வெடித்ததை ஐயா ஒரு வெடிகுண்டு

சம்பந்தரின் உள்வட்டத்தில் இருந்து கசிந்த ஓர் உண்மை
அண்மையில் ஒருநாள் சம்பந்தரிடம் அவரின் உள்வட்டத்தில் இருந்த ஒரு நபர், சொல்லப்போனால் அவரை மையம் என்றும் கூறலாம். அவர் சம்பந்தரிடம் “ஏன் தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் 11 பேர் இருந்தும் ஏழு பேர் உள்ள முஸ்லீம்களுக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தீர்கள்” என்று. அதற்கு அவர் நான் ஒன்றும் யோசனை இல்லாமல் இதைச் செய்யவில்லை, அதாவது ஒரு தமிழன் முதலமைச்சராக வந்தால் அவர் ஓர் பெரிய அரசியல்வாதி ஆகி கிழக்கு தமிழர்களுக்கான ஓர் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்படுத்தி ஒரு பிரமுகராக, அரசியல் தலைவராக, அவர் வந்துவிடுவார். நாம் பின்னர் இருந்த இடம் தெரியாத பகல் வேளை நட்சத்திரங்களாக மறைந்துவிடுவோம்.

`மழைக்காட்டில் துளிர்க்கும் ஈர நம்பிக்கை!’ – உற்சாகத்தில் காட்டுயிர் ஆய்வாளர்கள்


(ரா.சதீஸ்குமார், கே.அருண்)
சூழலுக்குப் பயனற்ற அந்நிய களைத்தாவரங்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் தொட்டபெட்டா காடுகளில் சோலை மரங்கள் மெல்ல வளரத்தொடங்கியுள்ளது, காட்டுயிர் ஆய்வாளர்களிடம் நம்பிக்கையைத் துளிர்க்கச்செய்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபி

1960களில் உருவான மக்கள் விடுதலை முன்னணியின் புதிய சகாப்தத் தலைவர். ஆனால், ரோஹண விஜயவீரவின் அன்றைய இனவாத விடுதலை முன்னணியல்ல அதன் இன்றைய அவதாரம். வரலாறு அக்கட்சியினருக்குப் புகட்டிய பல கசப்பான பாடங்களைக் கற்றுணர்ந்து, அதனால் விழிப்படைந்து முதிர்ச்சிபெற்று ஓர் இனவாதமற்ற தேசிய இடதுசாரி மக்கள் எழுச்சி இயக்கமாக அம்முன்னணி இன்று இயங்குகின்றது. தமிழர்களின் கோரிக்கைகளுள் நியாயமானவற்றை ஏற்று அமுல்படுத்துவேன் என்று திஸநாயக்க துணிந்து பேசியது இம்முன்னணியின் புதிய முகத்தை வெளிக்காட்டுகின்றதல்லவா? அது மட்டுமல்ல, தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை இனங்களையும் மதங்களையும் மையமாகக் கொண்டல்லாது பொருளாதாரக் கொள்கைகளையும், மக்கள் நலன்பேணும் கொள்கைகளையும், யாவரும் இலங்கையரே என்ற அடிப்படையில் ஊழலற்ற ஓர் அரசியலையும், சமவுரிமைகளுள்ள ஒரு தேசிய சமுதாயத்தiயும் இலக்காகக்கொண்டு பேசிவரும் இவ்வேட்பாளனை சிறுபான்மைஇனங்களிண்டும் மிகப் பரிவுடன் நோக்க வேண்டும்.

சுதந்திரபுரத்தில் 3ஆவது நாளாக அகழ்வு நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி தோட்ட காணியினை துப்பரவு செய்த போது மனித எச்சங்கள் காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது

5 தமிழ் கட்சிகளின் இறுதி தீர்மானம் நாளை அறிவிக்கப்படும்

“ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின்கோரிக்கைகளை தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்காத பட்சத்தில் தமிழ்மக்கள் திட்டவட்டமான முடிவினை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.அதற்கான இறுதிமுடிவினை நாளை எடுக்கவுள்ளோம்” என ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஈராக்கில் ஆர்ப்பாட்டங்கள் தொடருகையில் நால்வர் கொல்லப்பட்டனர்

ஈராக்கிய அரசாங்கத்துக்கு எதிரான நேற்றுநான்காம் நாள் ஆர்ப்பாட்டத்தில் நால்வர் கொல்லப்பட்டதுடன், 277 பேர் காயமடைந்துள்ள நிலையில், தலைநகர் பக்தாத்தில் ஊரடங்கொன்றை ஈராக் நேற்று முன்தினம் பிரகடனப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நேற்று (28.10.2010) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தோழர் வரதராஜப்பெருமாள் ஆற்றிய உரை

அன்பார்ந்த தமிழ் மக்களே!
இந்தநாட்டு மக்களை பொறுத்தவரையில் கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் தான் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பது பெரும்பான்மையான மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். அவர் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெற்றுள்ளார் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். எதிர்வரும் 16 ஆம் திகதி சட்டபூர்வமாக ஜனாதிபதியாகின்ற ஒரு சம்பிரதாயம் தான் இருக்கப்போகிறது.

இந்த வேளையில் தமிழ் மக்களாகிய நாங்கள் நிதானமாக புத்திபூர்வமாக பகுத்தறிவோடு சிந்தித்து செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த உசுப்பேற்றும் அரசியலை நடத்துபவர்கள் கடைசியில் இரத்தக்களரிகளுக்கே வழிவகுத்திருக்கிறார்கள். இந்தநாட்டில் தமிழ் மக்களுக்கு ஒரு போராட்டம் தேவைப்பட்டது என்பது உண்மை அந்தப்போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் பலர் இந்த மேடையில் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவனாக நானும் இருக்கிறேன் இந்த சபையிலும் பலர் இருக்கிறார்கள் அது ஒரு காலத்தின் தேவையாக இருந்தது இந்தநாட்டிலே தமிழ் மக்களுக்கு ஒரு உருப்படியான ஒரு அரசியல்தீர்வு கிடைக்கவில்லை என்பதனால் தான் கோரிக்கைகள் மேலும் மேலும் மேலும் மேலே போய் அதற்கான ஒரு போரும் போராட்டமும் நடக்கவேண்டி ஏற்பட்டது.
ஆனால், 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தோடு வந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை நாங்கள் காப்பாற்றியிருந்தால் அதை பாதுகாத்திருந்தால் அதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் இன்றைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
அதற்கு பிந்திய 25 வருடங்களில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களை பலிகொடுத்திருக்கிறோம். தெற்கிலும் மக்களும், பல ஆயிரக்கணக்கான படையினரும் பலியாகியிருக்கிறார்கள் 1990 முதல் 2009 வரை மரணத்தை தவிர வேறு எதுவும் தமிழ் மக்கள் கண்டதில்லை. 2009 இற்கு பின்பு இன்று வரை யுத்தம் நடைபெற்றிருந்தாலும் அரசியல் தீர்வோ, சமாதானமோ வந்திருக்குமா? வந்திருக்காது. இன்னும் இலட்சக்கணக்கான மக்களும், இளைஞர்களும் பலியாகியிருப்பார்கள் இழப்புக்களே மிஞ்சியிருக்கும்.
யுத்தம் முடிவடைந்து விட்டது. யுத்தம் பல துன்பியல் விளைவுகளை தந்து முடிந்திருக்கிறது. அவற்றைப்பற்றி நாங்கள் ஒப்பாரி வைத்துக்கொண்டேயிருக்க முடியாது. எதிர்காலம் நோக்கி நாங்கள் செல்ல வேண்டும். இந்த நாட்டில் தான் ஒரே நாட்டில் தான் ஐக்கியமாக சமாதானமாக சகோதரத்துவத்தோடு வாழ வேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம். அதனை நாங்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். இந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி நாங்கள் பாதுகாப்பை தேட முடியாது. போகக் கூடியவர்கள் போய்விடுவார்கள். இந்த நாட்டில் இருப்பவர்கள் இந்த நாட்டில் உள்ள சிங்கள மக்களோடும், முஸ்லிம் மக்களோடும் சகோதரத்துவத்தோடு வாழ வேண்டும். ஆனால், சமாதானம் அற்றவர்களாக அல்ல. சமத்துவம் அற்றவர்களாக அல்ல. சம நீதி அற்றவர்களாக அல்ல சமத்துவமாகவும், சம நீதியோடும், பாதுகாப்போடும் சகோதரத்துவத்தோடும் வாழுகின்ற ஒரு நிலைமை ஏற்பட வேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.
அவ்வாறான ஒரு நிலைமையை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்படுத்தித் தருவார்கள் என்று நினைக்கிறோம். அதற்காக முதற்கட்டமாக நாங்கள் அனைவரும் எதிர்வரும் 16 ஆம் திகதி தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதியாக்கி ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்.

காலத்தால் அழியாத பாடல்களை தந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு. இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும் இவருடைய பாடல்கள் மனிதர்களின் எண்ணங்களில் தேரேறி இதங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடி வருகின்றன.

தமிழர் விடுதலைக் கூட்டணியும் 11 கோரிக்கைகளை முன்வைத்தது

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் 11 கோரிக்கைகளை முன்வைக்க தீர்மானித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளதுடன், கோரிக்கையை ஏற்பவர்களுக்கு ஆதரவளிக்கவும் தீர்மானித்துள்ளது. வவுனியாவில் இன்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புறக்கணிப்பா, தீமை குறைந்த தீயதா?

(என்.கே. அஷோக்பரன்)
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், வடக்கு-கிழக்கின் ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து, ஒரு காரியத்தைச் செய்துள்ளன. இந்தக் காரியத்தை, நடத்திவைத்தது, யாழ்ப்பாணம், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்.