மொட்டில் தமிழீழமும் நச்சு அரசியலும்

(Gopikrishna Kanagalingam)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீது, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனங்கள், மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழம் மலரப் போகிறது என, மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது பிரிவினரும், தேர்தல் பிரசாரக் காலத்தில் முன்வைத்த பிரசாரங்களுக்கான பதிலடியாகவே, எதிர்க்கட்சித் தலைவரின் பதிலடி அமைந்திருந்தது.

(“மொட்டில் தமிழீழமும் நச்சு அரசியலும்” தொடர்ந்து வாசிக்க…)

தொண்டையில் சிக்கிய முள்

(முகம்மது தம்பி மரைக்கார்)
‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்கிற நிலையை, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. “உள்ளூராட்சித் தேர்தலை நடத்துங்கள்” என்று, தேர்தலுக்கு முன்னர் கூச்சலிட்டவர்கள், தேர்தல் நடந்த பிறகு, அதன் விசித்திர முடிவுகளால், விழி பிதுங்கி நிற்கின்றனர். அரசியல் கட்சிகளின் உள்ளும் புறமும், உடைவுகளை ஏற்படுத்தி விடும் அபாயகரமான நிலைவரங்களை, உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

(“தொண்டையில் சிக்கிய முள்” தொடர்ந்து வாசிக்க…)

‘ஈழம் கரைகிறது’ மஹிந்தவின் வாக்குப் பலிக்குமா?

(காரை துர்க்கா)
இலங்கையில், அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அதிர்வலைகள் இன்னமும் ஓயந்தபாடில்லை. ஓயாத அலைகளாகவே அலை மோதுகின்றது. மேலும், ஓயப்போவதில்லை என்பது போலவே அரசியல் போக்குகள் தெரிகின்றன. கிராமிய மக்கள் மன்றங்கள் என அழைக்கப்படுகின்ற உள்ளூர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும், பிரதேச சபைகளுக்கான தேர்தல் முடிவுகள், முழு நாட்டையும் உலுப்பி விட்டிருக்கின்றன.

(“‘ஈழம் கரைகிறது’ மஹிந்தவின் வாக்குப் பலிக்குமா?” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் ஜோ! ஞாபக வெளியில் இருந்து……

பீக்கிங் சார்பு கம்யூனிஸ்ட கட்சியினூடாக தனது சமூக அரசியல் பிரவேசத்தை மேற்கொண்ட தோழர் ஜோ செனிவிரட்ண 60களின் பிற்பகுதியில் அதிலிருந்து வெளியேறி 1970 களின் முற்பகுதியில் ஏற்பட்ட இளைஞர் எழுச்சி காலத்தில் புதிய தேடல்களில் ஈடுபட்டார்.
1970 களின் முற்பகுதியில் இன சமூக ஒற்றுமைக்கு சவாலான நிலைமைகள் உருவான போது இன சமூக நல்லுறவிற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

(“தோழர் ஜோ! ஞாபக வெளியில் இருந்து……” தொடர்ந்து வாசிக்க…)

நாபாவை நேசித்த சிங்களத்தின் ஜோ செனிவரத்ன தோழர் நினைவாக!?

எம்மை நாம் இலங்கையர் என்ற எண்ணத்தை இல்லாமல் செய்ய எத்தனையோ இனக்கலவரங்கள் ஏற்ப்படுத்தப்பட்டு ஈழம் தான் முடிந்த முடிவு என நாம் முடிவெடுத்த வேளையில் அது தவறு ஒட்டுமொத்த அடக்குமுறமைக்கு எதிராகா நாம் ஒன்றுபட வேண்டும் என்ற சிந்தனையில் சிங்கள முற்ப்போக்கு சிந்தனையாளரை தன் வசம் ஈர்த்தவர் நாபா.

(“நாபாவை நேசித்த சிங்களத்தின் ஜோ செனிவரத்ன தோழர் நினைவாக!?” தொடர்ந்து வாசிக்க…)

மே பதினேழு இயக்கத் தோழர்களுக்கு

உங்களது வெல்லும் தமிழீழம் மாநாடு பற்றிய விளம்பரம் பார்த்தேன். பிரமிக்க வைத்தது. இலங்கைத் தமிழ் மக்களுக்காக எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் உங்கள் இயக்கமும் அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களும் இடைவிடாது போராடி வருகிறீர்கள். இலங்கைத் தமிழ் மக்களுக்காக உங்களது கரிசனை எம்மைப் புல்லரிக்கச் செய்கிறது.

(“மே பதினேழு இயக்கத் தோழர்களுக்கு” தொடர்ந்து வாசிக்க…)

போய் வாருங்கள் ஜோ!….

இலங்கையில் தோழர் வரதராஜபெருமாள் தலைமையில் அமைந்த வடகிழக்கு மாகாண அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்தவர் தோழர் ஜோ செனவிரத்ன. இவர் பிறப்பால் சிங்களவர். எண்ணத்தால் ஒரு சர்வதேசியவாதி. இடதுசாரிக் கொள்கைகளில்
நாட்டம் பெற்று தொழிற்சங்க இயக்கத்தில்
தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். பின்னாளில் பத்மநாபா தலைமையிலான  ஈபிஆர்எல்எப் இயக்கத்துடன் இணைந்து
தீவிர அரசியல் செயல்பாடுகளில் களம் கண்டவர். இவர் ஓர் எழுத்தாளரும், பத்திரிகையாளரும்கூட. ஓஷோ குறித்த இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை என்கிறார்கள்.
(“போய் வாருங்கள் ஜோ!….” தொடர்ந்து வாசிக்க…)

ஜோ!

(தோழர் சேகர் – பாஸ்கரன்)

சுடரும் தீப்பந்தமாய் எழுந்து, தன் புரட்சிப் பணியை முடிந்தவரை முன்னெடுத்துப், பல உள்ளங்களில் சிந்தனைச் சுடரேற்றிவிட்டு, காலச் சக்கரத்தின் சுழற்சின் தவிர்க்கமுடியாத இயற்கை விதியோடு இணைந்து நிரந்தர ஓய்வெடுத்துக்கொண்ட அன்புத் தோழன் ஜோவுக்கு இதயம் கனிந்த நன்றியறிதலோடு பிரியாவிடையளிப்போம் தோழர்களே!

(“ஜோ!” தொடர்ந்து வாசிக்க…)

சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்?

(கே. சஞ்சயன்)

உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வி கண்டிருப்பதாக ஒரு பார்வையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் எழுச்சி கண்டிருப்பதான ஒரு கருத்தும் பரவலாகத் தோற்றம் பெற்றிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களுடனான ஒப்பீடுகளின் அடிப்படையிலேயே, இந்தக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அத்தகைய ஒப்பீடு பொருத்தமானதா, என்பது முக்கியமான கேள்வி.
ஏனென்றால், நாடாளுமன்றம், மாகாணசபைத் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தாத பல விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவையாக இருந்தன.

(“சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்?” தொடர்ந்து வாசிக்க…)