சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற 15 பெண்கள்

சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில், மாவனெல்லையில் கைதான யுவதியிடம், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு பயிற்சி பெற்ற 15 பேரில் 5 பேர் சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர் எனவும் ஏனையவர்கள் விளக்கமறியலிலும், பயங்கரவாத தடுப்புப் பிரிவிலும் உள்ளனர் என, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.