ஸ்ரீலங்கா பெரமுனவின் உயர்ந்த பதவியொன்றில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ரஷ இருக்க வேண்டும் என்பதே தமது அபிப்பபிராயமாகுமெனத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவங்ச, அதற்காக மஹிந்த ராஜபக்ஷவை தலைமைப் பதவியில் இல்லாமலிருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல எனவும் கூறினார்.
ஆளும் தரப்பில் விமலுக்கு கடும் எதிர்ப்பு
ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், முக்கிய உறுப்பினரான அமைச்சர் விமல் வீரவன்ச இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அறியமுடிகிறது. அமைச்சர் விமல் கட்சியை விமர்சித்து ஆற்றிய உரை குறித்து, இன்றைய கூட்டத்தில ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டதையடுத்து, உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாதங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாகவே தான் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அமைச்சர விமல் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
பெயர் பலகையில் திருத்தம்…
யாழ்ப்பாணத்தில், புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பஸ் நிலையத்தின் பெயர் பலகையில், தமிழில் இரண்டாம் மொழியாக இணைக்கப்பட்ட இடங்களின் பெயர்கள் முதலாவது இடத்துக்கு மாற்றப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பெயர் பலகையில் “பேரூந்து நிலையம்” என எழுதப்பட்ட பெயர் “பேருந்து நிலையம்” எனவும் திருத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு
புதிய ஆரம்பம் P2P
அஹிம்சைப் பேராட்டத்தின் காற்றை இழுக்க முயன்ற தலைகீழ் ஆணிகள்
தென்னிலங்கையை மட்டுமன்றி, சர்வதேசத்தின் கண்களையும் ஒரு கணம் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கும், ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’யான பேரணி, சிறுப்பான்மை இனங்களின் ஒன்றுமையை எடுத்தியம்பி நிற்கின்றது. இது வெறுமனே, உரிமைப் போராட்டமாக மட்டுமன்றி, அரசாங்கத்துக்குப் பெரும் செய்தியையும் கூறியுள்ளது.
இலங்கை: கொரோனா விபரம்
நாட்டில் மேலும் 514 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது. இன்று 740 பேர் குணமடைந்த நிலையில் தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 64 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது.