வட கொரியாவின் ஏவுகணை 10 நிமிடங்களில் ஜப்பானுக்கு…!

அவசர அவசரமாக ஜப்பான் நாட்டின் அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது. ஜப்பானின் குடிமக்களுக்கான பாதுகாப்பு வலைத்தளத்தில், வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால், ஜப்பான் மக்கள் எல்லோரும் உறுதியான கொங்கிறீட் இடமாகப் பார்த்துப் பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறும் ஜன்னல்களுக்கு அருகில் எவரும் நின்று கொண்டிருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

(“வட கொரியாவின் ஏவுகணை 10 நிமிடங்களில் ஜப்பானுக்கு…!” தொடர்ந்து வாசிக்க…)

‘பெயர்’ மாற்றம் வேண்டாம்

வவுனியா வடக்கில் உள்ள புராதனக் கிராமங்களின் பெயர்களை எக்காரணம் கொண்டும் மாற்றவேண்டாமென, வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது.

(“‘பெயர்’ மாற்றம் வேண்டாம்” தொடர்ந்து வாசிக்க…)

அன்றைய கதையும் இன்றைய நிஜமும்! பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகளே…வாசியுங்கள்!

(எஸ். ஹமீத்)

அன்றைய கதை இது:

ஓர் இளைஞன் ஒரு பெண்ணைக் காதலித்தான். ஆனால் அந்தப் பெண்ணோ இவனது காதலை மறுத்தாள். அவளுக்கு இளைஞன் விலையுயர்ந்த ஏராளமான பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்தான். அப்போதும் அவள் இவனை விரும்பவில்லை. இறுதியாக இளைஞன் அந்தப் பெண்ணிடம் சொன்னான். ”என்னைக் காதலிப்பதற்கு நீ என்னதான் எதிர்பார்க்கிறாய்…? சொல்; எதுவாயினும் கொண்டு வந்து தருகிறேன்!”

(“அன்றைய கதையும் இன்றைய நிஜமும்! பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகளே…வாசியுங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

”அமெரிக்கப் போர்க் கப்பலை ஒரே அடியில் மூழ்கடிப்போம்!” வட கொரியா சூளுரை!

”அமெரிக்க அணு சக்தி விமானம் தாங்கிக் கப்பலை ஒரே அடியில் மூழ்கடித்து அழிப்பதற்கு எங்களின் புரட்சிப் படைகள் தயாராகவே உள்ளன. பெரிய விலங்கு என்று எம்மாற் கூறப்படும் அதனை அழிப்பதன் மூலம் எங்கள் இராணுவத்தின் சக்தியை அமெரிக்காவுக்கு எடுத்துரைப்போம்!” என்று வடகொரியாவின் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் பத்திரிகையான நோடாங் ஷின்முன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது செய்தியிற் கூறியிருக்கிறது.

(“”அமெரிக்கப் போர்க் கப்பலை ஒரே அடியில் மூழ்கடிப்போம்!” வட கொரியா சூளுரை!” தொடர்ந்து வாசிக்க…)

மலேரியா அற்ற நாடு இலங்கை : மகிழ்ச்சி! டெங்கு நிறைந்த நாடு இலங்கை : துக்கம்!

(எஸ். ஹமீத்)

மலேரியா அற்ற நாடாக நான்காவது முறையாகவும் இலங்கை தெரிவாகி இருப்பதானது வரலாற்றிலேயே முதன்முறை என்றும், இலங்கையின் சுகாதார வளர்ச்சியில் இது ஒரு மைல்கல் வெற்றி என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். மலேரியா நோய் பற்றிய விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு ஒன்று இன்று கொழும்பில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்சொன்ன செய்தியைத் தெரிவித்துள்ளார்.

(“மலேரியா அற்ற நாடு இலங்கை : மகிழ்ச்சி! டெங்கு நிறைந்த நாடு இலங்கை : துக்கம்!” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் பாலியல் சாத்திரம் பார்த்த முனியப்பா! இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் இனியப்பா!!

(எஸ். ஹமீத்)

தன்னிடம் ஆன்மீக சக்தி நிறைந்திருப்பதாகச் சொல்லி சாத்திரம் பார்ப்பதில் ஈடுபட்டுப் பல பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய இலங்கையையைச் சேர்ந்த பாஸ்கர் முனியப்பா என்பவரைக் கனேடிய பொலிஸார் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தவுள்ளனர்.

(“கனடாவில் பாலியல் சாத்திரம் பார்த்த முனியப்பா! இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் இனியப்பா!!” தொடர்ந்து வாசிக்க…)

நீ வந்தால் ஆனையிறவு முகாமை பிடித்துவிடலாம் கருணாவிடம் கூறிய தலைவர்.

மட்டக்களப்பு போராளிகளுக்கு நன்கு பிடித்த வெள்ளை அரிசி சோறும் மிகவும் சுவையான கறிகளும் சமைத்துக்கொண்டு தலைவர் உரிய நேரத்துக்கு வந்தார். பொட்டம்மானிடம் பொறுப்பை கொடுத்து நாங்கள் முகாம் திரும்பினோம்
ஆனையிறவு தாக்குதல் விடையாக திரிவுபடுத்துதல் தகவல்கள் வருவதால் பல நண்பர்கள் என்னிடம் ஒரு பதிவை இடும் படி வேண்டியதால் இதை எழுதுகின்றேன். பொதுவாக நாங்கள் பரந்தன் பகுதியை கைப்பற்றிய போதே ஆனையிறவையும் கைப்பற்ற வேண்டும் என்பது திட்டமாக இருந்தது இதற்காக ஒரு படைத்தொகுதியை சுண்டிக்குளம் பகுதியால் இறக்கி பின்பக்கமாக ஆனையிறவை கைப்பற்ற வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது இதை நானே தலமைதாங்கினேன் திட்டமிட்டபடி தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.

(“நீ வந்தால் ஆனையிறவு முகாமை பிடித்துவிடலாம் கருணாவிடம் கூறிய தலைவர்.” தொடர்ந்து வாசிக்க…)

‘சம்பந்தன் செல்லும் பாதையில் கண்களை மூடிக்கொண்டு செல்வோம்’ – சித்தார்த்தன்

“ஈழத் தமிழ் அரசியலில் எத்தகைய முரண்பாடுகள், மாற்றங்கள் ஏற்பட்டாலும் அரசியலமைப்பு முயற்சிகள் முடிவுறும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தலைவர் சம்பந்தனையும் விட்டு விலகமாட்டோம்.அதுவரை அவர் செல்லும் பாதையில் கண்களை முடிக்கொண்டு செல்வோம்” என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

(“‘சம்பந்தன் செல்லும் பாதையில் கண்களை மூடிக்கொண்டு செல்வோம்’ – சித்தார்த்தன்” தொடர்ந்து வாசிக்க…)

தலைவனுக்கொரு மடல்…!

(எஸ். ஹமீத்.)

என்னுடையதும் எனது சமூகத்தினுடையதுமான தலைவனே…!

அஸ்ஸலாமு அலைக்கும்!

விழிகளின் கண்ணீர் வழிந்து விரல்களையும் நனைக்க நனைக்க உனக்கிந்த மடலையெழுதும் துர்ப்பாக்கியம் நேர்ந்ததெண்ணித் துடித்துத்தான் போகிறேன் தலைவா…!
தங்கமென நாம் நினைத்திருந்த தலைவன் ஒரு துருப்பிடித்த தகரமென அறிந்து கொண்டதனால் ஏற்பட்ட அக வலியை ஆற்றுப்படுத்த வழியற்றிந்தக் கடிதத்தையுந்தன் கண்களுக்கும் கல்புக்கும் சமர்ப்பிக்கின்றேன் தலைவா…!

(“தலைவனுக்கொரு மடல்…!” தொடர்ந்து வாசிக்க…)

நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு உதவிய பிரசன்னா – சினேகா

நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு பிரசன்னாவும், சினேகாவும் ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 41 நாட்களாக போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகியுள்ளது. விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் இதன் மூலம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

(“நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு உதவிய பிரசன்னா – சினேகா” தொடர்ந்து வாசிக்க…)