விமான நிலைய விஸ்தரிப்பு? மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது!

வலிகாமம் வடக்கு பலாலி விமான நிலையம், மயிலிட்டி துறைமுகம் ஆகியவற்றின் விஸ்தரிப்பு பணகளுக்காக பொதுமக்களின் நிலங்களை சுவீகரிக்கும் எண்ணம் இல்லை என மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார். கோப்பாய்- செல்வபுரம் பகுதியில் இடம் பெயர்ந்த மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சினால் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டப் பணிகளை இன்றைய தினம் அமைச்சர் பார்வையிட்டார்.

(“விமான நிலைய விஸ்தரிப்பு? மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது!” தொடர்ந்து வாசிக்க…)

நளினியின் தண்டனையை குறைப்பதை எதிர்த்த ஜெயலலிதா இன்று நாடகம் ஆடுவது ஏன்?

நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சோனியா மனிதநேய உணர்வோடு பரிந்துரைத்ததை தேசவிரோதச் செயல் என்று விமர்சனம் செய்த ஜெயலலிதா இன்று 7 பேருக்காக நாடகம் ஆடுவது ஏன்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

(“நளினியின் தண்டனையை குறைப்பதை எதிர்த்த ஜெயலலிதா இன்று நாடகம் ஆடுவது ஏன்?” தொடர்ந்து வாசிக்க…)

தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமைக்காக பிரபாகரன் வருந்தினார்?

தாம் வழங்கிய அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருந்தினார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். தாம் ஜனாதிபதியாக ஆட்சி வகித்த காலத்தில் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்ததாகவும் அதனை பிரபாகரன் நிராகத்திருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமைக்காக பிரபாகரன் பின்னர் வருந்தியுள்ளார் என சந்திரிக்கா தெரிவித்துள்ளார். லண்டனில் பணியாற்றிய அடிக்கடி யாழ்ப்பாணம் சென்று வரும் நபர் ஒருவரிடம் ‘பிரபாகரன், இவ்வாறு அரசியல் தீர்வுத் திட்த்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என வருந்தியுள்ளார் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

(“தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமைக்காக பிரபாகரன் வருந்தினார்?” தொடர்ந்து வாசிக்க…)

முகாம் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்!

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள 38 நலன்புரிமுகாம்களில் வசித்து வருகின்ற பொதுமக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை (04) முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் ஒரு கிழமை என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டமானது, முதலில் சுன்னாகம் கண்ணகி முகாமில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. தாங்கள் முன்னெடுக்கும் போராட்டத்தின் முடிவிலும், தங்கள் சொந்த நிலங்களுக்கு போக முடியாமல் போனால், தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெள்ளைக் கொடிகளுடன் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் தங்கள் காணிகளுக்குச் செல்வோம் என முகாம் மக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதற்கு முன்னர் தங்கள் குடும்ப அட்டைகளை மாவட்டச் செயலகத்திடம் ஒப்படைத்து விட்டு செல்வோம் என்றனர்.

சூளைமேட்டு வழக்கு காணொளியூடாக சாட்சியமளிக்கிறார் டக்ளஸ்?

சூளைமேட்டு வழக்கு தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் செல்லும் டக்ளஸ் தேவானந்தா காணொளியூடாக சென்னை செசன் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவுள்ளார். தனது இந்திய சட்டத்தரணிகள் ஊடாக டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்று விடுத்த கோரிக்கைக்கு அமைவாக காணொளியூடாக நீதிமன்றுக்கு சமுகமளிப்பதற்கும் சாட்சியமளிப்பதற்கும் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் 05-03-2016 சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் சமூகமளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் கலாச்சார ஆடைக் கட்டுப்பாடு?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களுக்கான ஆடை ஒழுங்கு விதிகள், எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கலைப்பீட மாணவர்கள் ஒன்றிய நிர்வாகத்தின் கலந்துரையாடலொன்று, நேற்று வியாழக்கிழமை (03) இடம்பெற்ற போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், பெண்கள் சேலை அணிய வேண்டும் எனவும் ஆண் மாணவர்கள் டெனிம் மற்றும் ரீ-சேர்ட் அணியக்கூடாது, சேர்ட் அணிந்துதான் அதுவும் ‘இன்’ பண்ணிதான் அணிய வேண்டும், சப்பாத்தை தினமும் அணிய வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முஸ்லிம் மாணவிகள் அவர்களின் கலாசார உடைகளுக்கு ஏற்றவகையில் ஆடைகளை அணிந்து, விரிவுரைகளில் கலந்துகொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

(“யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் கலாச்சார ஆடைக் கட்டுப்பாடு?” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்த பதுக்கிய பணத்தைக் கண்டறிய அமெரிக்க உதவி!?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கான பணம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள அமெரிக்காவின் உதவியை அரசு நாடியுள்ளது. வங்கிக் கணக்குகளுடன் தொடர்புடைய விவரங்களை இலங்கையிடம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச வர்த்தகத்துறை இராஜங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே இராஜாங்க அமைச்சர் சுஜீவ இந்தத் தகவலை வெளியிட்டார்.

(“மஹிந்த பதுக்கிய பணத்தைக் கண்டறிய அமெரிக்க உதவி!?” தொடர்ந்து வாசிக்க…)

உம்மன்சாண்டி… பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி

விழா ஒன்றில் பங்கேற்க வந்த கேரள முதல்வரை, ‘உம்மன்சாண்டி…’ என்று பெயர் சொல்லி அழைத்து, இரண்டாம் வகுப்பு மாணவி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த மாணவியை நோக்கி, உம்மன்சாண்டி சிரித்த படியே நடந்து சென்று, அவரது கோரிக்கையை கேட்டு நிறைவேற்றினார் தன்னை பெயர் சொல்லி அழைத்ததற்காக பாராட்டினார்.

(“உம்மன்சாண்டி… பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி” தொடர்ந்து வாசிக்க…)

படிக்கப் போன எமது பிள்ளைகளை மடக்கிப் பிடித்து படையணியில் சேர்த்தவர்களை விசாரணை செய்ய வேண்டும் !

(சலசலப்பு என்ற இணையத் தளம் வெளியிட்டிருக்கும் கட்டுரை இது. இக்கட்டுரையூடாவே இவர்கள் அம்பலப்படுவதும் இவர்களின் காழ்ப்புணர்ச்சியை ஒழித்து நின்று கொண்டு காட்டிக் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு செயல்படும் இழிச்செயல்களை அம்பலப்படுத்துவதற்காகவும் அவர்களின் கட்டுரையை அப்படியே பிரசுரிக்கின்றோம் – ஆர்)

1987ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட “ஒப்பரேஷன் லிபரேஷன்” இராணுவ நடவடிக்கையின் போது தாக்குப்பிடிக்க முடியாமல் புலிகள் பின்வாங்கினர். இதைத்தொடர்ந்து இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் கால் பதித்தது. வட-கிழக்கில் மாகாண சபை உருவாக்கப்பட்டு, தற்காலிகமாக இணைந்த வட கிழக்கின் மாகாண சபையை ஆளுகின்ற அரிய சந்தர்ப்பம் ஈ.பீ.ஆர்.எல்.எப். இயக்கத்திற்கே கிடைத்தது.

(“படிக்கப் போன எமது பிள்ளைகளை மடக்கிப் பிடித்து படையணியில் சேர்த்தவர்களை விசாரணை செய்ய வேண்டும் !” தொடர்ந்து வாசிக்க…)

புங்குடுதீவு மாணவி கொலை: ஒருதலைக் காதலே காரணம்; ஐவர் வன்புணர்வு செய்தனர்

புங்குடுதீவு மாணவியின் கொலையானது ஒருதலைக் காதல் காரணமாக இடம்பெற்றது எனவும் அம்மாணவியை ஐந்து பேர் இணைந்தே கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளர் என்றும் அதற்கு, சுவிஸ் குமார் என்பவர் திட்டம்தீட்டிக் கொடுத்தார் எனவும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்தனர். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏம்.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

(“புங்குடுதீவு மாணவி கொலை: ஒருதலைக் காதலே காரணம்; ஐவர் வன்புணர்வு செய்தனர்” தொடர்ந்து வாசிக்க…)