நம்பிக்கையில்லா பிரேரணைகள் கையளிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்துள்ளது என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சுமந்திரனை கடுமையாக எச்சரித்தார் செந்தில்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

300 மில்லியன் யுவான் வழங்க சீனா தீர்மானம்

மருந்து, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக சீன 300 மில்லியன் சீன யுவான்களை இலங்கைக்கு நிவாரணமாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தோழருக்கு அஞ்சலி

சுன்னாகம் தெற்கை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் விங்கன் (ஐயாத்துரை லிங்கேஸ்வரன்) தனது 55வது வயதில் நேற்று 30.04.2022 காலமான துயரச் செய்தி கிடைத்திருக்கிறது.

Opinion:

Partisan intellectuals betrayed the nation

(By H. L.D. Mahindapala)

The utter failure of our intellectuals to grasp the turbulent historical and political undercurrents that destroyed all possibilities of peaceful co-existence has been one of the main contributory factors that prolonged and sustained the 33-year-old ‘war’ launched officially by the Tamil leadership on May 14, 1976 at Vadukoddai.

கழுத்தை நெரிக்கும் சீனா

கம்ப இராமாயணத்தில், இறுதிப் போரின் போது நிராயுதபாணியாக நின்ற இராவணனை “இன்றுபோய் நாளை வா“ என்று இராமன் கூறியபோது, இராவணன் கலங்கியதை“கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்“ என்று கம்பரால் உவமிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் அருணாச்சலக் கவிராயருக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. முதலில் இவ்வரியை யார் எழுதியது என்ற ஆராய்வை விட இந்த கடன் பட்ட நிலைமையே இலங்கைக்கும் இன்று ஏற்பட்டுள்ளது. அதிக கடன்களால் கலங்கி நிற்கிறது இலங்கை என்பதே நிதர்சனமாகும்.

வாலாஜா பள்ளிவாசலும் சிந்தி இந்துக்களும்: நல்லிணக்கத்தின் தமிழ்நாட்டு மாதிரி!

சமீபத்தில் நண்பர் ஒருவருடன் திருவல்லிக்கேணியில் இருக்கும் 227 ஆண்டு பழமையான வாலாஜா பள்ளிவாசலுக்கு (பெரிய பள்ளிவாசல்) சென்றேன். நான் சென்னைவாசி கிடையாது. வாலாஜா பள்ளிவாசலைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் இப்போதுதான் முதன்முறையாகச் சென்றேன். அங்கு நோன்பு திறக்கும் நிகழ்வு மிகச் சிறப்பான அனுபவமாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

அறிவுக்களவு செய்யும் யாழ்பல்கலை பேராசிரியர்கள்: முன்நாள் விரிவுரையாளர் பகிரங்க குற்றச்சாட்டு!!

யாழ் பலக்லைக்கழக கல்விசார் ஊழியர்களின் (Academic Staff) கல்விசார் மற்றும் அறிவுசார் மோசடிகளை (Academic and Intellectual Frauds) மேற்கொண்டுவருவதான பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார் யாழ் பல்கலையின் முன்நாள் விரிவுரையாளரான கலாநிதி முத்துகிருஷ்ணா சர்வானந்தன் யாழ் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சில விரிவுரையாளர்கள், பிற கல்விமான்களின் கல்விசார் வெளியீடுகளை அல்லது கருத்துக்கள் மற்றும் உள்ளடக்கங்களை திருடி, பிரதிபண்ணி தமது பெயரில் பிரசுரிப்பது…..

ஜே.வி.பிக்கு இடம் கொடுத்ததே வந்த தவறு!

(மணியம்)

இன்று இலங்கையில் நடைபெறும் வன்முறை செயற்பாடுகளின் பின்னணியில் ஜே.வி.பி. என்ற சிங்கள இனவாத குட்டி முதலாளித்துவ கட்சி இருப்பது அரசியலை விளங்கிக் கொண்ட எல்லோருக்கும் தெரியும். இவர்கள் ஒருபோதும் திருந்தப் போவதில்லை என்பதும் எமது பட்டறிவு.
1970 இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான முற்போக்கு அரசாங்கத்தைக் கவிழ்க்க ஒருசில மாதங்களிலேயே 1971 இல் ஆயுதக் கிளர்ச்சி செய்து சுமார் 7,000 சிங்கள் இளைஞர்களைக் காவு கொடுத்து, அரசால் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் 1977 இல் பதவிக்கு வந்த ‘அமெரிக்க யங்கி டிக்கி’ என அழைக்கப்படும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் விடுதலை பெற்று புத்துயிர் பெற்றனர்.