தமிழக தலித் இயக்கத் தலைவர்கள் மவுனம் காக்கிறார்கள்: ஜிக்னேஷ் மோவானி

குஜராத்தில் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக உனாவில் மிகப்பெரிய எழுச்சியை நீங்கள் நடத்தியிருந்தீர்கள், இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என்று பேசப்பட்டது, ஆனால் அதன் பின்னர் நடந்த உ.பி. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதே, உத்தரப் பிரதேசத்தில் 21 சதவீத தலித் மக்கள் இருக்கிறார்கள் , ஆனால் அவர்கள் மத்தியில் உனா எழுச்சி எந்தத் தாக்கத்தையும் உருவாக்கவில்லையா?

(“தமிழக தலித் இயக்கத் தலைவர்கள் மவுனம் காக்கிறார்கள்: ஜிக்னேஷ் மோவானி” தொடர்ந்து வாசிக்க…)

இதயத்தால் இணைந்தவரே!? வரலாற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்!?

எம் தேசத்து மன்னர் ஆட்சி முறைமை அன்னியர் வரவால் அகன்று, போத்துக்கேயரும் அவர் தடம் அறிந்து வந்த ஒல்லாந்தரும் ஆண்ட பின், ஆங்கிலேயர் எம் முழு தேசத்தையும் ஆக்கிரமித்தனர். ஆட்சி இலகுவிற்காக மாகாணங்களாக எம் தேசம், கொழும்பை தலைநகராக கொண்ட ஆளுமைக்கு உட்பட்டது. இரண்டாம் உலக போரின் பின் அது சிங்கள தலைமைகளிடம் கையளிக்கப்பட்டது.

(“இதயத்தால் இணைந்தவரே!? வரலாற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்!?” தொடர்ந்து வாசிக்க…)

தொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு

வடக்கு – கிழக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்களினால் மூர்க்கம் பெற்றிருக்கின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலுரைக்க வலியுறுத்தும் போராட்டங்கள், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டங்கள் மற்றும் அரச வேலை கோரும் பட்டதாரிகளின் போராட்டங்கள் என்று போராட்டங்களுக்கான காரணங்கள் தமிழர் தாயகப் பகுதியெங்கும் நிறைந்திருக்கின்றன.

(“தொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

இது அனர்த்தமா அல்லது படுகொலைகளா?

தமிழ்-சிங்கள புதுவருடமான 14.04.2017 அன்று கொலன்னாவை நகரசபைக்குட்பட்ட பிரதேசமான மீதொட்டமுல்லயில் திண்மக்கழிவு (குப்பை) மேடு சரிந்ததில், அதனைச்சூழ இருந்த 147 வீடுகள் புதையுண்டு, மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரையில் 30 சடலங்கள் மீடகப்பட்டுள்ளன. மேலும் குறைந்தது 20 பேராவது புதையுண்டிருக்கலாமென நம்பப்படுகின்றது. புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக வேறு இடங்களிலிருந்து வந்த மக்களும் அங்கு கூடியிருந்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கையினைச் சரியாகக் கணிக்க முடியாதுள்ளதாகத் தெரியவருகின்றது. உலகெங்கிலும் அடிக்கடி மண்சரிவு மற்றும் பனிச்சரிவு ஏற்படுவதுபற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் திண்மக்கழிவு மேடு சரிந்து இவ்வளவு தொகையாக மக்கள் இறந்தது முதன்முறையாக இலங்கையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.

(“இது அனர்த்தமா அல்லது படுகொலைகளா?” தொடர்ந்து வாசிக்க…)

மே மாதம் 13 ம் திகதி உலகப் போர் தொடங்கும்…! சிரிய அதிபர் அஸாத் கொல்லப்படுவார்!

எதிர்கால உலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறிந்தவன் வானத்தையும் பூமியையும் படைத்த இறைவன் ஒருவனே. மனிதர்கள் தம் அறிவைக் கொண்டோ, கற்பனையைக் கொண்டோ கணித்துக் கூறுபவை நூற்றுக்கு நூறு வீதம் சரியாக அமைந்து விடுவதில்லை. ‘நாளைக்கு மழை பெய்யும்.’ என்று மனிதன் கணிப்பது பொய்யாகி வெயிலடிக்கும். அவ்வாறே, ‘ அடுத்த வருடம் உலகம் அழிந்துவிடும்’ என்ற மனிதனின் கணிப்பைத் தாண்டி உலகம் பல ஆண்டுகள் வழமை போல இயங்கிக் கொண்டிருக்கும்.

(“மே மாதம் 13 ம் திகதி உலகப் போர் தொடங்கும்…! சிரிய அதிபர் அஸாத் கொல்லப்படுவார்!” தொடர்ந்து வாசிக்க…)

டொனால்ட் ட்ரம்ப் ஒரு மன நோயாளி! முழு உலகும் ஆபத்தில்! உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல்!

(எஸ். ஹமீத்)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்ஒரு மிக மோசமான மன நோயாளியென்றும் அவர் கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க உளவியல் நிபுணர்கல் குழுவினர் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை வெளியிட்டுள்ளனர். இந்த அதிர்ச்சிச் செய்தியினால் அமேரிக்கா மட்டுமல்ல, கிட்டத்தட்ட முழு உலகமும் ஆடிப் போயுள்ளது.

(“டொனால்ட் ட்ரம்ப் ஒரு மன நோயாளி! முழு உலகும் ஆபத்தில்! உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல்!” தொடர்ந்து வாசிக்க…)

மனோ கணேசனும் நெடியவனும்

சிங்கள அரசுடன் கைகோர்த்த புலம்பெயர் புலிகளின் பிரதிநிதிகள். கனடா, நோர்வே போன்ற பல நாடுகளில் இருந்து அரசின் அழைப்பின் பேரில் சென்று, அமைச்சர் மனோகணேசனை சந்தித்த நேரம் எடுத்துக் கொண்ட படம். இதில் நோர்வேயில் இருந்து சென்றவர்கள் (அமைச்சருக்கு அருகில்) நெடியவன் தலைமையில், புலிகள் அமைப்பை மீளக் கட்டமைக்க உதவியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

(“மனோ கணேசனும் நெடியவனும்” தொடர்ந்து வாசிக்க…)

இன்று தோழர் லெனின் பிறந்த நாள்

”1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன.

(“இன்று தோழர் லெனின் பிறந்த நாள்” தொடர்ந்து வாசிக்க…)

காணி விடுவிப்புப் பேச்சுவார்த்தை தோல்வி

“பலாலி விமான நிலையத்தைச் சூழ்ந்து காணப்படும் 4 ஆயிரம் ஏக்கர் பகுதியை விடுவிப்பது தொடர்பாக இன்று (21) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்டக் கலந்துரையாடல், யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (21) இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“காணி விடுவிப்புப் பேச்சுவார்த்தை தோல்வி” தொடர்ந்து வாசிக்க…)

நாவல் விதைக் கோப்பி : நீரிழிவு நோய்க்கான இயற்கை மருந்து!

வெப்ப மண்டலத்திற்குரிய மரமான நாவல் மரம் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, நேபாளம், போன்ற தெற்காசிய நாடுகளிலும் மலேசியா, இந்தோனேசியா போன்ற தென் கிழக்காசிய நாடுகளிலும் காணப்படுகிறது. கிராமப் புறங்களிலும் ஆற்றங்கரைகளிலும் குளக்கரைகளிலும் தன்னிச்சையாக இந்த மரங்கள் வளர்ந்திருப்பதைக் காணலாம். முப்பது மீற்றர் உயரத்திற்கு வளரக்கூடிய இந்த மரமானது நூறு ஆண்டுகளுக்கு மேலான ஆயுளைக் கொண்டுள்ளது. இது இயல்பாக வளரக் கூடிய தன்மையினைக் கொண்டுள்ளது. இந்த மரம் செழித்துள்ள இடங்களில் நிலத்தடி நீர் நன்கு காணப்படும் எனக் கருதப்படுகின்றது.
நாவல் மரத்தின் மரப்பட்டை, இலை, பழம், விதை ஆகிய அனைத்தும் மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டதுடன் பல்வேறுபட்ட நோய்களுக்கு நிவாரணியாக விளங்குகின்றன. இதன் பயன்பாடு பண்டைக் காலத்தில் இருந்தே ஆயுள் வேத மருத்துவ முறைகளிலும், யுனானி மருத்துவத்திலும் சீன வைத்திய முறைகளிலும் இருந்து வருகின்றது.

(“நாவல் விதைக் கோப்பி : நீரிழிவு நோய்க்கான இயற்கை மருந்து!” தொடர்ந்து வாசிக்க…)