யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடும்போக்குவாத்தை அனுமதிக்கின்றார் என பிரபல கல்வியியலாளர் கலாநிதி ராஜன் ஹூல் குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யாழ் பல்கலைக்கழக துணை வேந்தரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என அவர் தெரிவித்துள்ள அவர் மாணவர்கள் கடும்போக்குவாத போராட்டங்களை நடாத்த அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக எழுக தமிழ் போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதனை அல்லது மாணவர்கள் பங்கேற்பதனை துணை வேந்தர் தடுத்திருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாக உள்ளன.
கல்வி மையங்கள் கலவர மையங்களாக மாறிய விந்தை
(கருணாகரன்)
விடுதலைப்புலிகளும் ஹிரு குழுவினரும் இணைந்து 2004ஆம் ஆண்டில் ‘தமிழ் – சிங்களக் கலைக்கூடல்’ என்ற நிகழ்வொன்றைக் கொழும்பில் நடத்தியிருந்தனர். அது இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலம். சமாதான முன்னெடுப்புகளுக்கு அனுசரணையாக தமிழ், முஸ்லிம், சிங்களச் சமூகங்களுக்கிடையே பரஸ்பரப் புரிந்துணர்வை எட்டுவதற்கு கலைஞர்களும் படைப்பாளிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் செயற்பட வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கலைக்கூடல் நிகழ்வு நடத்தப்பட்டது.
(“கல்வி மையங்கள் கலவர மையங்களாக மாறிய விந்தை” தொடர்ந்து வாசிக்க…)
‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு ‘நாம் ஆதரவு’: இ.தொ.கா தெரிவிப்பு
“எழுக தமிழ்” பேரணியில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நியாய பூர்வமான கருத்துகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழு மனதுடன் ஆதரவு அளிக்கிறது என, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
(“‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு ‘நாம் ஆதரவு’: இ.தொ.கா தெரிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)
முஸ்லிம்களின் பூர்வீகம், தமிழர்களின் வரலாற்றினைவிட பழமை வாய்ந்தது..!
(SM சபீஸ்)
வடமாகணத்தில் அரங்கேறிய எழுக தமிழ் நிகழ்வில் வடக்கோடு கிழக்கை இணைத்தே தீரவேண்டும் என்ற கோசத்துக்கு C V விக்னேஸ்வரன் கூறிய வரலாற்றை இன்னுமொருமுறை அவர் திரும்பி பார்க்க வேண்டும்.
(“முஸ்லிம்களின் பூர்வீகம், தமிழர்களின் வரலாற்றினைவிட பழமை வாய்ந்தது..!” தொடர்ந்து வாசிக்க…)
சமாதானத்தை குழப்ப திலீபனை சாகடித்த பிரபாகரன்
அது இந்திய அமைதிபடை இலங்கையில் கால்பதித்த நேரம், சிங்கள தாக்குதலிலிருந்து தம்மை காக்க இந்தியா வந்ததை ஈழதமிழர்கள் கொண்டாடிகொண்டிருந்த நேரம், ஜெயவர்த்தனே இறங்கிவந்து தமிழருக்கு தனி மாகாணம் கொடுக்கலாம் என முதன்முதலாக சொல்லி இருந்த நேரம். அதற்கு மேலும் இழுத்தால் நிலமை இன்றைய சிரியா அளவிற்கு செல்லலாம் என்பதால் எல்லா குழுக்களும் இணக்கபாட்டுக்கு வந்திருந்த நேரம். புலிகளும் ராஜிவ் ஒப்புகொண்ட மாதாந்திர 50 லட்சத்தை வாங்கிகொண்டு எப்படியும் ஜெயவர்த்தனேவுக்கும் ராஜிவிற்கும் பிணக்கினை ஏற்படுத்தி மறுபடியும் சண்டை தொடங்கலாம் என எதிர்பார்த்த நேரம்.
(“சமாதானத்தை குழப்ப திலீபனை சாகடித்த பிரபாகரன்” தொடர்ந்து வாசிக்க…)
சம உரிமை இயக்கம் யாழில் நடாத்தும் மூன்று நாள் கலாச்சார விழா
உலகத் தமிழ் நாடக அரங்கு
உலகத் தமிழ் அரங்க ஆராய்ச்சி மையம்
தமிழ் நாடக அரங்கு இன்று உலகம் தழுவிய ஒன்றாய் பரந்து பட்ட ஒரு தளத்தில் உரையாடலுக்கான காத்திரமான செல்நெறிகளையும், பல்வேறு விதமான சிந்தனைப்பள்ளிகளையும்(school of thorts) கொண்டது மரபு வழி அரங்குகளயும் நவீன நாடக ஆற்றுகைகளையும் , கொண்டதே நம் தமிழ் அரங்கு.
சி.வியை கைது செய் – உதய கம்மன்பில
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து சிறையில் அடைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார். கொழும்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
சமூக வலைத்தளங்கள் பற்றிய கணிப்பு???
எம் மண்ணில் அண்மையில் அரங்கேறிய காட்சிப்பதிவு, சமூக வலை தளத்தில் வந்ததால், சிறுமி மீதான வன்முறை சம்பவம் அம்பலமாகி, நீதிமன்ற வாசலை தட்டியது. இதுவரை காலமும் அடுத்தவர் தனிப்பட்ட வாழ்க்கை பக்கம் திரும்பிய காட்சி படுத்தல், சிறுவர் துன்புறுத்தல் பக்கம் திரும்பியது, வைத்தியர் கையில் உள்ள கத்தியும், கசாப்பு கடைகாரன் கையில் உள்ள கத்தியும் செய்யும் செயல் பற்றிய, வித்தியாச செய்தியை சொல்கிறது.
இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசசேலத்தை அங்கிகரிப்பேன் – டொனால்ட் ட்ரம்ப்
தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், ஜெருசசேலத்தை, இஸ்ரேலின் தலைநகரமாக, ஐக்கிய அமெரிக்கா அங்கிகரிக்கும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசசேலத்தை அங்கிகரிப்பேன்’தெரிவித்ததாக, அவரது பிரசாரக் குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு நடைபெருமானால், ஐக்கிய அமெரிக்க கொள்கையின் பாரிய மாற்றமாக இது அமையும்.
(“இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசசேலத்தை அங்கிகரிப்பேன் – டொனால்ட் ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)