வீண் விரயமாகும் நீர் வடக்கு மற்றும் வடமத்திக்கு

களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் உபயோகப்படுத்தப்படாமல் கடலுக்கு அனுப்பப்படும் நீரை, வடக்கு மற்றும் வடமத்திய பிரதேசங்களுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் ஒன்றை இந்த வருடம் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மெதிரிகிரிய பகுதியில் நேற்று (11) இடம்​பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ஈரான் கிளர்ச்சி: அரங்கேறாத ஆட்டம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அரங்கேறுவதற்காகவே ஆட்டங்கள் ஆரம்பிக்கின்றன. ஆனால், ஆட்டங்கள் எல்லாம் அரங்கேறுவதில்லை. ஆட்டங்கள் பலவகை; அதில் அரங்காடிகள் பலவகை. ஆட்டங்கள் அரங்கேறுவது அவ்வளவு இலகல்ல. அதற்கு அரங்காடிகளின் பங்களிப்பு முக்கியம். அரங்காடிகள் இருந்தாலும் ஆட்டம் அரங்கேறும் என்பதற்கான உத்தரவாதம் எதையும் தரவியலாது. அரங்குகள் சரியில்லாவிடின் ஆட்டம் அரங்கேறாது. ஆட்டம் அரங்கேறுவதற்கு விருப்பு மட்டும் போதாது. அதற்குப் பல அம்சங்கள் ஒருங்கே அமைய வேண்டும். அடி சறுக்கினால் ஆட்டமே ஆட்டங்காணும்.

(“ஈரான் கிளர்ச்சி: அரங்கேறாத ஆட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

‘சிறுபான்மைகளை’ ஒதுக்கும் அரசியல்

(Gopikrishna Kanagalingam)

இலங்கையின் அரசியல் கலாசாரமென்பது, முற்றுமுழுதாக ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தைக் கொண்டது என, யாரும் கூறிவிட முடியாது. நேரடியான இனவாதமும் மதவாதமும் பாலின ஒதுக்குதலும் காணப்படாவிட்டாலும், சுதந்திரம் பெறப்பட்ட பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும், இவை அனைத்தையும் கண்டே வந்திருக்கிறோம்.  இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலும், சிறுபான்மைகளை அல்லது சிறுபான்மைகள் என நாம் கருதுகின்ற சில பிரிவுகளை ஒதுக்கும் ஒன்றாகவே காணப்படுகிறது என்பது, வருத்தத்துக்குரியதாகவே இருக்கிறது.

(“‘சிறுபான்மைகளை’ ஒதுக்கும் அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் அரசியல் புலத்தில் விடை தெரியாத கேள்விகள்

(க. அகரன்)

‘சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த’ கதையாகியுள்ளது வடக்கு, கிழக்கு அரசியல் நிலைமைகள் என்றால் மறுப்பதற்கில்லை. தமிழர்களது போராட்ட வரலாறுகளும் அதனூடான உரிமைக்கான குரலும் ஓங்கி ஒலித்த காலத்தில் இருந்த திடமான அரசியல் களம், தற்போது தடம்புரளும் வங்குரோத்தில் செல்கின்றமை ஆரோக்கிமானதாக இல்லை.

(“தமிழர் அரசியல் புலத்தில் விடை தெரியாத கேள்விகள்” தொடர்ந்து வாசிக்க…)

திருகோணமலையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

திருகோணமலையில் இன்று நடைபெற்ற தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர். சிறப்பாக பெண்களின் பிரசன்னம் அதிகமாக இருந்தது. இதில்  கட்சியின் தலைவர் சுகு சிறீதரன் உரையாற்றினார் ஊழல் அற்ற வினைத்திறன் மிக்க உள்ளுராட்சி நிர்வாகத்தை ஏற்படுத்த தாம் செயற்படப் போவதாக இதில் மக்கள் எம்மோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். மக்களுடன் இணைந்து மக்களுக்கான ஆட்சியை அமைகப் போவதாக முன்னாள் வடக்கு கிழக்குமாகாண முதல் அமைச்சர் வரதராஜப் பெருமாள் தனது உரையில் தெரிவித்தார் மேலும் திருகோணமலை நகர சபையின் முதன்மை வேட்பாளர் சத்தியன் சிவகுமார் தான் தொடர்ந்தும் திருகோணமலை மக்களுடன் இணைந்து பல்வேறு மக்களுக்கான பணிகளை செய்துவருவதாகவும் பாடசாலைப் பிள்ளைகளுக்கான உபகரணங்கள் சீருடைகள் பெண்தலைமத்துவக் குடும்பங்களுக்கான செயற்திட்டங்கள் இளைஞர்களை சமூகத்தில் முன்னிறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார். கூடவே தன்னுடன் இணைந்து மக்களுக்காக பணியாற்றிவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி ஊள்ளுராட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பவர்களையும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்

முன்னணியின் முக்கியமான மாற்றம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்டு சுமார் எட்டு ஆண்டுகளாகின்றன.  இந்த எட்டு ஆண்டுகளுக்குள் முன்னணி இரண்டு பொதுத் தேர்தல்களில் மாத்திரம் போட்டியிட்டிருக்கின்றது. ஓர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் இரண்டு மாகாண சபைத் தேர்தல்களைப் புறக்கணித்திருக்கின்றது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. மாறாக, வேட்பாளர்களைத் தேடுவதில் ஏற்பட்ட சிக்கல்களினால் போட்டியிடவில்லை என்று முன்னணி தற்போது கூறிவருகின்றது. ஆக, மாகாண சபைத் தேர்தல்களை மாத்திரம் முன்னணி புறக்கணித்ததாகக் கொண்டு இந்தப் பத்தி மேலே செல்கின்றது.

(“முன்னணியின் முக்கியமான மாற்றம்” தொடர்ந்து வாசிக்க…)

சிறீலங்கா உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் தமிழ்ப் பெண்களும் – பகுதி 4

(ஏற்கனவே பதிவான பகுதிகள் 1 , 2 – பெண்களுக்கான இடஒதுக்கீடு , 3 – பெண்பிரதிநிதிகள் நேர்காணல் விமர்சனம்)

வேட்பாளருக்குத் தேவையான தகுதி தராதரங்கள்

பெண் வேட்பாளரின் 25% நியமன அவசியம் காரணமாக அதிகம் கல்வி கற்காத பெண்களும், கடந்த போர்க்கால அனுபவத்தைத் தவிர்ந்து, தற்போதைய உள்நாட்டுத் தேவைகளை முன்னெடுக்க முடியாதவர்களும் கூட போட்டியிட வருகிறார்கள் என்று தமிழ் பிரதேசத்தில் ஒரு சிலர் முறையிடுவதாக அறிகிறேன். இது நியாயமானதா என்று சற்று உற்று நோக்க வேண்டியுள்ளது. நானும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவள் என்பதாலும், மெதடிஸ்ட் மிஷனரிமார் நிர்மாணித்த பாடசாலையில் கற்றவள் ஆதலாலும், இது போன்ற முறையீடுகள் அதிகமாக பிரித்தானிய காலனித்துவத்திலும், அதிலிருந்து முற்றிலும் விடுபட முடியாதவர்களிலிருந்து வெளிப்படுவதாகவும், அதன் தொடர்ச்சியாகவே சிறீலங்கா அரசியல் வழமை இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களிடமும் இருந்து தான் வரும் என்பதையும், அநேகமாக வடபிரதேசத்தில் யாழ் வளைகுடாவிலிருந்தே வரும் என்பதையும் உணர்கிறேன். இதற்கு அடிப்படைக் காரணம் இந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்றும் கல்வி வளத்தில் குன்றியவர் அல்ல, எந்த இக்கட்டான நேரத்திலும் கல்வி மறுக்கப்பட்டவரோ, இடை நிறுத்தப்பட்டவரோ அல்ல.

(“சிறீலங்கா உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் தமிழ்ப் பெண்களும் – பகுதி 4” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக அகதிகள் முகாம்களில்; இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரிகள் திடீர் விஜயம்.

(அ.விஜயன்)
இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் மறுவாழ்வுத்துறையினரும் இணைந்து தமிழகத்தின் 24 மாவட்டங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி மக்களை பார்வையிட்;டு வருகின்றனர். Ministry of home affairs இல் இருந்து 8 உயர் அதிகாரிகள் முகாம்களைப்பார்க்க விஜயம் செய்துள்ளனர். இவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து தமிழக அகதிகள் மறுவாழ்வுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கத்தினருடன் இணைந்து முகாம்களை தை 5ம் திகதியில் இருந்து 8ம் திகதி வரை பார்த்து வருகின்றனர்.

(“தமிழக அகதிகள் முகாம்களில்; இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரிகள் திடீர் விஜயம்.” தொடர்ந்து வாசிக்க…)

இன்றைய இலங்கை அரசியல் யதார்த்தம்

பேரினவாத-மக்கள் விரோத-தரகு முதலாளிகளின் அரசுக்கு,

தமிழ்த் தேசியத்தின் எதிர்ப்புக்குரலே ஒரேயொரு எதிர் சக்தியாக தற்போது விளங்குகிறது!

இந்த எதிர்ப்புக் குரலை கைவிடும் போக்கு என்பது, இந்த அரசுடன் கூட்டுச்சேர்ந்து இயங்குவது என்ற பொருளையே தரும்…

(“இன்றைய இலங்கை அரசியல் யதார்த்தம்” தொடர்ந்து வாசிக்க…)

‘இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டாமைக்கு பேரினவாத தேசியக் கட்சிகளே முட்டுக்கட்டை’

‘நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள இனப்பிரச்சினை தொடர்பில், தந்தை செல்வா முதல் சம்பந்தன் ஐயா வரை அனைவரும் பேச்சுவார்தைகளில் ஈடுபட்ட போதிலும், இதுவரை இறுதி முடிவு கிடைக்காமைக்கு, பேரினவாத தேசிய கட்சிகளே காரணம்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

(“‘இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டாமைக்கு பேரினவாத தேசியக் கட்சிகளே முட்டுக்கட்டை’” தொடர்ந்து வாசிக்க…)