முன்மாதிரி,கிராம பஞ்சாயத்து

உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஓடந்துறை கிராமம்!

ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசுகள் உட்பட மொத்தம் 43 நாடுகளின் பிரதிநிதிகளை தன்னை நோக்கி ஈர்த்திருக்கிறது தமிழகத்தின் ஓடந்துறை கிராமம்.

யாழ். விமான நிலையம் குறித்து விசாரணை

யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற சென்னைக்கான விமானப் போக்குவரத்துக்காக, பயணிகளிடம் இருந்து, விமான நிலைய வரியாகப் பெருந்தொகைப் பணம் அறவிடப்படுகின்றமை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு, அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாழைப்பழத்திலும் விதைகள் உண்டு!

பேராதனைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தத்துவவியல் பேராசான் கலாநிதி காசிநாதன், பதினைந்து வருடங்களுக்கு மேலாக மெல்பனில் வாழ்கிறார். இருந்தாலும் பொது வெளியில் அவர் தன்னைப் பெரிதும் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. இப்படிச் சிட்னியில் அமைதியாக வாழும் இன்னொரு பேராசிரியர், கலாநிதி இந்திரபாலா. இவருடன் எனக்குப் பெரிய தொடர்பில்லை. காணுமிடத்தில் வணக்கம் சொல்லி மரியாதை செலுத்துவதுடன் சரி. இந்த வரிசையில் இணைந்து கொள்ளும் இன்னுமொருவர் சிட்னியில் வாழ்ந்து சமீபத்தில் மறைந்த (2019) தமிழ்ப் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம். இவர்கள் எல்லோரும், எமது சமுதாயத்தின் பொக்கிஷங்கள். நமது சமூகம் இவர்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ? என்ற ஆதங்கம் எனக்கு எப்பொழுதும் உண்டு. புலம் பெயர் தேசத்தில் ‘எல்லோருக்கும் எல்லாம் தெரியும்’ என்ற நிலைப்பாடுதான் இதற்கான சுருக்கமான பதில்.

இனியபாரதிக்கு தொடர் மறியல்

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான “இனியபாரதி” என அழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமாரை, இம்மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மேலதிக நீதவான் பி.சிவகுமார் உத்தரவிட்டார்.

வடமாகாண மக்களின் தீராத வலிகளை ஆற்றுப்படுத்துவேன்

வடக்கு மாகாண மக்களிடம், தீராத வலிகள் இருப்பதாகவும் அவற்றை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவைகள் பல இருப்பதாகவும் அதற்கான பணிகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் கோரியதாகவும், அவரது கோரிக்கைக்கமைய, வலிகளைச் சுமந்த வடக்கு மாகாண மக்களுக்காகத் தன்னை அர்ப்பணிப்பதாக, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

ஹீரோ – அனில் குப்தா

(Siva Raj)

இரண்டு மாதங்களுக்கு முன்பாக, கோயம்புத்தூரில் இருந்த சமயத்தில் முன்னறியா எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு இரண்டு மூன்று நாட்களாக அடிக்கடி தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. ஜான்சுந்தர் அண்ணனின் ‘டமருகம்’ சார்ந்த வேலைகள் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டம். புதுநண்பர்களைச் சந்திப்பதற்கான தகுந்த மனநிலை அமையாததாலும், சினிமா சார்ந்த தோழர்களை எதிர்கொள்வதில் ஒருசில தயக்கங்கள் இருந்ததாலும் நான்கைந்து அழைப்புகள்வரை தொடர்ந்து தவிர்த்தேன். இனிமேற்கொண்டு மறுதலிக்கவே முடியாத சூழலில், அந்த அழைப்பை ஏற்றுப் பேசினேன். மறுமுனையில் மித்ரன் பேசினார்.

ஓமந்தையில் ஆர்ப்பாட்டம்

வவுனியா – ஓமந்தையில் அமைந்துள்ள அரச உத்தியோகத்தர் குடியிருப்புப் பகுதியில் குடியிருக்காத மக்களின் காணிளைச் சுவீகரித்து, காணியற்றவர்களுக்கு வழங்குமாறு கோரி, அக்குடியிருப்பு மக்களால், குறித்த குடியிருப்பு பகுதிக்கு முன்பாக உள்ள வீதியில், நேற்று (28) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

1968 டிசம்பர் 25: தமிழக வரலாற்றில் கருப்பு நாள் !

கீழத்தஞ்சையில் (இன்றைய நாகை மாவட்டம்) கீழ்வெண்மணி என்கிற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த 44 அப்பாவி கூலி ஏழை விவசாயிகளை ஒரே குடிசையில் பூட்டி வைத்து கதறக்கதறத் தீயிட்டுப் பொசுக்கினர், இரிஞ்சூர் பண்ணையார் கோபால கிருஷ்ண நாயுடு தலைமையிலான நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்கள்.

2019: காலம் கலைத்த கனவு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
காலம் கனவுகளையும் கற்பனைகளையும் சாத்தியங்களையும் எதிர்பார்ப்புகளையும் தன்னுள் உட்பொதிந்து வைத்திருக்கிறது. காலத்தின் விந்தையும் அதுவே. கடந்தகாலத்தின் மீதான ஏமாற்றங்களும் நிகழ்காலத்தின் மீதான நிச்சயமின்மைகளும் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி விடுகிறது. இது புதிதன்று. ஆனால் மனித மனம் நம்பிக்கையென்னும் பிடியை இறுகப் பற்றியபடி நூலில் நடக்கும் ஆபத்தான விளையாட்டில் இறங்கி விடுகிறது. இதன் பலன்கள் நாமறிந்ததே. இதையே கடந்து போகும் இவ்வாண்டும் சொல்லிச் செல்கிறது.

ஈழத்தமிழருக்காக உலகிடம் கையேந்துவோரிடம் சில கேள்விகள்

ஈழத் தமிழருக்கான விடிவு, சர்வதேசத்திடமும் இந்தியாவிடமும் இருக்கிறது என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை, நீண்ட காலமாக கட்டி எழுப்பப்பட்ட ஒன்று.