இந்திய சீன மோதல்…

ஒட்டுமொத்த உலகமே நோய்த்தொற்றில் சிக்கித்தவிக்கிறது. இந்திய மக்கள் கொரோனாவை எதிர்த்துப் போரிடுகிறார்கள். இந்த இக்கட்டான சூழலில் இந்திய ராணுவம் சீனாவை எதிர்த்துப்போர் புரிய நிர்பந்தப்படுத்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நண்பர் வீரகத்தி சேந்தன் நினைவாக:

வெற்றிடம் நிச்சயம் நிரப்பப்படும்!

கரவெட்டியைச் சேர்ந்த வீரகத்தி சேந்தன் அவர்களின் உயிர் இரண்டு நாட்களுக்கு முன்னர் – யூன் 12ஆம் திகதி – அவரது உடலை விட்டுச் சென்றுவிட்டது. பூதவுடலும் இரண்டொரு நாட்களில் அழிக்கப்பட்டுவிடும். இது நம் எல்லோருக்கும் ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் நிகழ்வுதான்.

தன் வாழ்வால் எங்களுக்கு வழிகாட்டியவர் றொபேட்

(தோழர் மோகன்)

தோழர் றொபேட் ( தம்பிராசா சுபத்திரன்) சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல், சமூக பிரச்சினைகளில் பிரக்ஞை கொண்டு செயற்பட்டவர். தமிழ் பேசும் மக்களின் விடிவிற்காக 23 வருடங்கள் தொடர்ச்சியாக அவர் ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் நடவடிக்கைகளில் முன்னணியிலிருந்து கருமமாற்றியவர். அவரது 17வது நினைவு தினம் இன்றாகும்.

சேந்தன்.

சேந்தனின் நினைவுகள் மட்டும்தான் இனி. பழகியவர்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் அவருடைய சுவையான சுவாரசியமான பேச்சுக்கள் கதைகள். பல்கலைகழகத்தில் பொறியியல் மாணவனாக பயின்றகாலத்தில் கவிதைகள் படைப் பதில் ஆர்வமாக இருந்தார். அதனால் அவருக்கு முற்போக்கு இலக்கிய வியாபாரிகள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை முற்றாக தவிர்த்தார். அன்றைய காலகட்டத்தில் பேராசிரியர் இவருடைய திறமையை அறிந்து இவரைத் தேடி வீட்டுக்குப் போயிருந்தார். வீட்டுக்குள் இருந்த சேந்தனிடம் தந்தை பண்டிதர் வீரகத்தி சேதியைச் சொன்னார். சேந்தன் அந்த பே(ர்) ஆசிரியரை சந்திக்க விரும்பவில்லை. அதற்கு தந்தையார்,
‘பேராசிரியரடா’

தோழர் ‘சே’ இன் பிறந்த நாள் இன்று

(Sutharsan Saravanamuthu)

சக மனிதனை நேசிக்க தெரிந்த மனிதன் சேவுக்கு இன்று பிறந்த நாள், அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இன்றுவரை வெளிநாட்டிலிருந்து வந்து இந்திய ஏழை விவசாயிகளை சந்தித்த ஒரே தலைவன் சே தான்,இலங்கைக்கு வந்து தேயிலை தோட்ட தமிழர்களை சந்தித்தார் .உலகிலே மலையக தமிழர்களை சந்தித்த ஒரே தலைவர் இன்றுவரை அவர் ஒருவர்தான், மலையகத்தில் சே தன் கையினால் நட்டுவைத்த மரம் இன்றும் உண்டு, சே இலங்கை வந்தார் என்ற விடயமே பல தமிழர்களுக்கு தெரியாது.

அஞ்சலி: ஒளிப்பதிவாளர் பி.கண்ணன்- ஆகாயத்தின் மறுபக்கம் இரண்டு கண்கள்!

(ஆர்.சி.ஜெயந்தன்)

சினிமாவைக் காட்சியின் கலையாக முன்னிறுத்தும் கலைச் சமூகம் ஒளிப்பதிவாளர்களுடையது. எல்லீஸ் ஆர்.டங்கன் காலம் தொடங்கி தமிழ் சினிமா தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களைக் கண்டிருக்கிறது. ஆனால், எல்லா ஒளிப்பதிவாளர்களும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டதில்லை.

கடலிலிருந்து எடுத்ததைக் கடல் எடுக்கும்

(எம்.இஸட். ஷாஜஹான்)

நீர்கொழும்பு நகரம், மீன் பிடித்துறைக்குப் பெயர் பெற்ற நகரமாகும். நகருக்கு அழகு சேர்க்கும் வகையில், கடலும் களப்பும் அமைந்துள்ளன. இதன் காரணமாக, நகரின் இயற்கைமிகு காட்சிகள் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

ஏன் அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது?

இந்தியாவில் கரோனாவுக்குப் பலியான முதல் மக்கள் பிரதிநிதி என்பதால் மட்டும் அல்ல; வேறு ஒரு விஷயத்துக்காகவும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரான அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது. தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் அரசியலர்கள் மீது உருவாக்கப்பட்டிருக்கும் மோசமான பிம்பத்தின் மீது இந்த மரணம் தாக்குதல் நடத்துகிறது. அது முக்கியமானது.

கறுப்பினத்தவரின் உயிர்கள் முக்கியம்: ஒரு இயக்கத்தின் வரலாறு

கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் அமெரிக்காவையே உலுக்கிக்கொண்டி ருக்கிறது. அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கடந்த மே 25 அன்று அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரத்தில் ஒரு வெள்ளையின போலீஸ்காரர் தனது முழங்காலால் ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தின் மேலே 8 நிமிடம் 46 நொடிகளுக்கு நின்றது அவரது உயிரைப் பறித்திருக்கிறது. இதனால், ‘கறுப்பினத்தவரின் உயிர்கள் முக்கியம்’ (Black Lives Matter – BLM) என்ற இயக்கம் மறுபடியும் தெருவில் இறங்கியும் சமூக வலைதளங்களிலும் போராட ஆரம்பித்திருக்கிறது. இனவெறியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 2013-ல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் முழு வீச்சில் செயல்பட்ட பிறகு தொய்வுகொண்டது.

அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தின் குறியீடு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அதிகாரம், என்றென்றைக்கும் ஆனதல்ல மாற்றங்கள் வந்தே தீரும். உலக வரலாற்றில், நிலைத்திருந்த சாம்ராஜ்யங்கள் என்று எதுவும் இல்லை. கிரேக்கர் தொடங்கி, அமெரிக்கர் வரை யாரும் விதிவிலக்கல்ல.