யாருக்கு அருகதை உண்டு தமிழர் தரப்பில்…?
(சாகரன்)
2009 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவைத் தொடர்ந்த யுத்தமற்ற சூழலுக்கு பின்ரான அரசியலைப் பேசவிளையும் பதிவு இது. தாம் சொல்லும் அரசியலை பாராளுமன்றத்தில் கிளிப்பிள்ளைப் போல் சொல்லவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு(TNA) உண்மையான பன்முகத் தன்மை கொண்ட பல கட்சிகளின் ஐக்கியப்பட்ட அமைப்பா…? என்றால் இல்லை என்ற பதிலை நாம் யாரும் மறுக்க மாட்டோம்.
’இலங்கை அரசாங்கத்தை டக்ளஸே காப்பாற்றினார்’
விக்கியின் வியாக்கியானங்கள்
(புருஜோத்தமன் தங்கமயில்)
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், திருகோணமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், “…சம்பந்தன் எந்தவொரு பிரச்சினையையும் உடனடியாகத் தீர்ப்பதில்லை. ‘பேசுவோம், பார்ப்போம்’ என்று கூறி, விடயத்தைத் தட்டிக்கழிப்பார். அதனாலேயே, பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன…” என்று, தெரிவித்திருக்கிறார்.
‘சமூக சேவகியான எனக்கு மக்களின் மனங்களில் தனி இடம் உண்டு’
எனக்குப் போட்டியாக, எனது தம்பி வாக்குக் கேட்டாலோ அல்லது வேறு ஒருவர் வாக்குக் கேட்டாலோ, எனது இடம் மக்கள் மத்தியில் நிச்சயம் இருக்குமென, ஐக்கிய தேசிய கட்சியின் ‘யானை’ சின்னத்தில், திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக, 7ஆம் இலக்கத்தில் போட்டியிடும் ரோஹினா மகரூப் தெரிவித்தார்.
ஜோர்தான் தாக்குதலுக்கு ஜே.வி.பி கண்டனம்
அபிவிருத்தியை அரசியலும் அரசியலை உரிமையும் நகர்த்த வேண்டும்’
(அதிரதன்)
தமிழர் விடுதலைக் கூட்டணி, மாற்று அரசியலை முன்வைக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி தகுந்தவர்களை, தகுதியுள்ளவர்களை இந்தத் தேர்தலில் போட்டியிட வைத்திருக்கிறது. எந்த அணியுடனும் போட்டியிடும் வல்லமை, எமது அணிக்கு இருக்கின்றது. நிச்சயமாக, ஓர் ஆசனத்தை மட்டக்களப்பில் கைப்பற்றும் என, மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.
போலி ஆவணங்களுடன் கோப்பாய் இளைஞன் கைது
கருணா செய்ததையே இன்று விக்னேஸ்வரன் செய்கிறார்
‘கொழும்பை புறக்கணித்து சர்வதேசம் தீர்வு வழங்காது’
அரசியலில், நாம் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளோம். சர்வதேச சமூகத்தை, முற்று முழுதாக நாம் நம்பிக் கொண்டிருக்க முடியாது. கொழும்பை முற்றாகப் புறக்கணித்துக்கொண்டு, தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு, எந்த நாடும் இன்று தயாரில்லை. அவர்களுக்கு சில எல்லைகள் உண்டு; சில சாத்தியங்களும் உண்டு. ஆகவே, இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் புரிந்துகொண்டு, எமது அரசியலை முன்னெடுக்க வேண்டும். மக்களைப் பொய்யான வழிகளில் அலைக்கழித்துக் கொண்டிருக்க முடியாது. அது அவர்களுக்குச் செய்கின்ற அநீதியாகும், துரோகமாகும்” என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.