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான “இனியபாரதி” என அழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமாரை, இம்மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மேலதிக நீதவான் பி.சிவகுமார் உத்தரவிட்டார்.