(சாகரன்)
மழை நின்றாகிவிடது. வெள்ளமும் வடிய ஆரம்பித்துவிட்டது, அங்காங்கே கும்பை கூழம் சேறு சகதிகளே மிஞ்சிக்கிடக்கின்றது. தன்னார்வு நிறுவனங்கள் தம்மால் சேகரிக்கப்பட்ட பொருட்களை தற்காலிகமாக சேகரித்து வைக்க ‘உதவி’ சிலர் இனிமேல் நீங்கள் இங்கிருந்து எந்த பொருளையும் எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்ற மிரடடல்;களும் ஆரம்பமாகிவிட்டன. நிவாரணப் பொருட்களை வழிப்பறி செய்யும் கும்பல்களும் தங்கள் பேட்டைகளில் சண்டித்தனம் செய்து பொருட்களை பறித்தல் என்பதுவும் ஆரம்பமாகிவிட்டது. யாரோ தன்னார்வத்துடன் சேர்த்த பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கும் போது தமது கொடியினை அதில் திணிக்கும் பொறுப்பற்ற அரசியல் கட்சிகள் தலைவர்களைக் கொண்ட சென்னையில் இதனைத் தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும். பிழையான வழியில் பணம் சேர்காதவனை ‘பிழைக்கத் தெரியாத ஆள்’ என்று தூற்றுவதும,; லஞ்சம் வாங்கும் பிள்ளையை சோறு போடமாட்டேன் என்று விரட்டாத தாயும், சின்னவீடு வைத்திருத்தல் அவர் தகுதிக்கு பொருத்தனமானது என்று பெருமைப்படும் அரசியல் தொண்டர்களும், இதனைக் கண்டும் கணாமலும் இருக்கு வீட்டம்மாவும் இருக்கும் நகரத்தில் வெள்ள நிவாரணத்தில் நடக்கும் கொள்ளைகளை எதிர்பார்காமல் இருக்க முடியாதுதானே….?
(“மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!” தொடர்ந்து வாசிக்க…)