வாலாஜா பள்ளிவாசலும் சிந்தி இந்துக்களும்: நல்லிணக்கத்தின் தமிழ்நாட்டு மாதிரி!

சமீபத்தில் நண்பர் ஒருவருடன் திருவல்லிக்கேணியில் இருக்கும் 227 ஆண்டு பழமையான வாலாஜா பள்ளிவாசலுக்கு (பெரிய பள்ளிவாசல்) சென்றேன். நான் சென்னைவாசி கிடையாது. வாலாஜா பள்ளிவாசலைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் இப்போதுதான் முதன்முறையாகச் சென்றேன். அங்கு நோன்பு திறக்கும் நிகழ்வு மிகச் சிறப்பான அனுபவமாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.