டொனால்ட் ட்ரம்ப் ஒரு மன நோயாளி! முழு உலகும் ஆபத்தில்! உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல்!

(எஸ். ஹமீத்)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்ஒரு மிக மோசமான மன நோயாளியென்றும் அவர் கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க உளவியல் நிபுணர்கல் குழுவினர் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை வெளியிட்டுள்ளனர். இந்த அதிர்ச்சிச் செய்தியினால் அமேரிக்கா மட்டுமல்ல, கிட்டத்தட்ட முழு உலகமும் ஆடிப் போயுள்ளது.

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றிற் பங்குபற்றிய பிரபல மனநல நிபுணர்களின் அந்தக் குழு சார்பில் உரையாற்றிய உளவியல் அறிஞர் ஜோன் கார்னர் என்பவர், அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிக மோசமான உளவியல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது ஆட்சி நடாத்துவதாகக் கூறியுள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் தொடக்கம் இன்றுவரை அவரது செயற்பாடுகள் மிகவும் அதிர்ச்சிதரத்தக்க வகையிலேயே காணப்படுவதாகவும், இது மிகப் பயங்கரமான -ஆபத்தான மனநோய்க்கான அறிகுறியெனவும், இந்த நிலைமையில் அவர் நாட்டை நிர்வகிப்பதென்பது மிகவும் ஆபத்தானது எனவும் தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமன்றி, குறித்த மனநிலையில் அதிபர் டிரம்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் பெருமளவில் பாதிக்குமெனவும், நாட்டு மக்களுக்கு அதிபர் தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவது உளவியல் மருத்துவர்களான தமது தார்மீகப் பொறுப்பு எனவும் ஜோன் கார்னர் தெரிவித்துள்ளார்.

அறிஞர் ஜோன் கார்னர் அவர்களின் இந்தக் கூற்றுக்கு அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளன.