இலங்கையர் படுகொலை: 800 பேர் மீது வழக்கு

முக்கிய சந்தேக நபரான ஃபர்ஹான் இத்ரீஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

பிரியந்த குமார கொலை செய்யப்பட்ட போது தொழிற்சாலைக்குள் தடிகளுடன் நூற்றுக்கணக்கானோர் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட குழுவினர், கொலைக்குப் பின்னர், அவரது உடலை தெருவில் இழுத்துச் சென்தாகவும் போதிய பொலிஸார் இல்லாமையால் கூட்டத்தை நிறுத்த முடியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பிரஜை கொலை செய்யப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட அறிக்கையை பஞ்சாப் பொலிஸார், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் சமர்ப்பித்துள்ளது. 

அறிக்கையின்படி, தொழிற்சாலை முகாமையாளர்களின் உதவியுடன் அடையாளம் காணப்பட்ட குறைந்தது 112 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தூண்டிவிட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.