மயிலிட்டியில் கவனயீர்ப்பு..!

வலி.வடக்கு பலாலி, மயிலிட்டி பகுதிகளான எமது பூர்வீகக் காணிகளை விடுவிப்பது எப்போது….?மயிலிட்டியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்…அரசியல்வாதிகளோ மௌனம்…!

இந்தியா செல்ல முயன்ற 12 பேருக்கு ஏற்பட்ட நிலை

மன்னார் – தாழ்வுபாடு கடல் பகுதியூடாக இந்தியாவிற்கு செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்ட 12 நபர்களில் 5 பேரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டதோடு, ஏனைய 7 சிறுவர்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

மருதானையில் பதற்றம்

அடக்குமுறைக்கு எதிராக சோசலிச இளைஞர் சங்கத்தால் மருதானை டீன்ஸ் வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பியா: கடன் பொறிக்குள் சிக்கிய நாடு

இலங்கையைப் போலவே கடன் பொறியில் சிக்கி, பொருளாதார நெருக்கடியில் அல்லல் படும் ஒரு நாடுதான் சம்பியா. சீனாவிடமிருந்து தான் பெற்ற அதிக கடனுக்காக தனது நாட்டின் கேந்திர முக்கியத்துவமிக்க, பெறுமதிமிக்க இடங்களை பறிகொடுத்து வரும் நாடுதான் சம்பியா.

சிரியாவில் அகதிகள் படகு விபத்து: 77 பேர் உயிரிழப்பு

சிரியாவின் ஆர்வட் தீவுக்கு அருகில் உள்ள கடற்பிராந்தியத்தில் அகதிகள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 77 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படகில்  லெபனான், சிரியா மற்றும் பலஸ்தீன நாடுகளைச் சேர்ந்த 120 பேர் பயணித்துள்ளனர். அனர்த்தம் இடம்பெற்றதை அடுத்து 20 க்கும் மேற்பட்டவர்கள் காப்பாற்றப்பட்டு சிரியாவின் டாடாஸ் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம்

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அதி முக்கியமான இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணம் நிலாவரைக் கிணற்றினுள் நடந்த ஆய்வினைப் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்

யாழ்ப்பாணம் நிலாவரைக் கிணற்றினுள் நடந்த ஆய்வினைப் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்

பெயர்க் காரணம்: பண்டைய காலத்தில் இக் கிணற்றின் ஆழம் யாருக்கும் தெரியாததால் இதன் ஆழம் வானில் உள்ள நிலா வரைக்கும் என சொல்லப்பட்டதால் இதன் பெயர் நிலாவரை என உருவாகியது.

திருநங்கைகளுக்கு எதிராக அதிகரிக்கும் தாக்குதல்கள்

பாகிஸ்தானில் அண்மைக் காலமாக திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுமார் 10,418 திருநங்கைகள் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து அண்மையில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆடை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம்

அரச உத்தியோகத்தர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட  தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன இதனை தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலை விவகாரம்; கைது வேட்டையில் பொலிஸார்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் நேற்றைய தினம் குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.