காஷ்மீர் விமான நிலையத்தில் தடுத்துவைப்பு

விமான நிலையத்தில்
ராஜா, யெச்சூரி.

உடல்நலமற்றிருக்கும்
மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ
மொஹம்மத் யூசுஃப் தரிகமியைச்
சந்திப்பதற்காக
கஷ்மீர் சென்ற
மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர்
சீதாராம் யெச்சூரி,
இந்திய கம்யூனிஸ்ட்
பொதுச்செயலாளர் D.ராஜா ஆகியோர்
ஸ்ரீநகர் விமானநிலைய வளாகத்திலேயே
தடுத்து நிறுத்தி
தடுப்புக்காவலில்
வைக்கப்பட்டார்கள்.

பின்னர் டெல்லிக்குத்
திருப்பியனுப்பப்பட்டார்கள்.

ஏற்கனவே ஜம்மு கஷ்மீர் ஆளுநருக்கு
தங்கள் வருகையின் நோக்கத்தை
கடிதமெழுதி அறிவித்துவிட்டுத்தான்
சென்றனர் என்பது குறிக்கத்தக்து.

‘இது சட்டவிரோதச் செயல்.
ஜனநாயகத்துக்கு எதிரானது.
எதிர்த்துப் போராடுவோம்!’ என்று
மார்க்சிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.

மாநில அந்தஸ்தை இழக்கிறது காஷ்மீர்

மத்திய அமைச்சரவையின் முடிவின்படி ஜம்மு-காஷ்மீர் என்ற தனி மாநிலம் இனி லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

வெள்ளவத்தை மோதல்; மூன்று பொலிஸார் வைத்தியசாலையில்

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக காயமடைந்த ஆறு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 6 பேரே இவ்வாறு காயமடைந்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

என்னை விமர்சிக்கும் முன் தமிழரசுக் கட்சித் உறுப்பினர்களான சேனாதி சிறீதரன் சரவணபவன் ஆகியோர் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – நாமல் ராஜபக்ச

தமிழ்த் தலைமைகள் சேறுபூச விளைந்தால் தமிழ் மக்களின் முன் ஒவ்வொருவரின் முகத்திரைகளும் கிழிக்கப்படும் – நாமல் சூளுரை
2019-08-03
எம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒருமுறை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து நான் யாழ்ப்பாணம் சென்று மக்களை சந்தித்து வந்த பின் எம்மைப்பற்றி விமர்சிக்க அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது என அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

மஹிந்தவுடன் ஈரோஸ் இணைந்தது

ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் கூட்டணியில் இருந்து வெளியேறி, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் ஈரோஸ் கட்சி இணைந்து கொண்டுள்ளது. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டனியின் சின்னத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப், துஸ்யந்தன் தலைமையிலான ஈரோஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

மனிதனின் ஆயுள் 300 ஆண்டு.

பிறந்த முயல் குட்டி மூன்று மாதத்தில் பருவத்திற்கு வந்து விடுகிறது மீண்டும் குட்டி போட ஆரம்பித்து விடுகின்றது, அதனுடைய ஆயுள் 60 மாதம்,

பிறந்த ஆட்டுக்குட்டி அரை வருடத்தில் வயதுக்கு வந்து குட்டி போட ஆரம்பிக்கின்றது, ஆடுகள் சுமார் 10 ஆண்டுகள் உயிர் வாழும்

ஒரு பசு மாட்டின் கன்று பிறந்த ஒரு வருடத்தில் பருவம் அடைந்து கன்று போட ஆரம்பிக்கின்றது, பசு மாட்டின் ஆயுள் சுமார் 20 வருடங்கள் ஆகும்,

02.01.2019 முதல் யாழ்ப்பாணம் கொழும்புக்கு 6 புகையிரத சேவைகள்.புதிய நேர அட்டவணை

யாழ்ப்பாணம் புறப்படுதல் – கொழும்பு சென்றடைதல்.
———————————————————
உத்தரதேவி
காலை 6.10 மணி – பிற்பகல் 1.15 மணி
புதுரெயின்-01
காலை 6.25 மணி – பிற்பகல் 4.00 மணி
யாழ்தேவி
காலை 9.35 மணி – இரவு 7.15 மணி
ஏசி இன்ரசிற்ரி
பி.ப.1.45 மணி – இரவு 8.15 மணி
புதுரெயின்-02
மாலை 6.40 மணி-அடுத்த நாள் காலை 4.30மணி 
தபால் ரெயின்- Mail Train
இரவு 8.25 மணி -அடுத்த நாள் காலை 5.30மணி

கொழும்பு புறப்படுதல் – யாழ்ப்பாணம் வந்தடைதல்
———————————————————–
ஏசி இன்ரசிற்ரி
காலை 5.45 மணி – பிற்பகல் 12.05 மணி 
யாழ்தேவி
காலை 6.30 மணி – பிற்பகல் 3.00 மணி
புதுரெயின் – 01
காலை 8.50 மணி – மாலை 6.30 மணி
உத்திரதேவி
காலை 11.50 மணி – மாலை 6.15 மணி 
புதுரெயின் -02
இரவு 7.15 மணி – அடுத்த நாள் காலை 4.30 மணி
தபால் ரெயின் -Night Mail
இரவு 9.00 மணி – அடுத்த நாள் காலை 5.30 மணி
————————————————————-
தற்போது கொழும்பு யாழ் பயணம் செய்யும் ஏசி இன்ரசிற்ரி ரெயினில் F பெட்டியைத் திருத்த வேலைக்கெனக் கழட்டி 2 மாதங்கள். அதில் 54 பேர் பயணம் செய்யலாம்.
அப் பெட்டி இன்னமும் பூட்டப்படவில்லை.

அது குறித்து எமது அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கவனம் எடுக்க வேண்டும்.

தடுமாறுகிறதா சீனப் பொருளாதாரம்?

குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களையும் அதிக அளவிலான ஏற்றுமதியையும் அடிப்படையாகக் கொண்டு நீண்ட காலம் செழித்துக்கொண்டிருந்த சீனாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது தடுமாற ஆரம்பித்திருக்கிறது. ஆண்டின் இரண்டாவது பாதியில், சீனாவின் பொருளாதாரம் 6.2% மட்டுமே வளர்ச்சியடைந்திருப்பதாக சீனாவின் தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டிருக்கும் தரவுகள் தெரிவிக்கின்றன. 27 ஆண்டுகளில் குறைவான வளர்ச்சி இது என்பதுதான் இந்தத் தரவை முக்கியத்துவப்படுத்துகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.4% ஆகவும், 2018 முழுவதுமாக 6.6% ஆகவும் வளர்ச்சி இருந்தது என்பதைப் பார்க்க வேண்டும்.