ஊடகவியலாளர் ரிச்சார்ட் டீ சொய்சா

(Ruban Mariarajan)

ஊடகவியலாளர் ரிச்சார்ட் டீ சொய்சா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தினம் 18 பெப்ரவரி 1990. ஜனாதிபதி பிரேமதாச ஆட்சியில் இச்சம்பவம் இடம்பெற்றது.தமிழரான தாயார் கொழும்பில் பிரபல மருத்துவர் மனோராணி சரவணமுத்து.தந்தையார் பெரும்பான்மை இனத்தவர். ராஜகிரி-வெலிக்கடவத்த இல்லத்தில் இரவு ஆயுதங்களுடன் வந்த சிலர்,எந்தவித கேள்வியுமின்றி பிடித்து இழுத்துச்சென்றனர்.வெளிநாட்டு ஊடகம் ஒன்றின் இலங்கை ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டது இதுவே முதல் தடவை.

ஜெனீவாவுக்குப் பிறகு, எங்கே கையேந்துவது?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கடந்த பத்தாண்டுகளாக, ஈழத்தமிழ் அரசியலின் மையப்புள்ளிகளில் ஒன்றாக ஜெனீவா இருந்துவருகின்றது. ஒருபுறம் இலங்கையில் இருந்து பிரமுகர்கள் அங்கு காவடியெடுக்க, ‘புலம்பெயர் புத்திமான்கள்’ நடைபவனி, பேரணி, ஈருளிப் பயணம் என ஐரோப்பியத் தலைநகரங்களில் இருந்து, ஜெனீவாவை நிறைத்தார்கள்.

இலங்கை: கொரனா நிலவரம்

நாட்டில் மேலும் 254 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 299ஆக அதிகரித்துள்ளது.

சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற 15 பெண்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம், 15 தற்கொலை குண்டுதாரிகiளை பயிற்றுவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மனிதர்கள்தான் கடவுள்

(R Ram Doss)

வோளாங்கண்ணி போகும் வழியில்,
மதிய உணவுக்காக பஸ்ஸை திருவாரூரில் ஹோட்டலில் நிறுத்திய
போது தான்,
அவரை கவனித்தேன்,
அந்த பெரியவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும்…
கையில் சிக்னல் ஸ்டிக்கர் லைட்டும்,
வாயில் விசிலுமாய்,
ஹைவேஸில் போகின்ற வண்டிகளை எல்லாம் சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தார்…

அலஸ்தோட்டம் பாலர் பாடசாலை

அலஸ்தோட்டம் மாயனவீதியில் அமைந்துள்ள பாலர்பாடசாலையின் முன்பாக அமைந்திருந்த மதிலும் வடிகானும் கடந்த மாரிகாலத்தின் போது இடிந்து வீழ்ந்து காணப்பட்டது. இதனை பெற்றோரும், ஆசிரியரும் எமது கவனத்திற் கொண்டுவந்ததையடுத்து சென்று பார்வையிட்டு தலைவர் அவர்களிடம் தெரியப்படுத்தியிருந்தோம். அதனை தலைவரும் வந்து பார்வையிட்டு பாலர் பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி உடனடியாக தற்காலிக வடிகான் வேலையை ஆரம்பித்துவைத்தார். விரைவில் மதில் அமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் கௌரவ உறுப்பினர்களான பஹார்தீன், பாபுகாந், பாலகனேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். விடுமுறைதினத்திலும் மக்களுக்காக பணி செய்யும் JCB இயக்குனர், சாரதிகள், தொழிலாளர்கள், மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள்.

இந்திய ரெயில் நிலையங்களில் விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை தீவிரப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணி முதல் 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.

தகர்க்கப்பட்ட ட்ரம்ப் பிளாஸா ஹொட்டல்

ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் அத்லாண்டிக் நகரத்திலுள்ள ட்ரம்ப் பிளாஸா ஹொட்டல், கசினோ ஆகியன நேற்று தகர்க்கப்பட்டன. இதன் உரிமையை கடந்த 2009ஆம் ஆண்டு ஐ. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் சுயநலத்தைப் புடம்போட்டுக் காட்டும் ஆளும் கட்சியின் உட்பூசல்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஆளும் கட்சிக்குள் பலம் இழந்து வருகிறாரா? ஆளும் கட்சிக்குள், அவரை ஒதுக்கித் தள்ளும் நிலை உருவாகி வருகிறதா என்ற சந்தேகம் ஏற்படும் வகையில், அண்மையில் சில சம்பவங்கள் இடம்பெற்றன; இடம்பெற்றும் வருகின்றன.

ஆயிரம் ரூபாய்; நேற்று நடந்தது என்ன?

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக வழங்குவதற்காக இறுதி முடிவு எடுக்க நேற்று (19) தொழில் அமைச்சில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.