காஷ்மீர் விமான நிலையத்தில் தடுத்துவைப்பு

விமான நிலையத்தில்
ராஜா, யெச்சூரி.

உடல்நலமற்றிருக்கும்
மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ
மொஹம்மத் யூசுஃப் தரிகமியைச்
சந்திப்பதற்காக
கஷ்மீர் சென்ற
மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர்
சீதாராம் யெச்சூரி,
இந்திய கம்யூனிஸ்ட்
பொதுச்செயலாளர் D.ராஜா ஆகியோர்
ஸ்ரீநகர் விமானநிலைய வளாகத்திலேயே
தடுத்து நிறுத்தி
தடுப்புக்காவலில்
வைக்கப்பட்டார்கள்.

பின்னர் டெல்லிக்குத்
திருப்பியனுப்பப்பட்டார்கள்.

ஏற்கனவே ஜம்மு கஷ்மீர் ஆளுநருக்கு
தங்கள் வருகையின் நோக்கத்தை
கடிதமெழுதி அறிவித்துவிட்டுத்தான்
சென்றனர் என்பது குறிக்கத்தக்து.

‘இது சட்டவிரோதச் செயல்.
ஜனநாயகத்துக்கு எதிரானது.
எதிர்த்துப் போராடுவோம்!’ என்று
மார்க்சிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.