அஞ்சலி: ஒளிப்பதிவாளர் பி.கண்ணன்- ஆகாயத்தின் மறுபக்கம் இரண்டு கண்கள்!

(ஆர்.சி.ஜெயந்தன்)

சினிமாவைக் காட்சியின் கலையாக முன்னிறுத்தும் கலைச் சமூகம் ஒளிப்பதிவாளர்களுடையது. எல்லீஸ் ஆர்.டங்கன் காலம் தொடங்கி தமிழ் சினிமா தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களைக் கண்டிருக்கிறது. ஆனால், எல்லா ஒளிப்பதிவாளர்களும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டதில்லை.