சூளைமேட்டு வழக்கு காணொளியூடாக சாட்சியமளிக்கிறார் டக்ளஸ்?

சூளைமேட்டு வழக்கு தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் செல்லும் டக்ளஸ் தேவானந்தா காணொளியூடாக சென்னை செசன் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவுள்ளார். தனது இந்திய சட்டத்தரணிகள் ஊடாக டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்று விடுத்த கோரிக்கைக்கு அமைவாக காணொளியூடாக நீதிமன்றுக்கு சமுகமளிப்பதற்கும் சாட்சியமளிப்பதற்கும் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் 05-03-2016 சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் சமூகமளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.