சியால்கோட்டில் பிரியந்த தியவதன கொல்லப்பட்டமை குறித்து இலங்கை மக்களுக்கு தமது தேசத்தின் கோபத்தையும் அவமானத்தையும் தெரிவிக்க இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஐக்கிய அரபு அமீரகத்தில், இன்று (04) பேசினேன் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இலங்கையர் படுகொலை: 800 பேர் மீது வழக்கு
சியால்கோட், வசிராபாத் வீதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராகப் பணியாற்றிய இலங்கையர் ஒருவரை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புயை பிரதான சந்தேக நபரைக் கைது செய்துள்ள பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிஸார், குறைந்தது 800 பேர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை
சீன உரக் கப்பலின் அதிரடி முடிவு
இலங்கை அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட ஹிப்போ ஸ்பிரிட் என்ற சீன உரக் கப்பல், நடுவர் மன்றத்தை நாடப்போவதாக கூறி இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறி, சிங்கப்பூருக்குச் சென்றுள்ளது.
இது போன்ற தலைவர்கள் எமக்கு தற்போதும் வேண்டும்
இலங்கை இராணுவம் கொடூரமானது’
பாடசாலை விடுமுறை நீடிப்பு
சகல பாடசாலைகளுக்கும் டிசெம்பர் 23ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 02 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, நத்தார் பண்டிகைக்காக, டிசெம்பர் 23 ஆம் திகதி முதல் சனி,ஞாயிறு கிழமைகள் உட்பட 26ஆம் திகதிவரையிலும் விசேட விடுமுறையை கல்வியமைச்சு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உண்டியலில் பணம் வந்தால் கிடைக்காதாம்
வெளிநாடுகளிலிருந்து உண்டியல் போன்ற சட்ட விரோதமான முறைகளில் நாட்டுக்கு பணத்தை அனுப்புதல் மற்றும் விநியோகித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்தப் பணத்தை அரசாங்கம் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.