மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!

(சாகரன்)
மழை நின்றாகிவிடது. வெள்ளமும் வடிய ஆரம்பித்துவிட்டது, அங்காங்கே கும்பை கூழம் சேறு சகதிகளே மிஞ்சிக்கிடக்கின்றது. தன்னார்வு நிறுவனங்கள் தம்மால் சேகரிக்கப்பட்ட பொருட்களை தற்காலிகமாக சேகரித்து வைக்க ‘உதவி’ சிலர் இனிமேல் நீங்கள் இங்கிருந்து எந்த பொருளையும் எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்ற மிரடடல்;களும் ஆரம்பமாகிவிட்டன. நிவாரணப் பொருட்களை வழிப்பறி செய்யும் கும்பல்களும் தங்கள் பேட்டைகளில் சண்டித்தனம் செய்து பொருட்களை பறித்தல் என்பதுவும் ஆரம்பமாகிவிட்டது. யாரோ தன்னார்வத்துடன் சேர்த்த பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கும் போது தமது கொடியினை அதில் திணிக்கும் பொறுப்பற்ற அரசியல் கட்சிகள் தலைவர்களைக் கொண்ட சென்னையில் இதனைத் தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும். பிழையான வழியில் பணம் சேர்காதவனை ‘பிழைக்கத் தெரியாத ஆள்’ என்று தூற்றுவதும,; லஞ்சம் வாங்கும் பிள்ளையை சோறு போடமாட்டேன் என்று விரட்டாத தாயும், சின்னவீடு வைத்திருத்தல் அவர் தகுதிக்கு பொருத்தனமானது என்று பெருமைப்படும் அரசியல் தொண்டர்களும், இதனைக் கண்டும் கணாமலும் இருக்கு வீட்டம்மாவும் இருக்கும் நகரத்தில் வெள்ள நிவாரணத்தில் நடக்கும் கொள்ளைகளை எதிர்பார்காமல் இருக்க முடியாதுதானே….?

(“மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!” தொடர்ந்து வாசிக்க…)

விதைத்த வினையையே ‘அவரும்’ அறுவடை செய்தார்

பிரேமதாசா பல கொலைகளுக்கு காரணமானவர் என சந்தேகிக்கப் பட்டவர். அவர் விதைத்ததைத்தானே அவரால் அறுத்திருக்க முடியும் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம் , அப்படியே ராஜீவும் இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி தமிழரைக் கொன்றவர் , எனவே அவரின் கொலையையும் (சாவையும்) , அவர் விதைத்த வினையையே அவரும் அறுவடை செய்தார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் இந்த இருவர் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை , அரசியல் தலைவர்களை அழித்த பிரபாகரன் கூட தான் விதைத்ததைதான் அறுவடை செய்துள்ளார் என்பதை எழுத தமிழ் பேராசிரியர்களைக் காணவில்லை!

(“விதைத்த வினையையே ‘அவரும்’ அறுவடை செய்தார்” தொடர்ந்து வாசிக்க…)

வெள்ளத்தில் தத்தளித்த மக்களிடம் அரசியல் ஆதாயம் தேடிய பிரமுகர்கள்

 

நாட்களே பெய்த பெரு மழையால் சிதைந்து கிடக்கிறது சிங்காரச் செ சில ன்னை. தமிழகத்தின் தலைநகர் என்று மார்தட்டிக் கொண்ட சென்னை இன்று ஏனைய மாவட்டங்களிடம் மடிப்பிச்சை கேட்டு நிற்கிறது. வருடந்தோறும் பெய்யும் பருவமழையால் புயல் கடக்கும் பூமியாக கடலூர் மட்டுமே மாட்டிக்கொள்ள, இம்முறை தலைநகரிலும் மழை பெய்ததால் உலகப் புகழ்பெற்றிருக்கிறது சென்னை. சுனாமி எனும் ஆழிக் கூத்தைத் தோற்கடித்த இந்த மழை சென்னையில் ஆடியிருப்பதோ அகோரத் தாண்டவம்.

(“வெள்ளத்தில் தத்தளித்த மக்களிடம் அரசியல் ஆதாயம் தேடிய பிரமுகர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

வல்லாதிக்க நாடுகளின் கைக்கருவிகளாக செயற்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்

ரிஸ் உலகின் மிக அழகிய நகரம். புரட்சிகளின் தலைநகரம், வரலாற்றின் முதல் ஜனநாயகப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி, 1789 பாஸ்தில் சிறையுடைப்பிலிருந்து வெடித்துக் கிளம்பியது இங்கேதான். உலகின் முதல் பாட்டாளி வர்க்கப் புரட்சி பாரிஸ் கொம்யூன் 1881 வசந்தத்தின் முடி முழக்கமாய் எழுந்ததும் இங்கேதான். உலக வரலாற்றில் பாரிஸ் நகருக்குள்ள பங்குபற்றி எழுதுவதென்றால் எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால் இன்றைக்கு உலகம் அச்சத்தின் விழிகளினூடே பாரிஸைப் பார்க்கிறது. ஐ.எஸ். அமைப்பு நடத்திய தாக்குதலில் அரசுக் கணக்கின்படி 129 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

(“வல்லாதிக்க நாடுகளின் கைக்கருவிகளாக செயற்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்” தொடர்ந்து வாசிக்க…)

இனவாதத்துக்கு உடனடியாக விலங்கிடப்பட வேண்டும்

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஆறு வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் 30 வருடங்களாக போரினால் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட மக்களால் இன்னமும் முழு அளவில் நிம்மதிப் பெருமூச்சு விட முடியாத நிலைமையே காணப்படுகின்றது. வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களாகவே இருந்தனர். இவர்கள் எப்போது தமது சொந்த வாழ்விடங்களுக்குப் போக முடியுமோ என்ற ஏக்கப் பெருமூச்சுவிட்ட வண்ணமே இருந்தனர், இன்றும் இருக்கின்றனர்.

(“இனவாதத்துக்கு உடனடியாக விலங்கிடப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

எனது மகளை விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றார்கள்

எனது மகளை விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றார்கள். இதுவரையில் எங்கு இருக்கின்றார் என தெரியவில்லை காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தாயார் ஒருவர் கதறி அழுதார். காணாமல் போனோவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 14ஆவது அமர்வு யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (11) நடைபெற்றபோது, அதில் சாட்சியமளிக்கையிலேயே தனது காணாமல் போன மகள் குறித்து சாட்சியமளித்த தாய் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“எனது மகளை விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றார்கள்” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம்கள் பற்றிய அமெரிக்காவின் இரு முகங்கள்

முஸ்லிம்கள் பற்றி அமெரிக்காவின் இரு முக்கிய புள்ளிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கை உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்களிடையே மனக்கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. உலக பொலிஸ்காரன் என்ற கற்பனைப் பதவியில் இருத்தப்படிருக்கும் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின், ஒன்றுக்கொன்று முரணான இரு வௌ;வேறு முகங்களை இந்த கருத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இதில் ஒன்று- அழகான, அரவணைக்கும், இராஜதந்திர முகம். மற்றையது- விகாரமான, வெறுத்தொதுக்கும், மேற்குலக முகம்.

(“முஸ்லிம்கள் பற்றிய அமெரிக்காவின் இரு முகங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

மலேசியாவில் புலிகளின் விமானங்கள்

 

மலேசியாவின் முதன்மை விமான நிலையமான கோலாலம்பூர் விமான நிலையத்தில் 3 கார்கோ ஜெட் விமானங்கள் உரிமை கோர ஆளின்றி அநாதையாக நிற்பதால், அதைக் கண்டுபிடிக்க விமான நிலைய அதிகாரிகள் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துள்ளனர். த ஸ்டார் அண்ட் சின் சூ என்ற பத்திரிக்கையில் வௌியாகியுள்ளஅந்த விளம்பரத்தில், “ TF-ARM, TF-ARN, TF-ARH என்ற பதிவு எண் கொண்ட 3 போயிங் 747 -200F ரக விமானங்கள் மலேஸிய விமான நிலையத்தில் உள்ளன

(“மலேசியாவில் புலிகளின் விமானங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

சர்வகட்சிக் கூட்டம் இன்று; சி.விக்கு அழைப்பில்லை

எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், சர்வகட்சிக் கூட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது. எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் அந்த ஆணைக்குழுவுக்குக் கிடைத்துள்ள 525 முறைப்பாடுகள் ஆகியவற்றை, கட்சி உறுப்பினர்களிடம் கையளித்து அவை அவை தொடர்பில் இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்றும் அறியமுடிகின்றது.

(“சர்வகட்சிக் கூட்டம் இன்று; சி.விக்கு அழைப்பில்லை” தொடர்ந்து வாசிக்க…)

சென்னையின் பருவநிலைக்கான சில உடல்நல வழிகாட்டுதல்கள்!

(ம.செந்தமிழன்)

(சென்னையில் இருப்பவர்களின் உடல்நலனுக்கான சில அடிப்படைச் செய்திகளை இப்பதிவில் எழுதுகிறேன். நவீன மருத்துவத்தை மட்டுமே நாடுவோர் இப்பதிவைப் பின்பற்ற வேண்டாம். இது அவர்களுக்கானது அல்ல.)

ஏறத்தாழ ஒரு மாத காலமாக வெயில் உரைக்காத சூழல் சென்னையில் உள்ளது. மழை, வெள்ளம், புயல் ஆகியவற்றைவிட இந்தப் பருவநிலை கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. போதுமான வெப்பம் வானிலிருந்து இறங்கும்போதுதான் உயிர்ச் சூழல் பாதுகாப்பு உறுதியடையும். இப்போதை சென்னை பருவநிலை, முரண்பாடுகள் நிறைந்தது.

(“சென்னையின் பருவநிலைக்கான சில உடல்நல வழிகாட்டுதல்கள்!” தொடர்ந்து வாசிக்க…)