ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தைத் தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்குள்ள பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களின் ஆடைகள், கல்வி, தொழில் உள்ளிட்ட பல விடயங்களில் பல கடுமையான விதிமுறைகளை விதித்துவருகின்றனர்.
எங்கே இந்தக் கிராமங்கள்?
’பட்டமளிப்பு நிகழ்வை நிராகரிக்கின்றோம்’
நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு நிகழ்வை முழுமையாக நிராகரிக்கின்றோமென, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்று (20) வெளியிட்ட அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 9)
(அ. வரதராஜா பெருமாள்)
இலங்கை அரசின் பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு அவசியமான வருமானத்தை திரட்டுவது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் கடமை. அதனை நீதியான வரி வகைகள் வழியாக, மற்றும் வரிகளற்ற ஏனைய நியாயமான முறைகள் மூலமாக திரட்டுதலும் அரசாங்கத்தின் பொறுப்பான கடமையாகும். இவற்றை முறையாகவும் சரியாகவும் கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்த அத்தனை அரசாங்கங்களும் இப்போது பதவியிலுள்ள அரசாங்கமும் செய்யவில்லை. அதன் விளைவாக, இலங்கையின் தேசிய பொருளாதார சக்திக்கு உரிய அளவில் எந்தளவு விகிதாசாரத்தை அரச வருமானமாக அரசாங்கம் திரட்டியிருக்க வேண்டுமோ அதைவிட மிக மிகக் குறைவாகவே அரச வருமானம் இருக்கின்றது. இந்த விடயங்களை கடந்த தொடரில் அடையாளம் கண்டிருந்தோம்.
வறுமையின் பரிசு கல்விக்கு விடை
(மகேஸ்வரி விஜயனந்தன்)
கொடிய கொரோனாவால் முழு உலகமும் முடங்கியது என்றாலும், தடுப்பூசி, சுகாதார பாதுகாப்புகளை அதிகரித்து முடக்கத்திலிருந்து மீண்டு, அந்தந்த நாடுகள் வழமை நிலைக்குத் திரும்பினாலும் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் இதன் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் திணறிப் போயுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் சீன சைபர் உளவாளிகள் நியமனம்
வேட்டி பற்றிய கனவு
(மொஹமட் பாதுஷா)
‘வேட்டி பற்றிய கனவில் மூழ்கியிருந்த போது, கட்டியிருந்த கோவணமும் பறிபோனது’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, தற்போது அரசியல், சமூக, பொருளாதார பரப்புகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவும் அதனால், மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள அவதிகளும், அச்சொட்டாக பொருந்திப்போவதுபோன்ற போக்குகளே காணப்படுகின்றன.
சிறிதரனின் ‘குறளி வித்தை’
(புருஜோத்தமன் தங்கமயில்)
இன்றைய தமிழர் அரசியலில், தமிழரசுக் கட்சிக்குள் இருப்பவர்கள், ‘குறளி வித்தை’ காட்டும் அளவுக்கு, வேறு யாரும் காட்டுவதில்லை. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடங்கி, அந்தக் கட்சியின் பெரும்பாலான தலைவர்களும், நாளொரு வண்ணமும் பொழுதொரு நடிப்புமாக, வித்தை காட்டிக் கொண்டிருப்பார்கள்.
லொஹானுக்கு எதிராக நடவடிக்கை: பெரமுன
அனுராதபுரம், வெலிக்கடை சிறைச்சாலைகளில் மது போதையில் தனது நண்பர்களுடன் சென்று ரகளையில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய நிறைவேற்று குழு கூடி கலந்துரையாடி தகுந்த நடவடிக்கை எடுக்கும் என பெரமுனவின் பிரதான செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாஹர காரியவசம் தெரிவித்தார்