வீண் விரயமாகும் நீர் வடக்கு மற்றும் வடமத்திக்கு

களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் உபயோகப்படுத்தப்படாமல் கடலுக்கு அனுப்பப்படும் நீரை, வடக்கு மற்றும் வடமத்திய பிரதேசங்களுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் ஒன்றை இந்த வருடம் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மெதிரிகிரிய பகுதியில் நேற்று (11) இடம்​பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.