கொரோனா வைரஸ் முன்பு நினைத்ததை விட அதிக தூரம் பயணிக்கின்றது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

(Kumaravelu Ganesan)

கொரோனாவில் இருந்து தப்பவேண்டும் என்றால் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு இருந்தால் மாத்திரமே சாத்தியம் போல் இருக்கின்றது.
கொரோனா வைரஸ் குறைந்தது அரை மணி நேரம் காற்றில் உயிர்வாழும் என்றும் , சில மேற்பரப்புகளில் பல நாட்களுக்கு உயிர்வாழும் என்றும், கிட்டத்தட்ட 15 அடி தூரம் பயணம் செய்யக்கூடும் என்றும், ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

சமூக அருவருப்பும் கரோனாவும்.

சீனாவில் கரோனா பரவத் தொடங்கியபோதே அதனுடன் சமூக அருவருப்பும் சேர்ந்து பரவத் தொடங்கியது. சீன மக்கள் என்றாலே கரோனா வைரஸைப் பரப்ப வந்தவர்கள் என்பது போல வெறுப்பு காட்டப்பட்டது. சில இடங்களில் சீன மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டனர். சீனரைப் போல உருவ ஒற்றுமை உடைய தேசத்தவர்கள்கூடப் பாதிக்கப்பட்டனர். அவர்களது தொழில் வர்த்தக நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட்டன.

கொரோனா வைரஸ்: விமானங்களை ரத்து செய்த அமெரிக்கா, எச்சரிக்கும் ஜெர்மனி, முடங்கிய இத்தாலி – விரிவான தகவல்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐரோப்பா செல்லஇ மற்றும் அங்கிருந்து வர பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா.
அமெரிக்க நேரப்படி சற்று நேரத்திற்கு முன்பு தொலைக்காட்சியில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பா செல்லும் மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் அடுத்த 30 நாட்களுக்குத் தடை செய்வதாக அறிவித்தார்.

எங்களில் பலருக்கும் தெரியாத கனடா!

Indigenous children play in a water- filled ditch in the northern Ontario First Nations reserve in Attawapiskat, Ont., on Tuesday, April 19, 2016. In many ways, Attawapiskat – population 2,100 – has all the trappings of any small town, including older folk lamenting the changing of the times. (Nathan Denette/CP)

கனடியர்களாக எங்களில் பலருக்கும் தெரியாத அல்லது எங்களில் பலரும் அறிந்து கொள்ள விரும்பாத கனடா ஒன்று எங்களுக்கு அருகிலேயே உள்ளது. அது கனடாவின் பூர்வீகக் குடிகள் வாழும் கனடாவின் முதல் குடி மக்களுக்கான நிலப் பகுதி. புதிய நாடொன்றினுள் புலம் பெயர்ந்த ஓர் அகதிக் குடி இனமாக இந்தத் தெரியாத கனடாவை தெரிந்து கொள்வது குறித்து தமிழர்களாக நாம் கவனம் செலுத்துவதோ அல்லது அக்கறை காட்டுவதோ இல்லை.

க.அன்பழகன்: ஒரு யுகத்தின் இறுதி அத்தியாயம்!

(செல்வ புவியரசன்)

அரசியலின் சில விழுமியங்களைக் கடைசிவரையிலும் கட்டிக்காத்துவந்த ஒரு பெரும் வரலாற்றுக்குச் சாட்சியமாக இருந்தவர் க.அன்பழகன். ஒரு கட்சியின் நெடுநாள் பொதுச்செயலாளர் என்பதைத் தாண்டி, மக்கள் நல அரசின் முக்கியப் பொறுப்புகளான மக்கள் நல்வாழ்வு, கல்வி, நிதி ஆகிய துறைகளில் அமைச்சராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்ட அனுபவங்களின் திரட்சியாக இருந்தவர். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் என்பதைத் தாண்டி, ஜனநாயக அரசியலில் அமைச்சரவையிலும் எதிர்க்கட்சி வரிசையிலும் அவர் ஆற்றியிருக்கும் பணிகளையும் சேர்த்து நினைவுகூர்வதே அவருக்கான அஞ்சலியாக இருக்க முடியும்.

அச்சமூட்டும் கரோனா: இத்தாலியில் 230 பேர் பலி;6 ஆயிரம் பேர் பாதிப்பு: தியேட்டர், அருங்காட்சியகம் நாடுமுழுவதும் மூடல்

உலகத்தை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் அதிகமான உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இதுவரை இத்தாலியில் 233 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர், 5,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா அச்சம்: இந்தியா உள்பட 13 நாடுகளிலிருந்து வரும் மக்கள் நுழையத் தடை: கத்தார் அரசு திடீர் உத்தரவு

உலகிற்குப் பெரும் அச்சுறுத்தல் விடுத்து வரும் கரோனா வைரஸ் பரவும் வேகம் தீவிரமடைந்திருப்பதை அடுத்து, இந்தியா உள்பட 13 நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு தற்காலிகமாகத் தடை விதித்து கத்தார் நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

‘துரோகம் செய்தவர்களையே வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்’ – கருணா

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரையில் எதுவிதப் பயனுமில்லாத கட்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களால் பார்க்கப்படுவதாகவும் பல தேசத் துரோகங்களைச் செய்தவர்களையெல்லாம் தங்கள் கட்சியில் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாகவும், முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) குற்றஞ்சாட்டினார்.

கிழக்கில் கொரோனா தடுப்பு முகாம்: சிறுபான்மையினர் சந்தேகம்

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை, கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதானது, சிறுபான்மை சமூகத்தைப் பழிவாங்கும் நோக்கில் செய்யப்படுகின்ற நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

அருவி பெண்கள் அமைப்பால் மகளிர் தின நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் அமைப்பால் மகளிர் தின நிகழ்வு, கிரான் பிரதேசத்தில் இன்று (09) ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்படி அமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான திருமதி மயூரி ஜனகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு சுயதொழில் உபகரணங்கள், தையல் இயந்திரம், வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.