‘ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கே எமது ஆதரவு’

(க. அகரன்)

ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பதாக அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத்தின் வடமாகாண இணைத்தலைவர் ஆறுமுகம் புண்ணியமூர்த்தி தெரிவித்தார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தளம் – 04 – ஈழத் தமிழ் அரசியல் நேற்று, இன்று, நாளை

(தமிழ் விவாதிகள் கழகம்)

ஈழத்தமிழ் அரசியலை நோக்குகின்ற போது மூன்று போக்குகளை அவதானிக்கலாம்.

முதலாவது கோட்பாட்டு ரீதியான சிந்தனைப்போக்கு, இது தமிழரின் விடுதலை அடைவது பற்றிய கோட்பாட்டுருவாக்கம், தமிழ்த்தேசியம்,சுயநிர்ணயம், தனிநாடு போன்றவற்றை உள்ளடக்கியது. இரண்டாவது கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுசார் சிந்தனைப்போக்கு, இது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவதற்கான செயன்முறை சார்ந்தது.

செங்டு துணைத்தூதரகத்தை மூடுமாறு ஐ. அமெரிக்காவுக்கு சீனா உத்தரவு

சீனாவின் செங்டு நகரத்தில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் துணைத் தூதரகத்தை மூடுமாறு ஐக்கிய அமெரிக்காவுக்கு இன்று சீனா உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில், ஐக்கிய அமெரிக்காவின் ஹூஸ்டனிலுள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை சீனா மூடுமாறான ஐக்கிய அமெரிக்காவின் இவ்வார வலியுறுத்தலொன்றுக்கு சீனா பதிலளித்துள்ளது.

கிழக்கே ஓர் அஸ்தமனம்

1961இல் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறை மாவட்டமானது உருவாக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அங்கே தமது பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்துவதற்குத் தமிழர் ஒவ்வொருமுறையுமே படாதபாடுபட வேண்டியிருக்கிறது.

நெல்சன் மண்டேலா நினைவுரை: உண்மைகள் உறைக்குமா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சில கதைகளைக் கேட்கும் போது, நன்றாக இருக்கிறதே என்று தோன்றும். இன்னும் சில கதைகள் கடுப்பூட்டும்; சிரித்துவிட்டு அப்பால் நகரச் செய்யும். ஆனால், உலக அரசியல் அரங்கில், அதிகார மய்யங்களில் இருப்பவர்களின் கதைகளும் இதற்கு விலக்கல்ல. சில கதைகளைக் கேட்கும்போது, தெளிவாகி விட்டார்களோ என்று எண்ணத் தோன்றும்; பின்னர் அவர்கள் தம் நடத்தைகள், அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை இடித்துரைக்கும்.

50 ஆண்டுகளுக்குப் பின் பழைய இடத்துக்கு வந்துசேரப் போகின்ற தமிழ் தலைமை!

(Maniam Shanmugam)
எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத் தேர்தல் 1970இல் தமிழரசு – தமிழ காங்கிரஸ் கட்சிகள் மண் கவ்வியது போன்ற ஒரு நிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நிச்சயமாக ஏற்படுத்தப் போகின்றது. ஏனெனில் அன்றைய சூழ்நிலைக்கும் இன்றைய சூழ்நிலைக்கும் இடையில் 50 வருடங்கள் கழிந்துவிட்டாலும் அச்சொட்டாக ஒரு ஒற்றுமை இருக்கின்றது.

சிங்கப்பெண்ணே…

(Rathan Chandrasekar)

குடிக்கிற தண்ணிக்காக ஊரே அல்லாடிக்கிட்டிருக்கு.

ஒருத்தருக்கொருத்தர் மாத்தி மாத்தி பழி சொல்லி காரணம் சொல்லிட்டிருக்க –

நம்ப வேலூர் பொம்பளைக மட்டும் –
15 வருசத்துக்குமுந்தி காஞ்சுபோன ஒரு ஆத்தையே தூர் வாரி சாதனை பண்ணிருக்காங்க.

உயிர்களை காக்க பிறந்தவர்க்கு இதயம் கணத்த கண்ணீர் அஞ்சலி

கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த அனுஜித், ஐ.டி.ஐ படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ரயில் தண்டவாளத்தை கடந்து சென்ற சமயத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலைக் கண்டார். அந்த வழியாக ரயிலும் வந்தது. உடனே, அந்த மாணவர் தனது கையில் இருந்த சிவப்பு நிற புத்தக பையை தூக்கி பிடித்தபடி

வெலிக்கடைச்சிறைச் சாலையில் படுகொலை…கந்தன் கருணை புலிகளின் சிறைச்சாலைப் படுகொலை….

(Sutharsan Saravanamuthu)

வெலிக்கடைச்சிறைச் சாலையில் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் எனது அஞ்சலிகள், 23 ஜூலை எப்படி மறக்க முடியாததோ அப்படியே 30 மார்க்சும் மறக்கமுடியாததே.

23 07 1983 வெலிக்கடைச் சிறைக் கொலை
புத்தருக்கு இரத்த அபிஷேகம் சிங்களவனுகளால் செய்யப்பட்டது.

30 03 1987 கந்தன் கருணைக் கொலை
கந்தனுக்கு இரத்த அபிஷேகம் புலிகளால் செய்யப்பட்டது.

கேரளாவில் இன்று 1038 பேருக்கு கரோனா தொற்று: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

கேரளாவில் இன்று 1038 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது:
கேரளாவில் நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நமது மாநிலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கியதற்கு பின்னர் இன்று தான் முதன்முதலாக நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.