செக் ரிப்பப்ளிக்

செக் ரிப்பப்ளிக் – கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று. ஜெர்மனி, போலந்து, சுலோவாக்கியா, ஆஸ்திரியா என நான்கு நாடுகளுக்கு நடுவே அமைந்திருக்கும் நாடு இது.

(“செக் ரிப்பப்ளிக்” தொடர்ந்து வாசிக்க…)

எதியோப்பியா: சைகை சொன்ன செய்தி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஒரு செய்தியைச் சொல்வதற்கான வழிகள் பல. சில நேரடியானவை; சில மறைமுகமானவை; இன்னும் சில செயல்களாலானவை. மொத்தத்தில் அனைத்தும் ஏதோவொரு வழியில் செய்தியைச் சொல்லவே விளைகின்றன. ஒடுக்கப்படுவோரை விட ஒடுக்குவோரின் குரல் நீண்ட தூரங்களை எட்டுவதுண்டு. அவர்களின் வலிமையும் அதற்குத் துணைபோவோரும் இக்குரல்களை உரத்து ஒலிக்கச் செய்கிறார்கள். ஒடுக்கப்படுவோரின் நிலை மோசமானது. அவர்களுக்கான குரல் மெல்லியது. ஆனால் வலிமையற்றோரின் கைகளில் ஆயுதங்கள் இல்லாமல் இல்லை. அவர்கள் தங்கள் குரல்களை உரத்து ஒலிப்பதற்கு மிகப் பொருத்தமான தருணங்களைத் தெரிவு செய்கிறார்கள். அவை மிகவும் பலம் வாய்ந்த ஆயுதங்களாக மாறிவிடும். அவை ஏற்படுத்தும் அதிர்வலைகள் புரட்சிகரமானவை. எல்லோரையும் திரும்பிப் பார்க்கச் செய்பவை.

(“எதியோப்பியா: சைகை சொன்ன செய்தி” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்–(12)

(காடுகளில் தஞ்சமடைபவர்களுக்கு காத்திருந்த ஆபத்து)

வன்னியில் இரவுப்பொழுதுகள் அச்சமூட்டுபவையாக மாறிபோய்விட்ட சூழலில் காடுகளில் தஞ்சமடைந்த இளம் ஆண்களும் பெண்களும் வெயில் மழை,குளிர்,காற்று, நோய்,பாம்புகள் என பல்வேறு கஸ்டமான நிலைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். வீடுகளில் இருந்து புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்படுவதை விட இவ்வாறான துன்பங்களுக்கு தமது பிள்ளைகள் முகம்கொடுப்பது எவ்வளவோ மேலானது என அவர்களின் பெற்றோரும் நினைக்க தொடங்கியிருந்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்–(12)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 64)

பற்குணம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோதும் எந்த அரசியல்வாதிகளின் உதவியையும் நாடவில்லை.அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியை நாடி வரலாம் என சிலர் நினைத்தார்கள்.அதுவும் நடக்கவில்லை.மூதூர் புதிய பா.உ ஆன மஹ்றூப் உதவி செய்யத் தயாராக இருந்தும் விரும்பவில்லை.

(“பற்குணம் A.F.C (பகுதி 64)” தொடர்ந்து வாசிக்க…)

இத்தாலியில் அதிர்ந்தன மலைப்பகுதிகள்: 120 பேர் பலி

இத்தாலியில் மலைப்பகுதிகள் நிறைந்துகாணப்படும் மத்திய இத்தாலியில், இன்று ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக, குறைந்தது 120 பேர் பலியாகியுள்ளனர் அறிவிக்கப்படுகிறது . 6.2 றிக்டர் அளவில் ஏற்பட்ட பலமான இந்தப் பூமியதிர்ச்சி, கட்டடங்களைக் கீழே வீழ்த்தியிருந்தது.

(“இத்தாலியில் அதிர்ந்தன மலைப்பகுதிகள்: 120 பேர் பலி” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 63 )

இனக்கலவரம் முடிந்தபின் அகதிகளாக இடம்பெயர்ந்த அரசாங்க பணியாளர்கள் கடமையை உறுதி செய்யும் விதமாக எல்லோரும் யாழ்ப்பாண கச்சேரியில் கையெழுத்து போட்டு வந்தார்கள்.பற்குணமும் அவ்வாறே செய்தார்.
இந்நிலையில் பற்குணத்துக்கு இரண்டு சிக்கல்கள் இருந்தன.ஒன்று வழக்கு.இரண்டாவது மீண்டும் அதே இடத்தில் அல்லது தெற்கில் வேலை செய்யமுடியாது.அரசியல்வாதிகளோடு இணந்து செயற்படாததால் எதுவும் இலகுவில் சாத்தியம் இல்லை.
இந்நிலையில் மூதூர் தங்கத்துரை பற்குணம் தப்பிய செய்தி அறிந்து மகிழந்தார்.பின்னர் அமிர்தலிங்கத்திடம் எப்படியாவது பற்குணத்தை யாழ்ப்பாணம் மாற்றவேண்டும் என கோரிக்கையை வைத்தார்.பொதுத்தேர்தலில் தங்கத்துரை நிராகரிக்கப்பட்டதால் அவரின் இக் கோரிக்கைக்கு அமிர்தலிங்கம் செவிசாய்த்தார்.பின்னர் இது தொடர்பாக சாவகச்சேரி பா.உ வி.என்.நவரத்திரத்திடமும் அமிர்தலிங்கம் கதைத்தார்.அவரகள் இருவருக்கும் பற்குணம் யாழ்ப்பாணத்தில் பணியாற்ற வருவதில் ஆட்சேபனை இருக்கவில்லை.

(“பற்குணம் A.F.C (பகுதி 63 )” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்–(11)

(பயங்கரமான இரவுபொழுதுகள்)

2006 ஜூன் தொடக்கம் -2009 மே வரையான இந்த காலப்பகுதி கிளிநொச்சி முல்லைத்தீவு மக்களுக்கு அவர்களின் வாழ்நாட்களில் மறக்க முடியாத இருண்ட காலமாகவே இருந்தது. மாலை ஆறுமணியாகிவிட்டால் வீட்டில் வெளிச்சம் வைக்கவே மக்கள் பயப்படதொடங்கியிருந்தனர். இரவில் நாய்கள் குறைத்தால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அலைமோதும் இளைஞர் யுவதிகள் அவர்களை பாதுகாக்க வழிதெரியாது தவிக்கும் பெற்றோர்கள், உறவினர்கள் என அனைவரும் ஒரு அச்ச சூழ்நிலைக்குள் வாழவேண்டியிருந்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்–(11)” தொடர்ந்து வாசிக்க…)

மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி-2]

1988ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி, திருமலை நகரசபை மண்டபத்தில், ஆளுநர் முன் இடம்பெற்ற சத்திய பிரமாண வைபவம் என் கண்முன் விரிகின்றது. மேடையில் ஆளுநர், அன்றைய அரச அதிபர் மற்றும் மேலதிக அரச அதிபர் அமர்ந்திருக்க, உறுப்பினர்களான நாம் அனைவரும் கீழே வரிசையாக தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் போல் அமர வைக்கப்பட்டோம். மேலதிக அரச அதிபர் மேடையில் ஒலி வாங்கி முன் நின்று சத்திய பிரமாண வாசகங்களை வாசிக்க நாமும் கோரசாக அதனை தொடர்ந்தோம். பின்பு பேரவை தலைவர், மற்றும் பிரதி பேரவை தலைவர் பெயர்கள் முன்மொழிந்து, வழிமொழியப்பட போட்டி இன்றிய தெரிவாக அது நிறைவேறியது. அப்போது அம்பாறையில் இருந்து தெரிவான 1 யு என் பி உறுப்பினரும், திருமலை, மட்டக்களப்பு, அம்பாறையில் இருந்து தெரிவான 17 முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் சமூகமளிக்கவில்லை.

(“மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி-2]” தொடர்ந்து வாசிக்க…)

பிலிப்பைன்ஸ் ‘போதைக்கெதிரான யுத்தம்’: இதுவரை 1,900 பேர் மரணம்

பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாக இவ்வாண்டு மே மாதத்தில் றொட்ரிகோ டுட்டேர்ட்டே தெரிவுசெய்யப்பட்ட பின்னர், 1,900க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய பொலிஸ் தலைவர் றொனால்ட் டெலா றோசா விடுத்த அறிவிப்பிலேயே இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

(“பிலிப்பைன்ஸ் ‘போதைக்கெதிரான யுத்தம்’: இதுவரை 1,900 பேர் மரணம்” தொடர்ந்து வாசிக்க…)

விமானம் தாமதமான விவகாரம்: பயணிகளுக்கு ரூ. 26 மில். நட்டஈடு

ஜேர்மனியின் ப்ராங்போர்ட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்கா நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான விமானம், குறிப்பிட்ட நேரத்தை விட 15 மணித்தியாலங்கள் தாமதித்துப் பயணித்ததால், அவ்விமானத்தில் பயணித்த 259 பயணிகளுக்கு, 260 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை நட்டஈடாக வழங்க வேண்டிய சூழ்நிலை, குறித்த விமானசேவை நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(“விமானம் தாமதமான விவகாரம்: பயணிகளுக்கு ரூ. 26 மில். நட்டஈடு” தொடர்ந்து வாசிக்க…)